Monday, March 26, 2012

வெற்றி பெற்ற குர்ஆன் - மாதாந்திர தர்பியா

சென்னை: மண்ணடி லிங்கி செட்டித்தெருவில் இருக்கின்ற பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில தலைமையகத்தில் கடந்த சனிக்கிழமை இரவு மாதாந்திர‌ தர்பியா வகுப்பு நடைபெற்றது. இதில் சென்னை மாவட்ட தலைவர் ஜே. முஹம்மது நாஜிம் "வெற்றி பெற்ற குர்ஆன்" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்.



நபி(ஸல்) அவர்களுக்கு இறைவனால் அருளப்பட்ட இவ்வேதமானது கடந்த 14 நூற்றாண்டுகளுக்கு மேலாக இறைமறுப்பாளர்களுக்கு மிகப்பெரும் சவாலை விடுத்திருக்கிறது. இன்று வரை அச்சவாலை முறியடிக்க ஒருவராலும் இயலவில்லை என்ற ஒன்றே இத்திருக்குர்ஆன் இறைவனின் வாக்கு என்பதில் சந்தேகமில்லை. உலகத்திலுள்ள அனைவரையும் ஒன்றினைத்து இது போன்ற ஒரு வேதத்தை கொண்டு வருவாருங்கள். அது உங்களால் முடியாது, நிச்சயமாக முடியாது என்ற திருக்குர்ஆனின் வசனங்கள் அது வெற்றி பெற்றதறகான சான்றாக அமைந்துவிடுகிறது. என அவர் தனது உரையில் கூறினார்.

முஸ்லிம்களில் படித்த இளைஞர்களில் பலருக்கு திருக்குர்ஆனை அரபு மொழியில் ஓதத்தெரியாதவர்களாக இருக்கின்றார்கள். திருக்குர்ஆன் ஓதுவதினால் கிடைக்கும் நன்மைகளை எடுத்துக்கூறி ஆர்வமூட்டப்பட்டு அதற்காக அவர்களுக்கு முறையான பயிற்ச்சி அளிக்கவும் இத்தர்பியா மூலம் ஏற்பாடு செய்யப்பட்டது.

0 comments:

Post a Comment