Saturday, September 29, 2012

இருதய சிகிச்சைக்காக உதவி நாடி…(வேண்டுகோள் காணொளி)

   இதயம் என்றொரு பதமெடுத்து உணர்வுகளை காட்டவில்லையென்றால் இரக்கமற்றவன் என்று பின்னுக்குத் தள்ளப்படும் மனிதம், அதே இதயத்தை கருவாகக் கொண்டு காவியம் படைக்கிறான், கவிதை புனைகிறான், காதல், கோபம் கொள்கிறான, அது மட்டுமா மன்னிக்கவும் செய்கிறான். இங்கே, உதவி நாடி வேண்டுகோள் வைத்திருக்கும் நபரின் தற்போதைய உடல் ஆரோக்கியமும் அவரின் உருக்கமான வேண்டுகோளும் வாசகர்கள் முன்னால் வைக்க வேண்டிக் கொண்டதனால் இங்கே பதிகிறோம். படைத்தவனின் திருப்...

உச்சநீதிமன்ற தீர்ப்பு:காவல்துறையை மதசார்பற்றதாக மாற்றுவதற்கான அழைப்பு – இ.எம்.அப்துற்றஹ்மான்!

29 Sep 2012 புதுடெல்லி:சிறுபான்மை சமுதாயத்தைச் சார்ந்தவர்கள் என்பதால் தீவிரவாத முத்திரைக் குத்தி சிறையில் அடைக்கும் நிரபராதிகள் விவகாரத்தில் உச்சநீதிமன்றம் வெளியிட்ட கருத்துக்களை வரவேற்பதாக பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய தலைவர் இ.எம்.அப்துற்றஹ்மான் கூறியுள்ளார்.1994-ஆம் ஆண்டு அஹ்மதாபாத்தில் ஜகன்னாதபூரி யாத்ராவின் போது வகுப்புக் கலவரத்தை தூண்ட சதித்திட்டம் தீட்டியதாக குற்றம் சாட்டப்பட்டு தடா சட்டத்தில் கைது செய்யப்பட்ட 11 பேரை விடுதலைச்...

இறைத்தூதரை அவமதிக்கும் திரைப்படத்தின் இயக்குநர் கைது!

29 Sep 2012 லாஸ் ஏஞ்சல்ஸ்:இஸ்லாத்தின் இறைத்தூதரை இழிவுப்படுத்தும் விதமாக திரைப்படத்தை இயக்கி தயாரித்த நகவுலா பாசிலி நகவுலா என்பவனை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். வங்கி மோசடி வழக்கில் தண்டிக்கப்பட்ட நகவுலா, நன்னடத்தை விதிகளை பேணவில்லை என்ற காரணத்தால் கலிஃபோர்னியா போலீஸ் அவனை கைது செய்துள்ளது.கடந்த வியாழக்கிழமை லாஸ் ஏஞ்சல்ஸ் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நகவுலாவுக்கு நீதிமன்றம் ஜாமீன் மறுத்ததால் சிறையில் அடைக்கப்பட்டான். ஐந்து ஆண்டுகாலம்...

சொஹ்ரபுத்தீன் ஷேக் கொலை வழக்கு: ஐ.பி.எஸ் அதிகாரிக்கு ஜாமீன் மறுப்பு!

29 Sep 2012 அஹ்மதாபாத்:சொஹ்ரபுத்தீன் ஷேக் போலி என்கவுண்டர் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியான ஐ.பி.எஸ் அதிகாரி அபய் சுதாசமாவுக்கு ஜாமீன் மறுக்கப்பட்டுள்ளது.சொஹ்ரபுத்தீன் ஷேக் மற்றும் அவரது மனைவி கெளஸர்பீயை அநியாயமாக போலி என்கவுண்டரில் படுகொலைச் செய்த வழக்கில் முக்கிய குற்றவாளி ஐ.பி.எஸ் அதிகாரி அபய் சுதாசமா ஜாமீன் கோரி மனு அளித்திருந்தார். இம்மனு மீதான விசாரணையில் நீதிபதி அபிலாஷா குமாரி அவருக்கு ஜாமீன் வழங்க மறுத்து மனுவை தள்ளுபடிச் செய்தார்.அவர்...

ஸாதிக் ஜமால் போலி என்கவுண்டர்: வன்ஸாரா, பாண்டே மீது சி.பி.ஐ குற்றப்பத்திரிகை!

