Tuesday, November 15, 2011

அத்வானியை நோக்கி முட்டை வீச்சு!



பஞ்சாப் மாநிலத்தில் ரத யாத்திரை மேற்கொண் டுள்ள அத்வானியை நோக்கி முட்டை வீசப் பட்டது.

ஊழல் மற்றும் கறுப் புப் பணத்துக்கு எதிராக மக்களிடையே விழிப் புணர்வை ஏற்படுத்து வதற்காக பாரதீய ஜனதா மூத்த தலைவர் அத்வானி நாடு முழு வதும் ரத யாத்திரை மேற்கொண்டு உள்ளார்.

அவரது ரத யாத்திரை நேற்று அரியானா மாநி லத்தில் இருந்து பஞ்சாப் மாநிலத்திற்கு சென்றது. பஞ்சாப் மாநிலத்தில் சிரோமணி அகாலிதளம் (பாதல்)-பாரதீய ஜனதா கூட்டணி ஆட்சி நடை பெற்று வருகிறது.

அத்வானியின் வாகனம் பஞ்சாப் மாநிலத்தில் பர்னாலா என்ற இடத்தை நோக்கிச் சென்றது. பதி ண்டாவை அடுத்த சங் கேரா கிராமத்தின் அருகே சென்றபோது ரோட்டின் அருகே உள்ள வயல்களில் மறைந்து இருந்த சிரோ மணி அகாலிதளம் (அமிர்தசரஸ்) தொண் டர்கள் சிம்ரஞ்சித் சிங் மான் தலைமையில் ரோட்டுக்கு ஓடி வந் தனர்.

இதேபோல், மறைந்திருந்த சில அமைப்புகளைச் சேர்ந் தவர்களும் ரோட்டுக்கு வந்தனர்.

ரோட்டில் கூடிய சுமார் 40 பேர் அத் வானிக்கு எதிராக முழக் கமிட்டு கறுப்புக் கொடி காட்டியதோடு அவரை நோக்கி முட்டைகளை வீசினார்கள். ஆனால் அத்வானி வாகனத்திற் குள் இருந்ததால் அவர் மீது முட்டை பட வில்லை. அவரது வாக னத்தின் மீது முட்டை கள் சிதறி விழுந்தன.

இதனால் அத்வானி யின் வாகனமும், அவரு டன் வந்த மற்ற வாகனங் களும், பாதுகாப்பு அதி காரிகளின் வாகனங் களும் நிறுத்தப்பட்டன. ஆர்ப்பாட்டக்காரர்களை காவல்துறையினர் விரட் டினார்கள். அத்வானி யின் வாகனத்தை சுத்தப் படுத்திய பிறகு, ரத யாத் திரை அங்கிருந்து புறப் பட்டுச் சென்றது. இந்த சம்பவத்தின் காரண மாக அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த சம்பவம் தொடர்பாக சிரோமணி அகாலிதளம் (அமிர்த சரஸ்) கட்சியைச் சேர்ந்த 30 பேர் கைது செய்யப் பட்டதாக காவல்துறை அதிகாரி ஒருவர் தெரி வித்தார்.
thanks to  syedabu

0 comments:

Post a Comment