Sunday, June 12, 2011

கோடீஸ்வரர்களின் உண்ணாவிரதம் ஊழலை ஒழிக்காது!!


JUNE 12, ஊழல் போன்ற பொதுப் பிரச்சினைகளை, சந்தேகத்திர்குரிய, சர்ச்சைக்குரிய நபர்கள் மற்றும் ஹிந்துத்துவா வகுப்புவாத ஃபாசிச கும்பல்கள் அவர்களின் மறைமுக செயல்திட்டத்தின் அடிப்படையில் நடத்தப்படுவது குறித்து விழிப்புணர்வோடு இருக்கவேண்டும்.

இதுபோன்ற போராட்டங்களின் மூலம் ஹிந்துத்துவா சக்திகள் நாட்டை கபளிகரம் செய்வதை குறித்து பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா கோழிக்கோட்டில் நடைபெற்ற தேசிய செயற்குழுக்கூட்டத்தின் வாயிலாக பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

சந்தேகத்திற்குரிய வகையில் சொத்துக்களை பலமடங்கு சேகரித்து குவித்து வைத்துள்ள பாபா ராம்தேவ் ஊழலுக்கு எதிரான பேராளியாக தன்னைக்காட்டிக் கொள்வது பரிதாபத்திற்குரியதும், ஆபத்தானதும் ஆகும்.

காந்தியவாதி அன்னா ஹசாரேயின் தலைமையில் நடைபெற்ற வெற்றிகரமான போராட்டத்தை தொடர்ந்து யோகா வியாபாரியின் திடீர் வருகை ஹிந்துத்துவா ஆர்எஸ்எஸ், பாஜகவின் அரசியல் திட்டத்தின் ஒரு பகுதிதான்.

எனவே ஊழல் எதிர்ப்பு இயக்கத்தின் நலன்கருதி அனைத்து உணர்வுள்ள, மனித உரிமை ஆர்வலர்களும், சமூக ஆர்வலர்களும், பாபா ராம்தேவ் தலைமையிலான கேலிக்கூத்தான சத்தியாக்கிரகங்களை ஆதரவளிப்பதை விட்டும் விலகியிருக்க வேண்டும்.

ஆரம்பகட்டத்தில் ராம்தேவிடம் மத்திய அரசாங்கம் கருணைகாட்டியதும் பின்னர் வலுக்கட்டாயமாக நடுநிசியில் ராம்லீலா மைதானத்தை விட்டு வெளியேற்றியதும் தேவையற்றது.

மிக உயர் மட்டத்தில் உள்ள ஒரு பணக்கார கூட்டத்தால் ஊழலை பிரித்து பார்க்கவும், தீர்க்கவும் முடியாது. அதற்கு பதிலாக மைய நீரோட்ட அரசியலை தூய்மைப்படுத்த காங்கிரஸ், பாஜக, சிபிஐஎம் போன்ற கட்சிகளுக்கு ஆதரவளிக்காமல் மத்தியில் மாற்றம் கொண்டு வரவேண்டும் என்பதையே இப்பிரச்சினைக்கு இறுதித்தீர்வாக இருக்கும் என்பதை இக்கூட்டம் வலியுறுத்துகிறது

0 comments:

Post a Comment