Sunday, June 12, 2011

உண்ணாவிரதத்தை முடித்துக்கொள்ளுங்கள்: RSS வேண்டுகோள்!


JUNE 12, ஊழல், கறுப்புப் பணத்துக்கு எதிராக ஹரித்து வாரில் உண்ணாவிரதம் இருந்து வந்த யோகா குரு பாபா ராம்தேவின் உடல்நிலை மோசமானது. அவரது உடல் நிலையை பரிசோதித்த டாக்டர்கள், ராம்தேவ் இதயத்துடிப்பு குறைந்து வருவதாக எச்சரித்தனர்.

இந்நிலையில் ஊழலுக்கு எதிரான உண்ணாவிரதப் போராட்டத்தை உடல் நிலை கருதி பாபா ராம்தேவ் கைவிட வேண்டும் என்று  பயங்கரவாத ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார். உண்ணாவிரதத்தை விரைவில் முடித்துக் கொள்ளுமாறு ராம்தேவை கேட்டுக்கொள்கிறேன், தேச சீர்திருத்த நடவடிக்கையில் உங்களது வழிகாட்டுதல்கள் இந்த நாட்டுக்கு அவசியம் தேவை என்று மோகன் பகவத் கூறினார்.

சிந்திக்கவும் : ஆர்.எஸ்.எஸ். ஹிந்த்துதுவா பயங்கரவாத இயக்கத்தின் கைத்தடிதான் இந்த ராம்தேவ் சாமியார். இவரை வைத்து உண்ணாவிரத நாடகம் ஆடி, "எகிப்த் போல் ஒரு மக்கள் புரட்சியை உண்டாக்கி" நாட்டை கைப்பற்றலாம் என்று ஹிந்துத்துவா சதி திட்டம் தீட்டியது அது பலிக்கவில்லை.

ஆர்.எஸ்.எஸ். பயங்கரவாத இயக்கம் இந்த உண்ணாவிரத நாடகத்தை நடத்தி தொடர் குண்டுவெடிப்பு வழக்குகளில் இருந்து தங்களை பாதுகாத்து கொள்ளலாம் என்று சதி ஆலோசனை செய்தன மற்றபடி இதில் தேசபக்தியும் இல்லை ஒரு வெங்காயமும் இல்லை

0 comments:

Post a Comment