Tuesday, March 29, 2011

63,000 கள்ள கிரடிட் காட்டோடு இலங்கையர் கைது!

அவுஸ்திரேலியா மெல்பேர்ன் நகரில் கடன் அட்டை மோசடியில் சுமார் 56 பேரை பொலிசார் கைதுசெய்துள்ளனர். அவர்களில் இலங்கையர்களும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது. இக் கும்பலானது பாரிய வலை அமைப்பு ஒன்றை அவுஸ்திரேலியாவில் உருவாக்க முனைந்ததாக தெரிவிக்கப்படுகிறது. பிரித்தானியா மற்றும் கனடா ஆகிய நாடுகளில் இருந்து இவர்கள் அவுஸ்திரேலியா சென்றுள்ளதாகக் கூறப்படுகிறது. அவுஸ்திரேலியாவில் எரிபொருள் நிரப்பும் நிலையங்களில் வேலைபார்க்கும் இலங்கையர்களை அணுகி, பெரும் பணத்தைக் கொடுத்து அங்குள்ள கடனட்டை இயந்திரத்தில் தமது இலத்திரனியல் உபகரணங்களைப் பொருத்தியுள்ளனர்....

Sunday, March 27, 2011

பிரம்மாண்டமான இலவசம் வருகிறது உஷார்! - ஆணவம் மிகுந்த ஜெயலலிதாவா, தியாகதீபம் வைகோவா, சூழ்ச்சிக்கார கருணாநிதியா

எந்தக் கட்சியும் எந்தத் தலைவரும் ஒருபோதும் அறிவிக்காத ஒரு பிரம்மாண்டமான இலவசம் வாக்காளர்களான நமக்காகக் காத்துக் கொண்டிருக்கிறது. அதுதான் இலவசக் கதிர்வீச்சு. அதற்கு ஆணவம் மிகுந்த ஜெயலலிதாவா, தியாகதீபம் வைகோவா, சூழ்ச்சிக்கார கருணாநிதியா அப்பாவியான வாக்காளர்களா என்றெல்லாம் பாரபட்சமே கிடையாது. எல்லோரையும் அழித்து விடும். தமிழ்நாட்டை அழிக்க வடக்கே கல்பாக்கத்திலும் தெற்கே கூடன்குளத்திலும் அமைந்துள்ள அணு உலைகளே போதுமானவை. பெரும் விபத்துக்குள்ளான அணு...

ஆட்டுக்கு பிறந்த நாய்க் குட்டி!

சீனாவில் உள்ள பண்ணை ஒன்றில் ஆடு ஒன்று நாய்க் குட்டி ஒன்றை பிரசவித்து உள்ளது. மிருக வைத்திய நிபுணர்கள் கண்களை நம்ப மறுக்கின்றனர். பண்ணை உரிமையாளரோ அதிசயிக்கின்றார். குட்டியின் வாய், மூக்கு, கண்கள், வால் போன்ற உறுப்புக்கள் நாய் ஒன்றுக்கு உரியனவே என்றும் நாய்க் குட்டி ஒன்றைப் போலவே இக்குட்டியின் விளையாட்டுக்கள், குறும்புகள் உள்ளன. ஆனால் ஆடுகளின் உரோமத்தை இக்குட்டி கொண்டு உள்ளது. கடந்த 20 வருடங்களாக ஆடுகளை வளர்த்து வருகின்றார் என்றும் முதல் தடவையாக...

நெற்றிக் கண்ணுடன் இந்தியாவில் பிறந்த அதிசயக் குழந்தை!

இந்தியாவில் நெற்றிக் கண்ணுடன் ஒரு குழந்தை கடந்த வாரம் பிறந்து உள்ளது. இக்குழந்தைக்கு மூக்கு கிடையாது. பிறந்து 24 மணித்தியாலங்களில் இறந்து விட்டது. தாய்க்கு வயது 34. வைத்தியர்கள் சிசேரியன் அறுவைச் சிகிச்சை மேற்கொண்டு இருந்தனர்.  thanks to manithan.com குழந்தையை பார்க்க தாய் அனுமதிக்கப்படவே இல்லை. இது தாய்க்கு மிகுந்த கவலையை கொடுத்து உள்ளது. இத்தாய்க்கு ஏற்கனவே எட்டு வயதில் ஒரு பெண் குழந்தை உண்...

