Sunday, November 20, 2011

நாங்களே உலக வல்லரசு, அதனை விட்டுக்கொடுக்க மாட்டோம் என்கிறது அமெரிக்கா


எக்காரணம் கொண்டும், உலக வல்லரசு மற்றும் உலகத் தலைவர் என்ற நிலையை, அமெரிக்கா விட்டுக் கொடுக்காது' என, அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் லியோன் பனெட்டா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர், செய்தியாளர்களிடம் கூறியதாவது, அமெரிக்காவின் புவியியல் முன்னுரிமைகளின்படி, பாதுகாப்புக்கு குந்தகம் நேரிடும்படியான செயல்களுக்கு, அமெரிக்கா ஒரு போதும் இடம் கொடுக்காது. பசிபிக் மண்டலத்தில், அமெரிக்கா படைகளை குவித்து வருகிறது. 

இந்நிலையில், உலக வல்லரசு மற்றும் உலகத் தலைவர் என்ற நிலையை, அமெரிக்கா எக்காரணம் கொண்டும் விட்டுக் கொடுக்காது.உலக நலன் மற்றும் உலகளாவிய பொறுப்புகளுடன் கூடிய ஒரு நாடு, உலகளாவிய நிலையில் வலுவான ராணுவம் கொண்ட ஒரு நாடு என்ற முறையில், அமெரிக்கா, உலக பாதுகாப்புக்காக தொடர்ந்து செயல்படும்.இவ்வாறு பனெட்டா தெரிவித்தார்.
sources-yarlmuslim

0 comments:

Post a Comment