Saturday, February 18, 2012

அமெரிக்கா இஸ்ரேலுடன் இணைந்து எந்நேரமும் போர் தொடுக்கலாம் ?


எதிர்ப்புகளை மீறி ஈரான் அணு திட்டத்தைத் தொடங்கி உள்ளதால் மத்திய கிழக்கு நாடுகளில் போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது.


ஈரான் அணு ஆயுத உற்பத்தி செய்வதாக கூறி அமெரிக்கா பொருளாதார தடை விதித்துள்ளது. ஐரோப்பிய நாடுகளும் ஈரானிடமிருந்து எண்ணை வாங்குவதை நிறுத்த ஆலோசித்து வருகின்றன. எண்ணை வாங்குவதை நிறுத்துமாறு அமெரிக்காவும் ஆசிய நாடுகளைக் கேட்டுக் கொண்டுள்ளது.

இந்நிலையில் 3 அணு திட்டங்களை ஈரான் அதிபர் அகமது நிஜாத் தொடங்கி வைத்துள்ளார். இதை அந்நாட்டு தொலைக்காட்சியும் ஒளிபரப்பியது. இதனால் அமெரிக்கா இஸ்ரேலுடன் இணைந்து எந்நேரமும் போர் தொடுக்கலாம் என்ற பதற்றம் ஏற்பட்டுள்ளது.
thanks to gnanamuthu.com

0 comments:

Post a Comment