Saturday, March 26, 2011

மதுரை "மாட்டின் தலை" ஒரு சதித்திட்டம்!

மதுரை: மதுரையில் எஸ்.எஸ் காலனியிலுள்ள ஆர்.எஸ்.எஸ்ஸின் அலுவலக வளாகத்தில் மாட்டின் தலையை கண்டெடுத்த சம்பவம் கலவரத்தை உருவாக்குவதற்கான தீவிரவாத சங்க்பரிவாரின் சதித்திட்டம் என சந்தேகிப்பதாக உண்மைக் கண்டறியும் குழு தெரிவித்துள்ளது. இச்சம்பவத்தைக் குறித்து க்ரைம் ப்ராஞ்ச் விசாரணை நடத்த வேண்டுமென நேசனல் கான்ஃபெடரேசன் ஆஃப் ஹியூமன் ரைட்ஸ் ஆர்கனைசேசன் (என்.சி.ஹெச்.ஆர்.ஓ) வலியுறுத்தியுள்ளது. இம்மாதம் ஒன்றாம்தேதி ப்ளாஸ்டிக் பையில் பொதியப்பட்ட நிலையில் மாட்டின்...

பிரிட்டனில் 7 வயது சிறுவனுக்கு கைத்துப்பாக்கி வைத்து கொள்வதற்கான லைசென்ஸ்

லண்டன் : பிரிட்டனில் 7 வயது சிறுவனுக்கு கைத்துப்பாக்கி வைத்து கொள்வதற்கான லைசென்ஸ் வழங்கப்பட்டுள்ளது பெரும் சர்ச்சையை ‌ஏற்படுத்தி உள்ளது. 2008 முதல் 2010ம் ஆண்டு வரை 10 வயதிற்கு உட்பட்ட 13 குழந்தைகளுக்கு இது போன்ற லைசென்ஸ் வழங்கப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. பிரிட்டனில் உள்ள 51 அமைப்புக்கள் அளித்த தகவலின் பேரில் இந்த தகவல் சேகரிக்கப்பட்டுள்ளது. இதுவரை 18 வயதிற்கு உட்பட்ட 7,071 பேருக்கு இது போன்ற லைசென்ஸ் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. புறாக்களை...

உலகின் உயரமான கட்டத்தில் ஏறி சாத‌னை படைக்க வாலிபருக்கு அனுமதி

துபாய்: பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த பிரபல ஸ்பைடர்மேன் என அழைக்கப்படும் மலையேற்ற வீரர் அலையன் ராபர்ட்டிற்கு உலகின் மிகவும் உயரமான கட்டடமான துபாயில் உள்ள பூர்ஜ்கலிபா கட்டடத்தில் ஏற நிபந்தனையுடன் கூடிய அனுமதி அளித்துள்ளது. பிரான்ஸ் நாட்டின் புகழ்பெற்ற மலையேற்ற வீரர் அலையன் ராபர்ட். இவர் அந்நாட்டின் ஸ்பைட்மேன் எனஅழைக்கப்படுகிறது. இவர் அந்நாட்டின் ஈபிள் கோபுரம், கோலாலம்பூரில் உள்ள இரட்‌டை கோபுரம், ஆஸ்திரேலியாவில் உள்ள சிட்னியில் உள்ள கட்டடம் ஆகிய மிகவும்...

அல்சரா...? இதை பாலோ பண்ணுங்க!

வயசுல பெரியவங்களா இருப்பாங்க.... சின்னக் குழந்தைங்க மாதிரி கைல எப்பவும் பிஸ்கட் மாதிரி ஏதாவது வச்சு, சாப்பிட்டுக்கிட்டே இருப்பாங்க. கேட்டா அல்சர்னு சொல்வாங்க. அல்சர் வந்தவங்க வயிறை காலியா விடக்கூடாது. அடிக்கடி கொஞ்சமா எதையாவது சாப்பிட்டுக்கிட்டே இருக்கணும்.அதென்ன அல்சர்?நம்ம வயிற்றுக்குள்ள, வயிற்றைப் பாதுகாக்க வழவழப்பான திரை அமைப்பு இருக்கு. ஜீரண நீர் சுரந்து, உணவோடு சேர்ந்து செரிமானமாகும். சாப்பாட்டுல காரமோ, புளிப்போ, உப்போ அதிகமானா, அது அந்தத்திரை...

