Thursday, March 29, 2012

பாப்புலர் ஃப்ரண்டின் சமூம மேம்பாடு பணிகள் - மார்ச் மாத ரிப்போர்ட்



சென்னை:

1. சென்னையில் எம்.டி. படிப்பிற்காக ஒரு மாணவனுக்கு ரூபாய் 40,000 கடனாக வழங்கப்பட்டது.

2. நான்காம் வகுப்பு படிக்கும் அல்லாஹ் பக்ஷ் என்ற மாணவனுக்கு ரூபாய்  3460/- வழங்கப்பட்டது. மற்றொரு மாணவனுக்கு ரூபாய் 3000/- வழங்கப்பட்டது.

3. இராயபுரத்தில் கேன்சர் சிகிசைக்காக ஒரு நபருக்கு ரூபாய் 10,000/- வழங்கப்பட்டது. 

4. உனைஸ் ரஹ்மான் என்ற 13 மாத குழந்தைக்கு இருதய அறுவை சிகிச்சை செய்வதற்காக ரூபாய் 15,000 வழங்கப்பட்டது.

5. டயாலிஸிஸ் செய்வதற்காக ஒருவருக்கு ரூபாய் 1300/- உதவித்தொகை வழங்கப்பட்டது. 

6. வியாபாரம் செய்ய ஒருவருக்கு ரூபாய் 5000/- வழங்கப்பட்டது.

7. சென்னை துறைமுகம் தொகுதியிலிருந்து ஏழை பெண்ணின் திருமணத்திற்காக‌ ரூபாய் 3000/- வழங்கப்பட்டது.

இராமநாதபுரம்:

1. இராமநாதபுரத்தில் அப்பென்டிக்ஸ் சிகிச்சை செய்வதற்கு உதவியாக ஹாலித் என்பவருக்கு ரூபாய் 10,600/- வழங்கப்பட்டது.

2. இளையான்குடியில் திருமண உதவியாக ரூபாய் 2000/- வழங்கப்பட்டது.

கோவை:

1. கோவையில் சுண்ணாம்பு கால்வாயில் கூலி வேலை செய்துவரும்  எஸ். அபுதாஹிர் என்பவரின் இரண்டரை வயது மகன் முஹம்மது சவ்ஹானுக்கு பிறவிலேயே கேட்கும் திற‌னும், பேசும் திறனும் இல்லை. அந்த குழந்தையின் அறுவை சிகிச்சைக்காக ரூபாய் 10200/- கொடுக்கப்பட்டது. (அறுவை சிகிச்சைக்கு சுமார் 6 லட்ச ரூபாய் செலவாகும். மேற்கொண்டு உதவி வழங்க விரும்புவோர் தொடர்பு தொடர்புகொள்ளலாம்.)

2. மருத்துவ உதவியாக 4 நபர்களுக்கு மொத்தம் 5800/- வழங்கப்பட்டுள்ளது. 

3. கோவை புதூரில் திருமண உதவியாக ரூபாய் 8000/- மதிப்புள்ள‌ உணவு பொருட்கள் வழங்கப்பட்டது.

4. சாய்பாபா காலணியில் ரூபாய் 5000/- திருமண உதவி செய்யப்பட்டது. 

5. ஷாஜஹான் என்பவருக்கு புத்தக கடை வைக்க கடனாக ரூபாய் 30,000 வழங்கப்பட்டது. 

6. அல் அமீன் என்பவருக்கு ஆட்டோ வாங்க ரூபாய் 20,000/-  கடனுதவி செய்யப்பட்டது. 

7. கல்வி உதவித் தொகையாக ரூபாய் 5000/- வழங்கப்பட்டது.

நெல்லை:

1. செங்கோட்டையில் திருமண உதவியாக ரூபாய் 2000/- வழங்கப்பட்டது.

2. தென்காசியில் திருமண உதவியாக ரூபாய் 1000/- வழங்கப்பட்டது.

மதுரை:

1. மதுரையில் எம்.எஸ்சி படிப்பிற்காக  ஒரு சகோதரிக்கு ரூபாய் 8000/- உதவித்தொகை வழங்கப்பட்டது. 

2. மருத்துவ உதவியாக ரூபாய் 2000/- வழங்கப்பட்டது.

திருச்சி:

1. திருச்சி மாவட்டம் புத்தாநத்த்தில் மிகவும் வறுமை நிலையில் இருக்கும் ஒரு குடும்பத்திற்கு பொருளாதார உதவியாக ரூபாய் 14000/- வழங்கப்பட்டது. 

2. சிறுகனூர் கிராமத்தில் கல்வி உதவித்தொகை ரூபாய் 3000/- வழங்கப்பட்டது.

நாகப்பட்டினம்:

1. நாகையில் முஹம்மது நாகூர் என்பவருக்கு கல்வி உதவியாக ரூபாய் 5000/- வழங்கப்பட்டது.

2. மருத்துவ உதவியாக காதர் என்பவருக்கு ரூபாய் 4000/- வழங்கப்பட்டது.

தூத்துக்குடி:

1. தூத்துக்குடி சிவகளையில் அஸ்கர் என்பவருக்கு மருத்துவ உதவியாக ரூபாய் 1500/- வழங்கப்பட்டது.

திண்டுக்கல்:

1. பழனி பெரியகுளத்தை சேர்ந்த ஹஸன் முஹம்மது என்பவருக்கு திருமண உதவித் தொகையாக ரூபாய் 5662/- வசூல் செய்து கொடுக்கப்பட்டது.

2. கீரணூரில் ஒரு சகோதரியின் திருமணத்திற்கு ரூபாய் 13600/- வழங்கப்பட்டது. 

3. ஆதரவற்ற பெண் ஒருவருக்கு மாதமாதம் ரூபாய் 150/- வழங்கப்பட்டு வருகிறது.

4. திண்டுக்கலில் தையல் பயிற்சி நிலையம் துவங்குவதற்கு முதல் கட்டமாக ரூபாய் 3000/- வசூல் செய்யப்பட்டது.


பல்வேறு சிகிச்சைக்காக பாப்புலர் ஃப்ரண்ட் சகோதரர்கள் மார்ச் மாதத்தில் மட்டும் 65 யூனிட் இரத்த தானம் செய்துள்ளார்கள்.

thanks to pfi

0 comments:

Post a Comment