Monday, March 26, 2012

ஆம்புலன்ஸ் சேவையை தேசிய தலைவர் தொடங்கிவைத்தார்


கன்னியாகுமரி: பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சமூக மேம்பாட்டுத்துறையின் சார்பாக குமரி மாவட்டத்தில் நேற்று நடந்த நிகழ்ச்சியின் போது தேசிய தலைவர் இ.எம். அப்துர்ரஹ்மான் அவர்கள் ஆம்புலன்ஸ் சேவையை தொடங்கிவைத்தார்.

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக நேற்று மாலை கன்னியாகுமரி மாவட்டம் கோட்டாரில் ஆம்புலன்ஸ் சேவை தொடக்கம் மற்றும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தேசிய தலைவர் இ.எம். அப்துர்ரஹ்மான், தமிழ் மாநில தலைவர் ஏ.எஸ்.இஸ்மாயில், மூத்த பத்திரிக்கையாளர் கொடிக்கால் செல்லப்பா, ஆகியோர் கலந்து கொண்டு உரை நிகழ்த்தினார்கள்.

இது தவிர‌ சமூகத்தின் பல்வேறு தலைவர்களும் முக்கிய பிரமுகர்களும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

1. ஜனாப் எஸ். அப்துல் கஃபூர் (தலைவர், மாலிக் தினார் பைத்துல்மால், கோட்டார்)

2. மெளலவி ஃபஜ்லுல் ஹக் மன்பஈ (தலைமை இமாம், கோட்டால் இலங்காடு முஸ்லிம் கம்யூனிட்டி டிரஸ்ட்)

3. அல் ஹாலித் (இஸ்லாமிய சேனல், கன்னியாகுமரி)

4. ஜி.எம் ஷா (தலைவர், அனைத்து மஸ்ஜித் ஜமாத்களின் கூட்டமைப்பு, கன்னியாகுமரி)

5. செளகத் அலி உஸ்மான் (இமாம், இஸ்லாமிய கலாச்சார மையம், நாகர்கோவில்)


6. டாக்டர் எஸ். பிலஸ்டு சிங் (பேராசிரியர், டாக்டர் எஸ்.எம்.சி.எஸ்.ஐ மருத்துவ கல்லூரி, திருவனந்தபுரம்)

7. நெல்லை முபாரக் (பொதுச்செயலாளர், எஸ்.டி.பி.ஐ)

8. ஜனாப் பீர் முஹம்மது (கன்னியாகுமரி இஸ்லாமிய முன்னேற்ற சங்கம்)


ஆகியோர் கலந்து கொண்டனர்.



0 comments:

Post a Comment