பாகிஸ்தான் முன்னாள் பிரதமரை படுகொலை செய்த முக்கிய குற்றவாளி கைது

இஸ்லாமாபாத் : பாகிஸ்தான் முன்னாள் பிரதமரை படுகொலை செய்த முக்கிய குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு உள்துறை அமைச்சர் ரஹ்மான் மாலிக் தெரிவித்துள்ளார். பாகிஸ்தானின் ஆளும் பாகிஸ்தான் மக்கள் கட்சியின் தலைவரும், முன்னாள் பிரதமருமான பெனசீர்பூட்டோ கடந்த 2007-ம் ஆண்டு டிசம்பர் 28-ம தேதியன்று ராவல்பிண்டியில் தேர்தல் பிரசாரம் செய்து கொண்டிருந்த போது மர்ம நபர்களால் சுட்டு்க்கொல்லப்பட்டார். இந்த சம்பவத்தில் 25-க்கும் மேற்பட்டோர் பலியாயினர். மேலும்...

ஜப்பானில் அணுஉலை கதிர்வீச்சு அதிகரிப்பு

டோக்கியோ : ஜப்பானில் கடல் நகரமான ஃபுகுஷிமாவில் பாதிப்புக்கு உள்ளான அணுஉலையில் கதிர்வீச்சு கடந்த வாரத்தை விட 8 மடங்கு அதிகரித்துள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். கதிர்வீச்சால் பாதிப்பு ஏதும் ஏற்பாடு என அறிவிக்கப்பட்ட 8 நாட்களுக்கு பின் மீண்டும் கதிர்வீச்சு கசிவு ஏற்பட்டுள்ளது அப்பகுதி மக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தி உள்ளது. இந்த அணுஉலைகளை குளிர்விக்க கடல்நீர் பயன்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளthanks to thaal...

திமுக,அதிமுகவின் இலவச அறிவிப்புகளை தடை செய்யக் கோரி டிராபிக் ராமசாமி வழக்கு

சென்னை: திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகளும் சரமாரியாக அறிவித்துள்ள இலவச திட்டங்களைத் தடை செய்யக் கோரி சமூக நல சேவகர் டிராபிக் ராமசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். திமுகவும், அதிமுகவும் தேர்தல் அறிக்கைகளை வெளியிட்டுள்ளன. அதில் இலவசமாக மிக்சி தருகிறோம், கிரைண்டர் தருகிறோம், ஆடு மாடு தருகிறோம், தண்ணீர் தருகிறோம், இலவச பஸ் பாஸ் தருகிறோம் என்று சரமாரியாக இலவச திட்டங்களை அறிவித்துள்ளனர். தமிழகத்தின் இந்த அரசியல் இலவச அறிவிப்புகள்...

Friday, March 25, 2011

கோடை காலத்தில் எதைத் தவிர்க்கலாம்?

கோடை காலத்தில் எதை உண்ணலாம், எதைத் தவிர்க்கலாம் என்பதை அறிந்து கொள்வது மிகவும் அவசியம்.* கோடை காலத்தில் உடலின் தண்ணீர் அளவை சரியான அளவில் காத்துக் கொள்வது மிகவும் அவசியம் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. வெறும் தண்ணீர் இந்த பணியைச் செய்து விட முடியாது. அதற்கு உதவியாக முதலில் வருவது காய்கறிகள்.* காய்கறிகளில் ஏராளமான நீர்ச்சத்து உண்டு. முடிந்த அளவு காய்கறிகளை பச்சையாகவோ, கொஞ்சமாய் வேக வைத்தோ உண்பது மிகவும் சிறந்தது. அதிகமாய் வேகவைத்தோ, பொரித்தோ உண்பதில்...

