Monday, June 27, 2011

செல்போன் பேட்டரி வெடித்து வாலிபர் பலி!


JUNE 27, சித்தூர் அருகே செல்போன் பேட்டரி வெடித்ததில் வாலிபர் பலியானார்.  சித்தூர் மாவட்டம் கே.வி.பள்ளி மண்டலத்தை சேர்ந்தவர் சிவாரெட்டி (23).

இவர் தனியார் கம்பெனியில் வேலை செய்து வந்தார்.  நேற்று மாலை தனது வீட்டில் செல்போனுக்கு சார்ஜர் செய்து கொண்டிருந்தார். பின்னர் பேட்டரியை கழற்றியபோது எதிர்பாராமல் வெடித்தது.

இதில் படுகாயமடைந்த அவரை அக்கம் பக்க த்தினர் மீட்டு மதனப்பள்ளி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.  ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி சிறிதுநேரத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து மதனப்பள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

0 comments:

Post a Comment