Wednesday, March 14, 2012

பெல்ஜியத்தில் பள்ளிவாசல் மீது தாக்குதல் - இமாம் கொல்லப்பட்டார்



 பெல்ஜியம் தலைநகர் பிரசல்சிலுள்ள பள்ளிவாசல் ஒன்றின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் பள்ளிவாசல் இமாம் கொல்லப்பட்டதோடு மேலும் ஒருவர் காயமடைந்தார்.
இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று முன்தினம் மாலை பள்ளிவாசல் மீது பட்ரோல் குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதனால் பள்ளிவாசலின் பெரும் பகுதி சேதத்திற்கு உள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதில் தொழுகைக்காக காத்திருந்த போது பள்ளிவாசலுக்குள் நுழைந்த ஒருவர் இந்த தாக்குதலை நடத்தியதாக சம்பவத்தை நேரில் பார்த்த ஒருவர் தொலைக்காட்சி ஒன்றுக்கு தெரிவித்துள்ளார்.thanks to qahtaninfo blogger

0 comments:

Post a Comment