29 Sep 2012 புதுடெல்லி:ஸாதிக் ஜமால் போலி என்கவுண்டர் கொலை வழக்கு தொடர்பாக முன்னாள் குஜராத் உயர் போலீஸ் அதிகாரிகளான டி.ஜி.வன்ஸாரா, பி.சி.பாண்டே மீது சி.பி.ஐ நாளை குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்யும்.சொஹ்ரபுத்தீன் ஷேக், துளசிராம் பிரஜாபதி போலி என்கவுண்டர் கொலைகளைப் போலவே ஸாதிக் ஜமால் கொலையும் போலி என்கவுண்டர் என்பதை சி.பி.ஐ கண்டுபிடித்துள்ளது. ஜமாலின் போலி என்கவுண்டர் கொலைக்கு உத்தரவிட்டது குஜராத் க்ரைம் ப்ராஞ்சில் உயர் போலீஸ் அதிகாரியான வன்ஸாரா மற்றும்...

அரச பயங்கரவாதம் - சகோ Z.முஹமது தம்பி

கைது செய்யப்பட்ட அப்பாவி இளைஞர்களை விடுவிக்க கோரி சட்டப்படி பிணையில் விடு ! அப்பாவிகளை விடுதலை செய்!! என்ற முழக்கத்துடன் ஆகஸ்ட் 15 முதல் செப்டம்பர் 15 வரை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா தேசிய அளவில் பிரச்சாரம் செய்து வருகிறது.அதன் ஒரு பகுதியாக திருச்சியில் நடைபெற்ற கருத்தரங்கில் நமதூர் சகோ Z.முஹமது தம்பி அவர்கள் அரச பயங்கரவாதம் என்ற தலைப்பில் ஆற்றிய உரை இதோ ஒலி வடிவில் ...

கியூ பிராஞ்ச் போலிசை கண்டித்து INTJவின் கண்டன போஸ்டர்

இந்திய தவ்ஹீத் ஜமாத்தின் திருப்பூர் கிளையின்   சார்பில் நமதூர் சகோதரர் தமீம் அன்சாரியின் மீது புனையப்பட்டுள்ள போய் வழக்கினை கண்டித்தும் கியூ பிராஞ்ச்சில் ஊடுருவியுள்ள (கருப்பு)காவி  ஆடுகளை களையெடுக்க  கோரி திருப்பூர் நகர INTJ சார்பில் சுவரொட்டிகள் நகரெங்கும்  ஒட்டப்பட்டுள்ளது . தகவல்: அதிரை எக்ஸ்பிரஸ...

Friday, September 28, 2012

இந்த வார ஜும்ஆ பயான்-ஹைதர் அலி ஆலிம்- 28.09.2012-Mp3

இந்த வார ஜும்ஆ பயான்-ஹைதர் அலி ஆலிம்- 28.09.2012-Mp3 ...

உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு! அதிர்ச்சியில் தினமலர்!

Sep 28: பதிமூவாயிரம் ஆயிரம் கோடி அல்ல மக்களின் உயிர்தான் முக்கியம் சுப்ரிம்கோர்ட் அதிரடி உத்தரவு.  இச்செய்தியால் அதிர்ச்சி அடைந்துள்ளது தினமலர் நாளிதழ்.சென்னை உயர்நீதி மன்றத்தில் கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டஅனைத்து மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டன.  ஆனால் அதை எதிர்த்து டெல்லி உச்ச நீதி மன்றத்தில் தொடுக்கப்பட்டுள்ள வழக்கில் கூடங்குளம் மக்கள் போராட்டத்திற்கு வெற்றி தரும் உத்தரவை...

பாப்புலர் ஃப்ரண்டின் சர்வ சிக்ஸா கிராமம்

சென்னை: முஸ்லிம் சமூகத்தின் வலிமைக்காவும், முன்னேற்றத்திற்காகவும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா நாடு முழுவதும் பல்வேறு நலதிட்ட பணிகளை மேற்கொண்டு வருகிறது. சமூக மேம்பாடு திட்டத்தின் கீழ் ஆற்றி வரும் பணிகளில் "சர்வ சிக்ஸா கிராம்" என்ற மாபெரும் சேவையை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மேற்கொண்டு வருகிறது. அனைத்து கிராமங்களுக்கும் கல்வியை கொண்டு சேர்க்கும் வகையில் பல கிராமங்கள் தத்தெடுக்கப்பட்டு அக்கிராமத்திற்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளை பாப்புலர்...