ஒரிசா இனி ஒடிசாவாக பெயர் மாற்றம்: பார்லிமென்ட் ஒப்புதல்

புதுடில்லி: ஒரிசா மாநிலத்தை ஒடிசா என பெயர் மாற்றம் செய்வதற்கும், ஒரியா மொழி இனி ஒடிசா என ஆட்சி‌, மற்றும் அலுவலக மொழியாக மாற்ற பார்லிமென்ட் ஒப்புதல் வழங்கியுள்ளது. ஒரிசா மாநிலத்தை ஒடிசா என பெயர் மாற்றம் செய்யக்கோரி பார்லிமென்ட் அரசிலமைப்பு சட்டம் 113 பிரிவின் கீழ் மாசோதா தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு அம்மாநிலத்தில் ஆளும் பிஜூ ஜனதா தள கட்சியின் எம்.பி.க்கள் பார்லிமென்ட் இரு சபைகளிலும் வலியுறுத்தி வந்தனர் . லோக்சபாவிலும் ஏற்கனவே இதற்கு ஒப்புதல் தரப்பட்டுவிட்டது....

தமிழக சட்டசபை தேர்தல் மனுதாக்கல் நாளையுடன் முடிகிறது

சென்னை : தமிழக சட்டசபைக்கு அடுத்த மாதம் (ஏப்ரல்) 13-ந் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த சனிக்கிழமை (19-ந் தேதி) தொடங்கியது. தி.மு.க. தலைவர் கருணாநிதி, அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா, தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் நேற்று மனு தாக்கல் செய்தனர். அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் 160 வேட்பாளர்கள் நேற்று குறிப்பிட்ட நேரத்தில் மனு செய்தனர். 234 தொகுதிகளிலும் நேற்று வரை 1052 பேர் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தனர். இன்றும்...

உலகக் கிண்ணக் கிரிக்கெட் போட்டிகளில் தாக்குதல் மேற்கொள்ளும் முயற்சி : இன்டபோல் முறியடிப்பு !

தற்போது நடைபெற்றுவரும் சர்வதேச உலகக் கிண்ணக் கிரிக்கெட் போட்டிகளின் போது தீவிரவாத தாக்குதல்களை மேற்கொள்ளும் முயற்சிகள் இடம்பெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளதென இன்டபோல் தெரிவித்துள்ளது. பாகிஸ்தான், இலங்கை மற்றும் மாலைத்தீவு ஆகிய பகுதிகளில் தீவிரவாதிகள் தாக்குதல் மேற்கொள்ளயிருந்த இடங்களை கடந்த வாரம் தாம் அடையாளம் கண்டதாக பிரான்ஸை தலைமையகமாக கொண்டு இயங்கும் சர்வதேச பொலிஸ் முகவர் நிலையத்தின் பிரதான அதிகாரியான ரோனால்ட் கே நோபில் தெரிவித்துள்ளார். பாகிஸ்தான்...

Thursday, March 24, 2011

‘ஆமாம் சாமி’ சபையா?

இரண்டாவது உலகப் போருக்குப் பிறகு மீண்டும் உலக நாடுகளுக்கு இடையே யுத்தம் எதுவும் ஏற்பட்டுவிடாமல் தடுக்கவும், நல்லுறவையும் நல்லிணக்கத்தையும் ஏற்படுத்துவதற்காகவும் உருவாக்கப்பட்டதுதான் ஐக்கிய நாடுகள் சபை. இந்த அமைப்பின் அடிப்படை நோக்கம் உள்நாட்டுப் பிரச்னைகளில் தலையிடுவது அல்ல. உலக நாடுகளுக்கு இடையே ஏற்படும் பிரச்னைகளைச் சமரசமாகத் தீர்த்துவைத்து அதன் மூலம் போர் மூளாமல் தடுப்பதும் அப்பாவிப் பொதுமக்கள் பாதிக்கப்படாமல் காப்பதும்தான்.கடந்த இருபது ஆண்டுகளாக, ஐ.நா. சபையின் பல முடிவுகள் அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் போன்ற வல்லரசு நாடுகளின் ஆக்கிரமிப்புகளுக்கு...

Wednesday, March 23, 2011

SDPI மேலும் இரண்டு தொகுதிகளில் வேட்பாளர் அறிவிப்பு.

மார்ச் 23,: வருகின்ற சட்டமன்ற தேர்தலில் SDPI எந்த கட்சியுடன் கூட்டணி வைக்காமல் தனித்து போட்டியிட வேண்டும் என் ஏற்கனவே அறிவித்தது. அதன் படி முதல் கட்டமாக ஆறு தொகுதிகள். கடையநல்லூர், இராமநாதபுரம், பூம்புகார், நாகை தொண்ட முத்தூர், துறைமுகம், காரைக்கால் மாவட்டம் நிரவி திருப்பட்டின ஆகிய தொகுதிகள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த கட்டமாக நேற்று நடந்த செயற்குழுவில் கூடி முடிவெடுக்கப்பட்டது. அதன் படி பாளையங்கோட்டை மற்றும் திருப்பூர் தொகுதியிலும் போட்டியிட...

