அவுஸ்திரேலியா மெல்பேர்ன் நகரில் கடன் அட்டை மோசடியில் சுமார் 56 பேரை பொலிசார் கைதுசெய்துள்ளனர். அவர்களில் இலங்கையர்களும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது. இக் கும்பலானது பாரிய வலை அமைப்பு ஒன்றை அவுஸ்திரேலியாவில் உருவாக்க முனைந்ததாக தெரிவிக்கப்படுகிறது. பிரித்தானியா மற்றும் கனடா ஆகிய நாடுகளில் இருந்து இவர்கள் அவுஸ்திரேலியா சென்றுள்ளதாகக் கூறப்படுகிறது. அவுஸ்திரேலியாவில் எரிபொருள் நிரப்பும் நிலையங்களில் வேலைபார்க்கும் இலங்கையர்களை அணுகி, பெரும் பணத்தைக் கொடுத்து அங்குள்ள கடனட்டை இயந்திரத்தில் தமது இலத்திரனியல் உபகரணங்களைப் பொருத்தியுள்ளனர்....