Wednesday, November 30, 2011

சுபுஹு தொழ எழும்புங்கள் அழகாக வருவீர்கள் - லண்டன் ஆய்வில் தகவல்

தூக்கத்தில் இருந்து அதிகாலையில் எழுந்திருப்பவர்கள் உடல் எடை குறைந்து ஆரோக்கியத்துடன் மகிழ்ச்சியாக இருப்பார்கள் என்று இங்கிலாந்தில் நடத்தப்பட்ட ஆய்வொன்றின் மூலம் தெரியவந்துள்ளது. லண்டன் ரோஹம்டன் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் மனிதனின் உடல் நிலை மற்றும் தூங்கும் பழக்கவழக்கங்கள் குறித்த ஆய்வொன்றை நடத்தினர்.  அதன் விவரம்: தூக்கத்தில் இருந்து சராசரியாக காலை 5.58 மணிக்கு எழுந்திருக்கும் நபர்களையும், காலை 8.54 மணி வரை தூங்கிய பிறகு எழுந்திருப்பவர்களின்...

இறைத்தூதரின் ரகசியத்தை இறுதிவரை காத்தவர்!

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.அனஸ் [ரலி] அவர்கள் அறிவிக்கிறார்கள்; நான்[ரசூல்[ஸல்]அவர்களிடம் சேவகனாக இருந்தபோது] என்னிடம் வந்தார்கள். நான் சிறுவர்களுடன் விளையாடிக் கொண்டிருந்தேன். நபி[ஸல்] அவர்கள் எங்களுக்கு ஸலாம் சொன்னார்கள். பிறகு ஒரு அலுவல் நிமித்தமாக என்னை ஒரு இடத்திற்கு அனுப்பினார்கள். நான் என் தாயாரிடம் தாமதமாகவே வந்தேன். அப்போது என்தாயார், உன் தாமதத்திற்கு காரணம் என்ன..? என்று கேட்டார்கள். நான் அல்லாஹ்வின் தூதர்[ஸல்] அவர்கள் ஒரு அலுவலுக்காக என்னை அனுப்பி வைத்திருந்தார்கள் என்று சொன்னேன். அப்போது என் தாயார்...

லேப்டாப்... வசதியா? அசதியா?

உலகையே உள்ளங்கைக்குள் அடக்கிவிட்டது விஞ்ஞானம். ஆனாலும், அதற்கு விலையாக  அடுக்கடுக்கானப் பிரச்னைகளும் நம்மிடத்தில்  அணிவகுத்து நிற்கின்றன!'கைக்கு அடக்கமாக இருக்கும்; எங்கு வேண்டுமானாலும் எளிதாக எடுத்துச் செல்லலாம்’ என்பதாலேயே 'லேப்டாப்’ பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கையும் அதிகம்! குறிப்பாக, பிஸினஸ் சம்பந்தமாக அடிக்கடி வெளியூர் - வெளிநாடு என பறந்து கொண்டே இருப்பவர்களிடையே லேப்டாப்பின் பயன்பாடு ரொம்பவே அதிகம்.தற்போது கல்வி வளர்ச்சிக்காக...

தமிழக முதல்வர் அவர்களுக்கு மொக்கையனின் மனம் திறந்த மடல்!

தமிழக முதல்வர் அவர்களுக்கு,தமிழகத்தில் உள்ள இரு பெரிய கட்சிகளுக்கும் நிர்வாகம் செய்யத் தெரியவில்லை என்பதைக் கடந்த ஆட்சியில் கருணாநிதி நிரூபணம் செய்த பிறகு ஆட்சியைக் கைப்பற்றிய ஆறே மாதத்தில் நீங்கள் நிரூபித்துள்ளீர்கள். மூன்றாவது முறையாக தமிழக முதல்வராக பொறுப்பேற்ற நீங்கள் பேருந்து கட்டணத்தை இரு மடங்காக உயர்த்தியதுடன் பால் விலையையும் லிட்டருக்கு ரூ 6.25 உயர்த்தியுள்ளீர்கள். இது போதாதென்று மின்சாரக் கட்டணத்தையும் உயர்த்தி தமிழக மக்களின் வயிற்றில்...

