Sunday, February 19, 2012

அதிரையில் SDPI நடத்திய மாபெரும் கொள்கை விளக்க பொதுக்கூட்டம் .

17 /02 /2012 அன்று மாலை 5 மணியலவில் SDPI மாநில தலைவர் K .K .S .M .தெஹலான் பாகவி செக்கடி மேட்டில் உள்ள SDPI -ன் தஞ்சை தெற்கு மாவட்ட அலுவலகத்தை திறந்து வைத்தார்கள் .அதனை தொடர்ந்து அதிரையின் 5 முக்கிய இடங்களில் மாநில தலைவர் அவர்கள் SDPI -ன் கொடியை ஏற்றி வைத்தார்கள் .

























மேலும் SDPI -ன் கடற்கரை தெரு கிளை அலுவகத்தை  SDPI -ன் மாநில செயலாளர் அப்துல் சத்தார் அவர்கள் திறந்து வைத்தார்கள் .அதனை தொடர்ந்து மாலை 6 .45 மணியலவில் SDPI -ன் மாபெரும் கொள்கை விளக்கு பொதுக்கூட்டம் மாவட்ட பொறுப்பு குழு செயலாளர் z . முகம்மது இலியாஸ் அவர்கள் தலைமையில் SDPI ன் மாநில தலைவர் K.K.S .M தெஹலான் பாகவி அவர்களும் மாநில செயலாளர் k .செய்யது இப்ராஹீம் அவர்களும் மாநில செயற்குழு உறுப்பினர் A .அபூபக்கர் சித்திக் அவர்களும் மாநில செயலாளர் அப்துல் சத்தார் அவர்களும் சிறப்பான முறையில் சிறப்புரையாற்றினார்கள் .இப் பொதுக்கூட்டத்துக்கு ஏராளனமான ஆண்களும் பெண்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர் .








இப் பொதுகூட்டத்தில் பின்வரும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன .

1 .திருவாரூர் முதல் காரைக்குடி வரை உள்ள ரயில் பாதையை அகல ரயில் பாதையாக மாற்ற மத்திய மாநில அரசை கேட்டுகொள்கிறோம் .
2 . அதிராம்பட்டினம் அல் அமீன் பள்ளி வாசல் கட்டுவதற்கு உள்ள தடைகளை நீக்குமாறு தமிழக அரசையும் , பேரூராட்சி நிர்வாகத்தையும் கேட்டுகொள்கிறோம் .மேலும் தாமதப்படுத்தினால் மக்களை திரட்டி மாபெரும் போராட்டத்தை நடத்துவோம் என எச்சரிக்கிறோம் .
3 .காதர் முகைதின் பெண்கள் மேல் நிலை பள்ளிக்கு தனி தேர்வு மையம் அமைக்க கல்வித்துறையை  கேட்டுகொள்கிறோம் .
4 .அதிரையில் முன் அறிவிப்பு இன்றி தொடர் மின் வெட்டை வன்மையாக கண்டிக்கிறோம் .  

by adiraisdpi

0 comments:

Post a Comment