Sunday, November 27, 2011

மலத்தின் ருசி என்ன ?



நபிகள் நாயகம் (ஸல் ) அவர்களிடம் ஒரு நாள் யூதன் ஒருவன் நடுநிசியில் சென்று "முஹம்மதே !மலம் என்ன ருசியுடையது ?" என்று கிண்டலாக கேட்டான் .அதற்கு நாயகம் (ஸல் ) அவர்கள் ;அமைதியுடனும் பொறுமையுடனும் "மலத்தின் ருசி இனிப்பானது " என்று பதிலளித்தார்கள் .மீண்டும் அந்த யூதன் (நீங்கள்)-அதைச் சாப்பிட்டு பார்த்தீர்களா?
சாப்பிட்டு இருந்தால்தானே ருசியை அறிய முடியும் "என்று ஏளனமாகக் கேட்டான் .அக்கேள்விக்கு மிகவும் நிதானத்தோடு பெருமானார் (ஸல் )அவர்கள் ,அவனிடம் "மலத்தில் ஈ மொய்ப்பதை நீர் பார்க்கவில்லையா ?ஈக்கள் இனிப்பான பொருளின் மீது மொய்க்கும் என்பதும் உமக்குத் தெரியாதா? "என்று விளக்கம் தந்தார்கள் .இப் பதிலே கேட்டு அந்த யூதன் திகைத்து விட்டான் .பெருமானார் (ஸல் )அவர்களை அவமானப்படுத்துவதற்காக வேண்டி நடிநிசியில் சென்று மலத்தை பற்றி கேட்கும்  பொழுது அமைதியாகவும் ,அதுவும் மலத்தின் ருசியை பற்றி விளக்கமாகவும் சொன்னது தான் அவனுடைய திகைப்புக்கு காரணம் ."இவர்கள் சாதாரண மனிதராக இருக்க முடியாது ;எவ்வளவு  பொறுமை ?எவ்வளவு அமைதி ?நையாண்டி செய்வதற்காக வந்த என்னிடத்தில் எவ்வளவு பெருந்தன்மையுடன் நடந்து கொண்டார்கள் ? இது போன்று மனிதரை நான் பார்த்ததே இல்லை " என்று கூறியவராக புனிதமான தீனுல் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டு "வணக்கத்திற்குரிய நாயன் அல்லாஹுத்தாலவைத் தவிர வேறு நாயன் யாருமில்லை முஹம்மது (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் திருத்தூதராகவும் அவனுடைய அடியாராகவும் இருகிறார்கள் " என்று நான் சாட்சி கூறுகிறேன் என்று கூறி புனித தீனுல் இஸ்லாத்தில் சேர்ந்து விட்டார் .

0 comments:

Post a Comment