Friday, October 7, 2011

பட்டுக்கோட்டை அருகே பஸ் கவிழ்ந்தது: 53 பயணிகள் படுகாயம்.

பட்டுக்கோட்டையில் இன்று காலை பஸ் பள்ளத்தில் கவிழ்ந்ததில் 53 பயணிகள் படுகாயம் அடைந்தனர்.   தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையில் இருந்து புதுக்கோட்டை நோக்கி தனியார் பஸ் ஒன்று இன்று காலை 10 மணி அளவில் வேகமாக வந்து கொண்டு இருந்தது. பஸ்சில் 60-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். இந்த பஸ் பட்டுக்கோட்டை மகாராஜா சமுத்திரம் காட்டாற்று பாலம் வளைவில் திரும்பியது. அப்போது பஸ் எதிர்பாராதவிதமாக டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்தது. கண்ணிமைக்கும் நேரத்தில் பஸ் பள்ளத்தில் உருண்டு கவிழ்ந்தது.

இதனால் பயணிகள் கூச்சல் போட்டனர்.   சத்தம் கேட்டு அக்கம் பக்கம் உள்ளவர்கள் ஓடி வந்தனர். இந்த விபத்தில் 53 பேர் இடிபாடுகளுக்குள் சிக்கி படுகாயம் அடைந்தனர். அவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு பட்டுக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. படுகாயம் அடைந்தவர்கள் பெயர் விவரம் உடனடியாக தெரியவில்லை. விபத்து குறித்து பட்டுக்கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

0 comments:

Post a Comment