ஜப்பானில் மீண்டும் நில நடுக்கம்

ஜப்பானில் இன்று மீண்டும் நில நடுக்கம் ஏற்பட்டது.  ஜப்பானில் கடந்த 11 ஆம் தேதியன்று ஏற்பட்ட நிலநடுக்கத்தின் பாதிப்பிலிருந்தே அந்நாடு இன்னும்மீளாமல் உள்ளது.  இந்நிலையில் நேற்றும், அதனைத் தொடர்ந்து இன்றும் அங்கு நிலநடுக்கம் ஏற்பட்டது.  புகுஷிமாவில் உள்ள அணுமின் நிலையத்தில் வெடித்த அணு உலைகளை குளிர்விக்கும் பணி நடந்து வரும் நிலையில்,அப்பகுதியில் இன்று மீண்டும் நில நடுக்கம் ஏற்பட்டது. இந்நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6 புள்ளிகளாக பதிவானதாக...

ஆண்டர்சனை இந்தியாவுக்கு நாடு கடத்தி கொண்டு வர சிபிஐ-க்கு நீதிமன்றம் அனுமதி

போபால் விஷ வாயு கசிவு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட யூனியன் கார்பைடு கழக நிறுவன தலைவர் வாரன் ஆண்டர்சனை, இந்தியாவுக்கு நாடு கடத்திக் கொண்டு வர சிபிஐ-க்கு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. 1984 ஆம் ஆண்டில் போபாலில் ஏற்பட்ட விஷ வாயு கசிவில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்த நிலையில், அதற்கு காரணமான யூனியன் கார்பைடு நிறுவனத்தின் தலைவர் ஆண்டர்சன் அமெரிக்காவுக்கு தப்பி சென்றுவிட்டார்.  இந்நிலையில் இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சிலருக்கு கடந்த ஆண்டு நீதிமன்றம் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.  அதே சமயம் ஆண்டர்சன் அமெரிக்கா தப்பி சென்று விட்டதால்...

அரசியல் அதிகாரத்தை நோக்கி நம் சமூகம் – ஒரு பார்வை

தமிழகத்தின் அரசியல் சூடு பிடுத்து விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. யார் எப்பொழுது என்ன முடிவுகளை அறிவிப்பார்கள் என்று தெரியாமல் ஒரு புறம் அரசியல் கட்சிகளும் மறுபுறம் அவர்களது ஆதரவாளர்களும் எப்ரல் 13 யை நோக்கி அசுர வேகத்தில் பயனிக்கின்றனர். இதற்கு முஸ்லிம் கட்சிகள் ஒன்றும் விதிவிளக்கல்ல இதனை பார்க்கும் பொழுது  அனைத்து தரப்பிலும் ஒரு அரசியல் சுனாமி அடித்திவிட்டு செல்லும் என்றே தோன்றுகிறது. இதில் ஆளும் கட்சியும், எதிர்கட்சியும் தனது நிலைப்பாட்டையும்...

முஸ்லிம் காவல்துறை அதிகாரி எரித்து கொலை!

மார்ச் 23, ஜெய்பூர்: ராஜஸ்தானிலுள்ள சவை மதோபூர் மாவட்டத்தில் முஹம்மத் என்ற முஸ்லிம் காவல் அதிகாரியை பாரதீய ஜனதா கலவரக்காரர்கள் உயிரோடு தீவைத்து கொளுத்தி கொடூரமாக கொலைச் செய்தனர். இதில் அதிர்ச்சிதரும் தகவல் என்னவெனில் அந்த முஸ்லிம் அதிகாரியை கலவரக் கூட்டம் தாக்கும் போது உடன்வந்த மற்ற காவலர்கள் நம்மைவிட்டால் போதும் என்று ஓட்டம் பிடித்துள்ளனர் என்பதுதான். சவை மதோபூர் மக்கள் இந்த சம்பவம் குறித்து தெரிவிக்கையில் பெண் கொலைக்கு கடந்த இரண்டு வாரங்களாக...