சிரியாவில் இரத்தக் களரி: ஒரே நாளில் 305 பேர் படுகொலை!

28 Sep 2012 டமாஸ்கஸ்:சர்வாதிகாரி பஷாருல் ஆஸாதிற்கு எதிரான மக்கள் எழுச்சிப் போராட்டத்தில் நேற்று முன்தினம்(புதன் கிழமை) மட்டும் 305 பேர் படுகொலைச் செய்யப்பட்டுள்ளனர். இதில் சாதாரண அப்பாவி மக்கள் 199 பேர் அடங்குவர். பஷாருல் ஆஸாதிற்கு எதிரான போராட்டம் துவங்கிய பிறகு ஒரேநாளில் அதிகம் பேர் இப்பொழுதுதான் கொல்லப்பட்டுள்ளனர். சிரியாவில் மனித உரிமை கண்காணிப்பு அமைப்பு இத்தகவலை வெளியிட்டுள்ளது.டமாஸ்கஸில் ராணுவ தலைமையகத்தின் மீதான தாக்குதலில் 14 பேர் கொல்லப்பட்டனர்.குண்டுவெடிப்பை...

மேற்கத்தியர்கள் சர்வதேச அளவில் அணு ஆயுத பீதியை உருவாக்குகின்றனர்- அஹ்மத் நஜாத்!

28 Sep 2012 ஐ.நா:மேற்கத்திய நாடுகள் சர்வதேச அளவில் அணு ஆயுத பீதியை உருவாக்குவதாக ஈரான் அதிபர் அஹ்மத் நஜாத் கூறினார். ஆயுதக் கடத்தல், பேரழிவு ஆயுதங்களின் பீதி ஆகியவற்றை பரப்புரைச் செய்வதே மேற்கத்திய நாடுகளின் முக்கிய பணி என்று அவர் தெரிவித்தார்.ஐ.நா பொது அவையில் உரை நிகழ்த்துகையில் அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் மேற்கத்திய நாடுகளை ஒரு பிடி பிடித்தார் நஜாத். நேற்று முன்தினம்(புதன் கிழமை) ஐ.நா பொது அவையில் உரை நிகழ்த்திய முக்கிய நபர்களில் நஜாதும் ஒருவர்...

அணு உலைக்கு எதிர்ப்பு: ஒரு லட்சம் பேர் சட்டப்பேரவையை முற்றுகையிடும் போராட்டம்!

28 Sep 2012 கூடங்குளம்:கூடங்குளம் அணுஉலையை மூட வலியுறுத்தி, அக்டோபர் 29-ம் தேதி தமிழக சட்டப் பேரவையை முற்றுகையிடப் போவதாக, அரசியல் கட்சிகள் ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.கூடங்குளம் அணுஉலையை மூட வலியுறுத்தி அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கத்தினர் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக இடிந்தகரையில் அணுசக்திக்கு எதிராக குரல் கொடுத்து வருகின்ற அரசியல் கட்சிகளின் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நேற்று(வியாழக்கிழமை)...

இறைத்தூதரை அவமதிக்கும் திரைப்படம்: கண்டனப் பேரணியை தொடர்ந்து அமெரிக்க மையம் மூடல்!

28 Sep 2012 கொல்கத்தா:இஸ்லாத்தின் இறுதித்தூதர் முஹம்மது நபி(ஸல்) அவர்களை இழிவுப்படுத்தும் வகையில் தயாரிக்கப்பட்ட அமெரிக்க திரைப்படத்தால் கொந்தளித்த முஸ்லிம்கள் உலக முழுவதும் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் மே.வங்காள மாநிலம் கொல்கத்தாவில் அமெரிக்க மையத்தை நோக்கி முஸ்லிம்கள் கண்டனப் பேரணியை நடத்தினர். இதனைத்தொடர்ந்து அமெரிக்க மையம் மூடப்பட்டது.இஸ்லாத்திற்கு எதிரான திரைப்படத்தை வெளியானதற்கு அமெரிக்கா மன்னிப்புக் கோரவேண்டும் என்று ஆல் பெங்கால்...

சொஹ்ரபுத்தீன் ஷேக் போலி என்கவுண்டர்: வழக்கை மும்பைக்கு மாற்ற உச்சநீதிமன்றம் அனுமதி!