உலகின் முதலாவது பாலியற் கல்லூரி - உலகம் எங்கே போகிறது

தலைமை ஆசிரியை மரியா   உலகின் முதலாவது சர்வதேச 'செக்ஸ்' பாடசாலை வியன்னாவில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இங்கு மாணவர்களான காதலர்கள் எப்படி சிறந்த காதலர்களாக இருக்கவேண்டும் என்று கற்பித்துக் கொடுக்கின்றனர் (வாய்க்குள் விரலை வைத்தால் கடிக்கத் தெரியாவர்களுக்கு படித்துக் கொடுக்கிறார்களாம்). வியன்னாவில் உள்ள இந்த சர்வதேச செக்ஸ் பாடசாலையில் மாணவர்களிடமிருந்து £ 1,400 தொகையை அறவிடுகிறார்களாம். அங்கு பணியாற்றும் தலைமை ஆசிரியை மரியா தோம்சன் இதுபற்றி கருத்து...

பிரிட்டன் புதன்கிழமை அதிரும்

பிரிட்டனில் அரசு மேற்கொண்டுள்ள பல்வேறு பொருளாதாரச் சீர்திருத்தங்களை எதிர்த்து, 30 லட்சம் பொதுத் துறை ஊழியர்கள் கலந்து கொள்ள உள்ள பிரமாண்டமான பொது வேலை நிறுத்தம், புதன்கிழமை நடக்க உள்ளது. இதையடுத்து, இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் பிரிட்டனுக்கான விமானச் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரூன் தலைமையிலான ஆளும் கூட்டணி அரசு, அந்நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் விதத்தில் ஓய்வூதியம் உள்ளிட்ட பல்வேறு வருவாய்களில் சீர்திருத்தங்களை...

ஈரான் மாணவர்கள் பிரிட்டன் தூதரகத்தை கைப்பற்றினர்

ஈரான்நாட்டு பல்கலைமாணவர்கள் இங்கி‌லாந்து அரசை கண்டித்து தலைநகர் டெஹ்ரானில் உள்ள தூதரகத்தில் அத்துமீறி நுழைந்தனர். ஈரான் நாடு அணுகுண்டு தயாரிப்பது குறித்து இங்கிலாந்து அரசு கருத்து ஒன்றை வெளியிட்டது.  இதற்கு எதிர்ப்பு தெரிவித்த ஈரான் நாட்டு பல்கலை மாணவர்கள் ஈரான் அரசு ‌ இங்கிலாந்து நாட்டு தூதுவரை உடனடியாக நாட்டை விட்டு வெளி‌யேறச்செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இந்நிலையில் இங்கிலாந்திற்கு எதிரான வாசகங்களை கூறியபடி பேரணியாக சென்ற பல்கலை...

Tuesday, November 29, 2011

ஜெர்மனியிலுள்ள நோக்கியா நிறுவனத்தில் 17000 ஊழியர்கள் திடீர் டிஸ்மிஸ்.

செல்போன் தயாரிப்பில் உலகில் முன்னணி நிறுவனமாக நோக்கியா நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் ஐரோப்பிய நாடுகளின் சீமன்ஸ் நிறுவனத்துடன் கூட்டு சேர்ந்து செல்போனை தயாரித்து வருகிறது. கடும் போட்டி காரணமாக சமீப காலமாக இந்த நிறுவனம் நஷ்டத்தில் இயங்கி வருகிறது.எரிக்சன் மற்றும் சீன நிறுவனம் ஹாவி ஆகியவை கடும் போட்டியாக உள்ளன. அவற்றை சமாளிக்க முடியாமல் நோக்கியா நிறுவனம் தவிக்கிறது. எனவே நஷ்டத்தை சரிக்கட்ட 17 ஆயிரம் ஊழியர்களை பணி நீக்கம் செய்வது என்று...

ஊமையாகிப்போன ஊடகங்கள்.

