Saturday, June 25, 2011

நெல்லையில் இந்த ஆண்டு சுதந்திர தின அணிவகுப்பு - பாப்புலர் ஃப்ரண்ட்


பாப்புலர் ப்ரண்ட் ஆஃப்இந்தியாவின் மாநில செயற்குழுகூட்டம் ஜூன் 19, 20 ஆகியதேதிகளில் குற்றாலத்தில்நடைபெற்றதுமாநிலத் தலைவர்.எஸ்இஸ்மாயில் அவர்கள்தலைமையில் நடைபெற்றசெயற்குழு கூட்டத்தில் ஆகஸ்ட்15, 2011 சுதந்திர தினத்தை முன்னிட்டுபாப்புலர் ஃப்ரண்ட்டின் சுதந்திர தினஅணிவகுப்பினைதிருநெல்வேலியில் நடத்துவதுஎன்பது உட்பட பல தீர்மானங்கள்நிறைவேற்றப்பட்டன.

தீர்மானங்கள்:
1. பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா கடந்த 3 வருடங்களாக ஆகஸ்ட் 15 அன்று சுதந்திரதின கொண்டாட்டங்களையும்சுதந்திர தின அணிவகுப்பையும் (ஊணூஞுஞுஞீணிட்கச்ணூச்ஞீஞுநடத்தி வருகின்றதுஇந்த வருடம் ஆகஸ்ட்15, 2011 அன்று சுதந்திரஅணிவகுப்பை நெல்லையில் நடத்துவது எனவும்சுதந்திர தின கொண்டாட்டங்களைநெல்லை உட்பட தமிழகம் முழுவதும் சிறப்பாக கொண்டாடுவது எனவும்தீர்மானிக்கப்பட்டது.

2. முஸ்லிம்களின் உரிமையான இடஒதுக்கீடு முஸ்லிம்களின் விகிதாச்சாரத்திற்குஏற்ப வழங்க வேண்டுமென பாப்புலர் ஃப்ரண்ட் பல கருத்தரங்குகள் மற்றும்போராட்டங்களை நடத்தி அரசுக்கு வேண்டுகோள் விடுத்து வருகின்றதுஅதன்தொடர்ச்சியாக தமிழகத்தில் ஆட்சிப் பொறுப்பேற்றிருக்கும் முதலமைச்சர்ஜெயலலிதா தலைமையிலான அரசிடம் தமிழக முஸ்லிம்களுக்கு 5 சதவீதஇடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் எனவும்முதலமைச்சர் அவர்களை நேரில்சந்தித்து இக்கோரிக்கையை முன்வைப்பது எனவும் தீர்மானிக்கப்பட்டது.
3. கல்வி இன்று வியாபாரமயமாகிவிட்டதுஅனைவரும் அறிந்த உண்மை இது.இன்ஜினியரிங் கல்லூரிகளில் மாணவர்களை சேர்ப்பதும்எல்.கே.ஜியில்குழந்தைகளை சேர்ப்பதும் ஒன்றாகி விட்டதுபள்ளிக்கட்டணங்களைமுறைப்படுத்துவதற்கு கடந்த கால அரசு நியமித்த கோவிந்தராஜன் குழுபள்ளிக்கட்டணங்களை முறைப்படுத்தியது.

அதில் குளறுபடிகள் இருப்பதாக புகார் வந்ததின் அடிப்படைடியில் மீண்டும் நீதிபதிரவிராஜ பாண்டியன் குழு அமைக்கப்பட்டு கட்டணங்கள் மறு நிர்ணயம்செய்யப்பட்டதுஆனால்மறு நிர்ணயம் செய்யப்பட்ட கட்டண விபரம் தொடர்பாகஅரசும்தனியார் பள்ளிகளும் எந்த விபரத்தையும் வெளியிடாமல் மௌனம் காத்துவருகின்றனர்இந்நிலையில்  பள்ளிகளில் அதிக கட்டணம் வசூலிப்பதும்,மாணவர்களை துன்புறுத்துவதும் தினசரி செய்தியாகி விட்டதுஇது விஷயத்தில்அரசு உடனடியாக தலையிட்டு பள்ளிக்கட்டணத்தை  சீர்செய்து அதனை பின்பற்றாதபள்ளிகளின் மீது கடும் நடவடிக்கை எடுத்து மாணவர் நலன் காக்க வேண்டும் எனஇச்செயற்குழு கேட்டுக் கொள்கின்றது.