28 Sep 2012 புதுடெல்லி:குஜராத் மாநிலத்தில் நிகழ்ந்த சொஹ்ரபுத்தீன் ஷேக் மற்றும் அவரது மனைவி கெளஸர்பீயின் போலி என்கவுண்டர் கொலை வழக்கின் விசாரணையை அம்மாநிலத்தில் இருந்து மும்பைக்கு மாற்ற உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. அதேவேளையில் குஜராத் முஸ்லிம் இனப்படுகொலை புகழ் மோடியின் நெருங்கிய நண்பரும், குஜராத் மாநில முன்னாள் உள்துறை அமைச்சருமான அமித் ஷாவுக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்துச் செய்யக்கோரும் சி.பி.ஐயின் மனு தள்ளுபடிச்செய்யப்பட்டது.குஜராத் மாநிலத்தில்...

அதிரையில் திடீரென ஏற்பட்ட சூறை காற்றுடன் சாரல் மழை!

கடந்த சில வாரங்களாக அதிரையை வெயில் வாட்டி வதைத்து வந்தது.வெயில் வாட்டி  வதைப்பது ஒருபுறம் இருந்தாலும், மின் தடையும் அதிகமாக இருந்து வந்தது.இதனால் பொது மக்கள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகி வந்தனர். நேற்று மாலை 5.50 மணியளவில் அதிரையில் சூறை காற்று வீசியதால்   நடுத்தெரு உள்ளிட்ட முக்கிய இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் மிகவும் சிரமத்திற்குள்ளாகி இருந்தாலும் இதனை தொடர்ந்து சில நிமிடங்கள்...

Thursday, September 27, 2012

அவதூறு பிரச்சாரங்களுக்கு எதிராக பாப்புலர் ஃப்ரண்ட் தேசிய அளவிலான பிரச்சாரம்!

27 Sep 2012புதுடெல்லி:பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவிற்கு எதிராக நடத்தப்படும் அவதூறுப் பிரச்சாரங்களை அதன் தேசிய செயற்குழு வன்மையாக கண்டித்துள்ளது.அரசு மற்றும் போலீஸ்-உளவுத்துறை ஏஜன்சிகளைச் சார்ந்த சிலர் வகுப்புவாத சிந்தனையுடன் பாப்புலர் ஃப்ரண்டிற்கு அவப்பெயரை ஏற்படுத்தும் வகையில் செயல்படுகின்றனர். இதன் மூலம் ஒடுக்கப்பட்ட, சிறுபான்மை மக்களுக்கான உரிமைப் போராட்டங்களை சீர்குலைக்கின்றனர். அவதூறுப் பிரச்சாரங்களின் நோக்கம், இந்த பிரிவினரை சக்திப்படுத்துவதற்காக...

கூடங்குளம் போராட்டத்தை நசுக்க தொடரும் மின்வெட்டு!

Sep 27: கூடங்குளம் அணுஉலைக்கு எதிராக இடிந்தகரையில் மக்கள் மணலுக்குள் தங்களை புதைத்து கொண்டு புதுவிதமான போராட்டத்தை நடத்தினர். இடிந்தகரையில் சர்ச் வளாகத்தில் நடந்த பொதுக் கூட்டத்தில் ம.தி.மு.க., பொதுச் செயலாளர் வைகோ கலந்து கொண்டார். பின்னர் இடிந்தகரை கடற்கரைக்கு சென்று தானும்  மணலுக்குள் உடலை புதைத்தபடி, மக்கள் போராட்டத்தில் பங்கேற்றார். அதில் உதயகுமார், புஷ்பராயன் உள்ளிட்ட தலைவர்களும் மண்ணில் புதைந்து தாங்கள் மக்கள் தலைவர்கள் என்பதை...

அப்பாவி சிறுபான்மை மக்கள் மீது தீவிரவாத முத்திரையை குத்தாதீர்கள்! – அஹ்மதாபாத் வழக்கில் 11 முஸ்லிம்களை விடுவித்து உச்சநீதிமன்றம் தீர்ப்பு!

27 Sep 2012 புதுடெல்லி:ஒரு நபரின் மதத்தை பார்த்து அவருக்கு கொடுமை இழைக்க சட்டத்தை துஷ்பிரயோகம் செய்யாதீர் என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. தீவிரவாதிகள் என்று குற்றம் சாட்டி குஜராத் மாநில தடா நீதிமன்றம் தண்டித்த 11 அப்பாவி முஸ்லிம்களை 10 ஆண்டுகளுக்கு பிறகு விடுதலைச்செய்த வழக்கில் நீதிபதிகளான ஹெச்.எல்.தத்து, சி.கே.பிரசாத் ஆகியோர் அடங்கிய உச்சநீதிமன்ற அமர்வு தீர்ப்பில் கூறியது.1994-ஆம் ஆண்டு ஜூன் மாதம் குஜராத் மாநிலம் அஹ்மதாபாத்தில் ஹிந்துக்கள் நடத்திய...

