Wednesday, November 9, 2011

ஈரான் மீது தாக்குதல் நடத்தப்போவதில்லை - இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் தெரிவிப்பு


ஈரான் அணுஉலைகள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தப்போவதாக வெளியான செய்தியை இஸ்ரேல் ராணுவ மந்திரி எகுட் பராக் மறுத்து இருக்கிறார். ஈராக் மீது எந்த விதமான ராணுவ நடவடிக்கையும் எடுக்கும் எண்ணம் இல்லை என்று அவர் தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது:-

போர் என்பது பிக்னிக் அல்ல. எங்களுக்கு பிக்னிக் தான் வேண்டும். போர் வேண்டாம். ஈரானின் அணுஆயுத தயாரிப்பு எண்ணத்தை தடுக்க அனைத்து வழிகளும் திறந்து உள்ளன. ஈரானை அணுஆயுதம் தயாரிக்காமல் தடுத்து நிறுத்த சர்வதேச நாடுகள் எடுக்கும் நடவடிக்கையால் மட்டுமே முடியும். இவ்வாறு எகுட் பராக் தெரிவித்தார்.
THANKS TO YARLMUSLIM BLOGGER

0 comments:

Post a Comment