Friday, March 30, 2012

அதிரை சித்திக் பள்ளியின் சுவர் இடிப்பு நில அபகரிப்பு முயற்சி முறியடிப்பு !


                                                   

                                                              இடிக்கப்பட்ட சுவர் 

                                                         இடித்த பின் கட்டபட்ட சுவர் 
SDPI சகோதர்கள் -இடது பக்கம் அதிராம்பட்டினம் சகோதரர்முஹமத், வலது பக்கம் முத்துப்பேட்டையை சேர்ந்த சகோதரர்.தப்ரே ஆலம்

அதிராம்பட்டினம் புதுமனைத்தெருவில் உள்ள வக்பு செய்யப்பட்ட அல்லாஹ்வின் இறையில்லமான சித்திக் பள்ளியின் சுற்றுச்சுவரை 29 /03 /2012 அன்று நள்ளிரவு 12.30  மணிக்கு ஆயுதங்களுடன் வந்த சில மர்ம நபர்கள் சுற்றுச்சுவரை தரைமட்டமாக இடித்து சேதப்படுத்திவிட்டு தப்பி சென்றனர் .சம்பவத்தை அறிந்த சித்திக்பள்ளி ஜமாத் நிர்வாகிகள் மற்றும் முஹல்லா வாசிகள் காவல்துறையினரிடம் புகார் அளித்தனர் .அதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்ற சித்திக்பள்ளி முஹல்லா வாசிகள் ,தரகர் தெரு ஜமாத்தினர் ,பொதுமக்களின் சிலபேர்கள், மற்றும் அதிராம்பட்டினம் முத்துபேட்டை, மல்லிப்பட்டினம் SDPI -யை சேர்ந்த ஏராளமானோர் சித்திக் பள்ளி ஜமாத்தினரின் அனுமதி பெற்று உடனே சுவர் கட்டுமான பணிகளை மேற்கொண்டு நடு இரவு 1.15௦ முதல் 4 .௦௦ 00 மணிவரை கடும் முயற்சி செய்து சுற்றுச் சுவரை கட்டி எழுப்பி பள்ளிவாசல் நிலம் மீட்கப்பட்டது .உடன் சுவர்கட்டுமான பணியினை பொதுமக்களும் ,ஜமாதினரும் பாராட்டினர் . 

0 comments:

Post a Comment