Sunday, February 19, 2012

கூடங்குளம் ஒரு சிங்கள அணு குண்டு!


 ஈழத்தமிழர்களையும், இந்திய தமிழர்களையும் அழிக்கவல்ல அணு குண்டே கூடங்குளம் அணு மின்நிலயம். சிங்கள பேரினவாதமும், இந்திய ஹிந்தி அரசும் சேர்ந்து தமிழர்களை ஒடுக்கப்பட்ட  ஒரு இனமாக ஆக்கி எந்த உரிமையும் இல்லாத அடிமைகளாக ஆட்சி செய்து வருகின்றன. 

இந்த இரண்டு பேரினவாத அரக்கர்களின் இரத்த சாட்சியே ஈழத்து இன அழிப்பும், தமிழக மீனவர் படுகொலையும், முல்லை பெரியாரும், கூடங்குளம் அணு மின்னலயமும்ஆகும். ஏன் தமிழகத்து மின்சாரத்தை கேரளாவுக்கும், கர்நாடகாவுக்கும், ஆந்திராவுக்கும் வாரி கொடுத்து விட்டு தமிழகத்தை இருளில் மூழ்கடிக்க வேண்டும்.

சுற்றுச்சூழலில் அக்கறையுள்ள பெங்களூரை சேர்ந்த அகமது என்பவர், சூரிய சக்தியால் இயங்கும் சிறு காரில், தென் இந்தியா முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அவர் தெரிவிக்கும் போது சூரிய சக்தி மூலம் எடுக்கப்படும் ஆற்றலை கொண்டு கார் மற்றும் மின் விளக்குகளை பயன்படுத்த முடியும். அதனால் இயற்க்கைக்கு பேராபத்தை உண்டாக்கும் அழிவு சக்திகள் தேவையில்லை என்று தெரிவித்தார் என்பது இதில் கவனிக்கத்தக்கது.

கூடங்குளம் அணு மின் நிலயத்திற்கு ஒரு கேடு உண்டானால் அதனால் பாதிக்கப்படப்போவது நாம் மட்டும் இல்லை ஈழத்து சொந்தங்கலுமே. இந்திய மற்றும் இலங்கை அரசு பயங்கரவாதத்தால் அழிக்கப்பட்ட ஒரு இனத்தை மீண்டும் ஒரு அழிவுக்குள் தள்ளும் வேலையே இது. அது மட்டும் அல்லாமல்  கடலை நம்பி வாழும் இலட்சக்கணக்கான் தமிழக மீனவர்களின் வாழ்வாதரங்களை அழிக்கும் ஒரு தீய சக்தியே கூடங்குளம் அணு மின்நிலையம். 

இதற்க்கான ஆதாரங்களை தோழர் முத்து கிருஷ்ணன் அவர்களின் விடியோவையும், சிங்கள அணு குண்டு என்கிற விடியோவையும் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள். அந்த விடியோக்கள் சிந்திக்கவும் இணையத்தின் வலது பக்கத்தில் இணைக்கப்பட்டுள்ளது. கூடங்குளம் அணு மின்நிலையத்தை எதிர்ப்பது ஒவ்வொரு தமிழனின் கடமை என்பதை மறக்க வேண்டாம். தமிழர்களே ஒன்று பட்டு ஒரே குரலாக கூடங்குளம் அணுமின் நிலையத்தை எதிர்ப்போம்.

நட்புடன் : ஆசிரியர் புதியதென்றல்.
thanks to sinthikkavum.net

0 comments:

Post a Comment