அப்துல் நாஸர் மஃதனியின் ஜாமீன் மனு: கர்நாடகா அரசுக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்!

27 Sep 2012 பெங்களூர்:பெங்களூர் தொடர் குண்டுவெடிப்புகள் வழக்கில் அநியாயமாக குற்றம் சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் கேரள மாநில பி.டி.பி தலைவர் அப்துல் நாஸர் மஃதனியின் ஜாமீன் மனு மீதான விசாரணையில் கர்நாடகா அரசுக்கு அம்மாநில உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.நீரழிவு உள்ளிட்ட பல்வேறு நோய்களால் அவதியுறும் அப்துல் நாஸர் மஃதனிக்கு அவரது உடல் நிலையை கவனத்தில் கொண்டு ஜாமீன் அனுமதிக்கவேண்டும் என்று நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது....

அமெரிக்கா அணுகுமுறையை மாற்றினால் உறவு மேம்படும் – அஹ்மத் நஜாத்!

27 Sep 2012 வாஷிங்டன்:அமெரிக்கா தனது அணுகுமுறையை மாற்றிக்கொண்டால் ஈரான்-அமெரிக்கா இடையேயான உறவு மேம்பட வாய்ப்புள்ளதாக ஈரான் அதிபர் அஹ்மத் நஜாத் கூறியுள்ளார். ஈரான் தனது சொந்த காலில் நிற்கும் தேசம் என்பதை அமெரிக்க தூதர்கள் முதலில் புரிந்துகொள்ள வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.ஐ.நா பொது அவையின் வருடாந்திர கூட்டத்தில் கலந்துகொள்ள சென்றுள்ள அஹ்மத் நஜாத், அமெரிக்க பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் பேராசிரியர்களுடன் நடந்த கலந்துரையாடலில் பங்கேற்றார்.அப்போது...

ஆசிரியர் திட்டியதால் லாரல் பள்ளி மாணவன் தீக்குளித்து தற்கொலை - பரபரப்பான தகவல்!!

பட்டுக்கோட்டை சிவக்கொள்ளையை சேர்ந்த வெங்கடேசன் என்ற மாணவன் பள்ளிக்கொண்டானில் உள்ள பிரபலமான லாரல் மேல்நிலைப் பள்ளியில் 10-ஆம் வகுப்பு படித்துவருகிறார். தேர்வில் குறைந்த மதிப்பெண் எடுத்ததால் 25/09/2012 செவ்வாய்கிழமை அன்று காலை பள்ளி ஆசிரியர் மாணவனை திட்டி வகுப்பறையைவிட்டு வெளியில் நிறுத்தியதால் மனம் உடைந்து மாலை வீட்டிற்கு சென்ற மாணவன் வெங்கடேசன் அன்று இரவு தன் உடலில் மண்ணெண்ணை ஊற்றி தீ வைத்து கொண்டார். இதில் உடல் முழுவதும் தீயில் கருகி உயிருக்கு...

Wednesday, September 26, 2012

கூகிலில் கிடைக்கும் ராணுவ ரகசியங்களை வைத்திருந்த தீவிர(!)வாதி கைது!!

இந்தியா ஆங்கிலேயரிடமிருந்து விடுதலையாகி 65 ஆண்டுகளாகிவிட்டபோதிலும் இந்நாட்டின் குடிமக்களாகிய முஸ்லிம்களுக்கு சுதந்திர இந்தியாவின் அதிகார வர்க்கத்திடமிருந்து இன்னும் விடுதலை கிடைத்தபாடில்லை. இந்திய சுதந்திரப் போராட்டத்திற்கு அன்றைய மக்கள்தொகை சதவீதத்திற்கும் அதிகமான பங்களிப்பை வழங்கிய முஸ்லிம்கள், நம்நாட்டு சிறைச்சாலைகளில் சந்தேகத்தின் பேரிலும், நிரூபணமில்லாத குற்றவாளிகளாகவும், நீதி மன்ற விசாரணைக் கைதிகளாகவும் அதிகமான சதவீதம் பேர் இருந்து...