Sunday, February 19, 2012

போலீஸ் நிலையத்தில் துணிகர கொள்ளை: பெட்டியை உடைத்து சம்பள பணம் அபேஸ்.............


கொடுங்கையூர் போலீஸ் நிலையத்தில் போலீசாருக்கான ஓய்வு அறை உள்ளது. போலீசார், 
ஏட்டு, சப்- இன்ஸ்பெக்டர் ஆகியோர் இங்கு ஓய்வு எடுப்பது வழக்கம். அவர்கள் சீருடையை கழற்றி வைப்பதற்காக ஒவ்வொருவருக்கும் பெட்டி உள்ளது. அந்த பெட்டியும் ஓய்வு அறையில் இருக்கும்.

நேற்று இரவு 2 போலீசார் சீருடை மற்றும் சம்பள பணத்தை பெட்டியில் வைத்து பூட்டிச்சென்றனர். இன்று காலை வந்து பார்த்தபோது 2 பெட்டிகள் உடைக்கப்பட்டு இருந்தது. ஒரு பெட்டியில் இருந்த ரூ. 3 ஆயிரம் சம்பள பணம், அடையாள அட்டையும், மற்றொரு பெட்டியில் ரூ. 2 ஆயிரம் சம்பள பணம் அடையாள அட்டையும் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது.

இதுபற்றி உயர் அதிகாரிகளிடம் சம்பந்தப்பட்ட போலீசார் புகார் செய்தனர். அதன்பேரில் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் சிவசங்கரன் வழக்குப்பதிவு செய்தார். துணை கமிஷனர் கார்த்திகேயன், உதவி கமிஷனர் கோவி.மனோகரன் ஆகியோர் நேரில் வந்து விசாரித்தனர். நேற்று இரவு பணியில் இருந்த போலீசாரை கடுமையாக எச்சரித்தனர். பணியில் அஜாக்கரதையாக இருந்தால் பொது மக்களுக்கு எப்படி பாதுகாப்பு கொடுப்பீர்கள் என்று கூறி விளக்கம் கேட்டனர்.

thanks to abirai abu

0 comments:

Post a Comment