4. கோவையில் கடந்த 2006 ம் ஆண்டு அப்பாவி முஸ்லிம் இளைஞர்கள் மீதுபோடப்பட்ட வெடிகுண்டு பறிமுதல் வழக்குஉளவுத்துறை .சிரத்தினசபாபதியின்நாடகம் என்பதும்அது முற்றிலும் அப்பட்டமான பொய் வழக்கு என்றும் அதில் உள்ளஆவணங்கள் காவல்துறையினராலேயே போலியாக தயாரிக்கப்பட்டவை என்றும்சி.பி.சி..டி.யின் சிறப்பு புலனாய்வுக் குழு கோவை ஏழாவது நீதித்துறை நடுவர்மன்றத்தில் கடந்த 2007ம் ஆண்டு இறுதி அறிக்கை தாக்கல் செய்தது.

சிறப்புப் புலனாய்வு குழுவால் இறுதி அறிக்கை சமர்ப்பிக்கப்பட்ட பிறகு அந்தஅறிக்கையின் அடிப்படையில் .சிரத்தினசபாபதி மற்றும் உடந்தையாக  இருந்தகாவல்துறை அதிகாரிகள் மீது முந்தைய தி.மு.அரசு கிரிமினல் வழக்கு பதிவுசெய்து அவர்கள் மீது நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும்மேலும் அவர்களுக்குதண்டனை பெற்று தந்திருக்க வேண்டும்ஆனால்நடவடிக்கைக்கு பதிலாக.டி.எஸ்.பிஅதன் பிறகு கடந்த மாதம் எஸ்.பிஎன பதவி உயர்வுக்கு மேல் பதவிஉயர்வை கிரிமினல் குற்றம் சாட்டப்பட்ட .சிரத்தின சபாபதிக்கு தமிழக அரசுவழங்கியது நடுநிலையாளர்கள் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியதுமேலும்,.சிரத்தின சபாபதி கடந்த  தி.மு.அரசால் தமிழ்நாடு அரசு பணியாளர்தேர்வாணைய உறுப்பினராகவும் நியமனம் செய்யப்பட்டார்.
அநீதி இழைக்கப்பட்டு 5 வருடங்களை கடந்தும் பொய்வழக்கால் பாதிக்கப்பட்டஇளைஞர்களுக்கு உரிய நிவாரணம் வழங்கப்படவில்லைபொய் வழக்கு புனைந்தஅதிகாரிகள் மீது எந்த விதமான நடவடிக்கையும் இதுநாள் வரை எடுக்கப்படவில்லை.எனவேதமிழகத்தில் தற்போது ஆட்சிப் பொறுப்பேற்றிருக்கும் .தி.மு..  அரசுஉடனடியாக இது விஷயத்தில் தலையிட்டு .சிரத்தின சபாபதிக்கு வழங்கப்பட்டஇரண்டு பதவி உயர்வுகளையும் ரத்து செய்ய வேண்டுமெனவும்டி.என்.பி.எஸ்.சி,உறுப்பினர் பதவியையும் உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என இச்செயற்குழுகேட்டுக்கொள்கிறது.

மேலும்எஸ்..டிசமர்பித்துள்ள இறுதி அறிக்கையின் அடிப்படையில் .சி.ரத்தினசபாபதி மற்றும் அவருக்கு துணை புரிந்த அதிகாரிகள் மீது கிரிமினல் வழக்குபதிவு செய்து நடவடிக்கை எடுக்குமாறும்அவர்களுக்கெதிரான கிரிமினல் வழக்கைநடத்துவதற்காக சிறப்பு அரசு வழக்கறிஞரை நியமித்து அரசே அவ்வழக்கினை நடத்திஅவர்களுக்கு  தண்டனை பெற்றுத்தரவேண்டும் என்றும்பாதிக்கப்பட்டஇளைஞர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டுமென்றும் தமிழக அரசைஇச்செயற்குழு கேட்டுக் கொள்கிறது.

0 comments:

Post a Comment