Tuesday, March 27, 2012

வினா தாள் வெளியானதை கண்டித்து கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா ஆர்ப்பாட்டம்




வினா தாள் வெளியானதை கண்டித்து கர்நாடக மாநிலம் பாந்ட்வாளில் தாலுகா அலுவலகம் முன்பு கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 
பாந்ட்வாளில் உள்ள PU தேர்வாணையத்தின் கவனக்குறைவால் தேர்வு வினாத் தாள் வெளியாகியுள்ளது.கடந்த செவ்வாய் கிழமை (மார்ச் 20 ) அன்று கணித தேர்வுக்கான வினா தாள் வெளியாகியது, இதனைத் தொடர்ந்து சில ஆசிரியர்களின் பொருப்பற்ற தன்மையிளால் வேதியல் பாடத்தின் தேர்வு வினாத்தாள்களும் வெளியான. இருந்த போதும் இதற்கு எதிராக கல்லூரி நிர்வாகமோ அல்லது PU தேர்வாணையமோ எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் ஒரு பொறுப்பற்ற தன்மையையே தொடர்ந்து காட்டிவருகின்றனர். இது போன்ற வினா தாள்களின் கசிவினால் மாணவர்களின் எதிர்காலம் மிகவும் பலவீனமாகவே மாறும் நிலை உருவாகும். கல்லூரி நிர்வாகமோ மாணவர்களின் எதிர்காலத்தில் எந்த ஒரு அக்கறையும் காட்டாமல் தொடர்ந்து இதுபோன்ற செயல்களை மறைமுகமாக ஆதரிக்கிறார்கள்.

இதனை கண்டிக்கும் விதமாக  கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா பாந்ட்வால் தாலுக்கா அலுவலகம் முன்பு கண்டன ஆர்பாட்டம் நடத்தியது. இந்த ஆர்ப்பாட்டத்தை பாந்ட்வால் தாலுக்கா நிர்வாகக் குழு தலைவர் திரு.நவாஸ் அஹமது அவர்கள் கண்டன ஆர்பாட்டத்திற்கு தலைமை தாங்கினார்.

மேலும் இந்த ஆர்ப்பாட்டத்தில் பாந்ட்வால் தாலுக்காவின் செயலாளர் திரு.தாரிஃப், கர்நாடகா மாநில செயலாளர் திரு.முஹம்மது து ஃ பல், மேலும் மண்டல குழு உறுப்பினர் திரு.முகம்மது ரியாஸ் ஆகியோர் இந்த கண்டன ஆர்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.   
thanks to CFI

0 comments:

Post a Comment