Sunday, February 26, 2012

அதிரையில் SDPI கட்சியின் மாவட்ட செயலாளரை தாக்கிய TMMK வினர்.


அதிராம்பட்டினம், பிப்ரவரி 26 : அதிரையில் இன்று காலை 9 மணியளவில் SDPI கட்சியின் தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளர் முஹம்மது இல்யாஸ் அவர்கள் திருவாரூரில் இன்று SDPI கட்சி சார்பில் நடைபெற இருக்கும் திருவாரூர் முதல் காரைக்குடி வரை அகல ரயில் பாதை திட்டத்தை உடனே அமைக்க வலியிறுத்தி ரயில் மறியல் போரட்டத்திற்கு அதிராம்பட்டினத்தில் இன்று பொது மக்களை அழைத்துகொண்டிருந்தார். அப்போது தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தின் (TMMK ) நகர செயலாளர் தையுப் என்பவர், இந்த ஆர்பாட்டத்திற்கு யாரும் போக வேண்டாம் என்று பொது மக்களை தடுத்துள்ளார். இதனால் அங்கு இரு அமைப்பினருக்கும் சலசலப்பு ஏற்பட்டது. அப்போது தையுப் அவர்கள் SDPI யின் மாவட்ட செயலாளர் முஹம்மது இல்யாஸ் அவர்களை தாக்கினார். இதனால் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. 

நமது நிருபர் 

முஹம்மது (அதிரை)

0 comments:

Post a Comment