ஒரு புகழ்பெற்ற மைதானம்....!அதுவும் தேசத்தின் தலை நகரம்...!பல்லாயிரக்கணக்கான மக்கள் சங்கமித்த இடம்....!எங்கே போனது ஊடகம்?ஒரு வேளை ஊமையாகிப்போனதோ?பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா : ஒரு சமூக நல இயக்கம், கடந்த 1989 ஆம் ஆண்டிலே தொடங்கப்பட்டு  ஒடுக்கப்பட்ட, நசுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களின் உரிமைகளுக்காக போராடி வருகிறது. இந்தியாவின் கடைக்கோடி மாநிலமான கேரளாவிலிருந்து தொடங்கப்பட்ட இந்த பேரியக்கம் படிப்படியாக வளர்ச்சி அடைந்து இன்று இந்தியாவின்...

மன்னிப்பு கேட்டால் போதாது - அமெரிக்காவை மிரட்டும் பாகிஸ்தான்

"நேட்டோ படைகள் தாக்குதலில் பாகிஸ்தான் வீரர்கள் கொல்லப்பட்டதற்காக, மன்னிப்புக் கேட்டால் மட்டும் போதாது. இவ்விவகாரம் மேலும் பல மோசமான விளைவுகளை உருவாக்கும்' என பாக்., ராணுவம் தெரிவித்துள்ளது. அதேநேரம், பாக்., தரப்பில் இருந்து முதல் தாக்குதல் நடத்தப்பட்டது என வெளியான தகவல்களையும் அது மறுத்துள்ளது.கடந்த 26ம் தேதி அதிகாலை, பாகிஸ்தானின் மொஹ்மந்த் பழங்குடியினப் பகுதியில், ஆப்கானிஸ்தான் எல்லையில் இருந்து மூன்று கி.மீ., தொலைவில் உள்ள சலாலா எல்லைச் சாவடி...

Monday, November 28, 2011

வேலைவாய்ப்பு ----சவூதி ஆரேபியாவில் உள்ள பிரபல "அல் மராய்" என்ற நிறுவனத்திற்கு உடனடி ஆட்கள் தேவை .

சவுதியில் உள்ள பிரபலமான "AL MARAI" (அல் மராய்) என்ற நிறுவனத்திற்கு உடனடி ஆட்கள் தேவைப்படுகிறது. எனவே (தாங்கள் விருப்பம் உள்ளவர்கள்) கீழ் கண்ட பணிகளில் பல் வேறு விதமான வேலைகள் இருப்பதால் உடனே பதிவு செய்யுமாறு முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தளம் சார்பாக கேட்டுக்கொள்கிறோம். பணிகளின் விபரம்: 1 ) Material Handler : = மாத சம்பளம் ரியால் = 800 சாப்பாடு = 400 ஓவர் டைம் = 5 .769 2 ) Stock Controller : = மாத சம்பளம் ரியால் = 2 ,965 சாப்பாடு = 400 ஓவர்...

அமல் செய்வதில்தான் எத்துனை ஆர்வம் இவருக்கு..?

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம். நபி [ஸல்] அவர்களின் இந்த உம்மத்தில் தலைசிறந்தவர் அபூபக்கர் சித்தீக்[ரலி] அவர்கள் என்பதை நாமெல்லாம் அறிந்துவைத்துள்ளோம். இத்தகைய சிறப்பு அவர்களுக்கு இருந்தும், சொர்க்கத்திற்கு உரியவர் என்று இறைத்தூதரால் பிரகடனப் படுத்தப்பட்ட பின்பும் அபூபக்கர்[ரலி] அவர்களின் அமல்கள் குறைந்ததா என்றால் இல்லை. நல்லமல்கள் என்று எவையெல்லாம் உள்ளதோ அவைகளை அன்றாடம் செய்யக்கூடிய அற்புத மனிதராக அபூபக்கர்[ரலி] அவர்கள் திகழ்ந்துள்ளதற்கு சான்றாகவும், நமக்கும் அத்தகைய ஆர்வம் வரவேண்டும் என்பதற்காகவும் இந்த பொன்மொழி...

பெண்கள் அதிகம் சிரிப்பது ஏன்? : ஆய்வில் சுவாரசிய தகவல்!

