Tuesday, October 18, 2011

சஞ்சீவ் பட்டிற்கு, நிபந்தனை ஜாமின் அளித்தது ஆமதாபாத் கோர்ட் .

சஞ்சீவ் பட்டிற்கு, நிபந்தனை ஜாமின் அளித்து, ஆமதாபாத் கோர்ட் நேற்று உத்தரவிட்டது. இதையடுத்து, ஆமதாபாத் சபர்மதி மத்திய சிறையிலிருந்து வெளியே வந்த பட், ""நாட்டில், சட்டத்தின் ஆட்சி நிலவுவதில் மகிழ்ச்சி அடைகிறேன். 
மாநில அரசின் ஆதரவுடன் நடத்தப்பட்ட வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களுக்குக் கிடைத்த வெற்றி இது. நான் சிறையில் இருந்தது, வார இறுதி நாளில் ஓய்வெடுப்பது போன்றது. எனக்கு ஆதரவு அளித்த குஜராத் ஐ.பி.எஸ்., அதிகாரிகள் சங்கம் மற்றும் என் குடும்பத்தினருக்கு நன்றி,'' என்றார்.

0 comments:

Post a Comment