அவள் புன்னகை என்னை ஈர்த்தது’. இப்படிச் சொல்லும் ஆண்கள் ஏராளம். சிரிப்பு மனிதனுக்கு அழகு. அதிலும் பெண்களின் சிரிப்புக்கு ஈர்ப்பு அதிகம். சின்ன சந்தோஷம் தரும் விஷயமாக இருந்தாலும் பெண்கள் நீண்ட நேரம் சிரித்துக் கொண்டிருப்பார்கள். அவர்கள் ஏன் அப்படி இடைவிடாமல் சிரிக்கிறார்கள் என்று ஒரு ஆய்வு நடத்தப்பட்டது. ஆய்வாளர்கள் என்ன கூறுகிறார்கள் தெரியுமா… கலிபோர்னியாவில் உள்ள ஸ்டேன்போடு பல்கலைக்கழகம் இந்த ஆய்வை மேற்கொண்டது. 10 ஆண்களையும் 10 பெண்களையும்...

அரசியல் கட்சிகள் முஸ்லிம்களை ஏமாற்றுகின்றன – ஃபதேஹ்பூர் ஷாஹி இமாம்.

புதுடெல்லி:முஸ்லிம்களின் மோசமான சூழ்நிலையை சச்சார் கமிட்டி சுட்டிக்காட்டிய பிறகும் அரசியல் கட்சிகள் முஸ்லிம்களை ஏமாற்றுவது தொடர்கிறது என டெல்லி ஃபதேஹ்பூரி ஷாஹி இமாம் முஃப்தி முஹம்மது முகர்ரம் அஹ்மத் கூறியுள்ளார். பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா நடத்தும் சமூக நீதி மாநாட்டையொட்டி நடைபெற்ற மில்லி கன்வென்சனை துவக்கி வைத்து உரை நிகழ்த்தினார் அவர். அப்பொழுது அவர் கூறியதாவது: சச்சார், ரங்கநாத் மிஷ்ரா கமிஷன் அறிக்கைகளை தற்பொழுதும் மேசைக்குள் பாதுகாப்பாக...

சங்க்பரிவார்கள் நடத்திய குண்டுவெடிப்புகள் சமூகங்களை பிளவுப்படுத்தியுள்ளது – சுரேஷ் கெய்ர்னார்

 புதுடெல்லி:சங்க்பரிவாரம் நடத்திய குண்டுவெடிப்புகள் முஸ்லிம்களை பாதுகாப்பு அற்றவர்களாகவும், பீதிவயப்படுபவர்களாகவும் மாற்றியது மட்டுமல்ல, சாதாரண ஹிந்து-முஸ்லிம் மக்களிடையே ஆபத்தான பிளவுகளை ஏற்படுத்தியுள்ளது என அகில இந்திய தேசிய மதசார்பற்ற பேரவையின் தேசிய கன்வீனர் டாக்டர்.சுரேஷ் கெய்ர்னார் கூறியுள்ளார். பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா டெல்லியில் நடத்திவரும் சமூக நீதி மாநாட்டில் ’நீதிக்கான மக்களின் உரிமை’ என்ற கருத்தரங்கில் உரை நிகழ்த்தினார்....

பாகிஸ்தான் சுதந்திரத்தின் மீதான தாக்குதல் - அமெரிக்காவை வெறியேற உத்தரவு

பலுசிஸ்தானில் உள்ள தனது விமானப்படை தளத்திலிருந்து 15 நாட்களுக்குள் வெளியேறுமாறு, அமெரிக்காவுக்கு பாகிஸ்தான் உத்தரவிட்டுள்ளது. பாகிஸ்தான் அமைச்சரவையின் அவசர கூட்டம் நேற்றிரவு நடந்தது. பிரதமர் யூசுப் ராசா கிலானி தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில், பாகிஸ்தான் மீதான நேட்டோ படையினரின் தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. பாகிஸ்தான் சுதந்திரத்தின் மீதான தாக்குதல் என பிரதமர் கிலானி இதை வர்ணித்துள்ளார். அத்துடன், ஆப்கானிஸ்தானில் உள்ள அமெரிக்க படைகளுக்கு...