Friday, March 9, 2012

பாப்புலர் ஃபிரன்ட் ஆஃப் இந்தியாவை பற்றி அவதூறு பரப்பி கொண்டு இருக்கும் பத்திரிகைகளின் நிலைமை .


அவர்களும் சூழ்ச்சி செய்கிறார்கள் அல்லாஹ்வும் சூழ்ச்சி செய்கிறான் , சூழ்ச்சி செய்வோரில் எல்லாம் அல்லாஹ்வே மிக்க மேலானவன்.
சூரா அல்-அன்பால் :30

கடந்த ஒரு மாதத்தில் மட்டும் பாப்புலர் ஃபிரன்ட் ஆஃப் இந்தியாவை சிமியுடன் தொடர்புபடுத்தி அல்லது இஸ்ரேலிய தூதரக குண்டு வெடிப்புடன் தொடர்புபடுத்தி வட இந்திய மற்றும் ஆங்கில ஊடகங்களின் மூலம் இருபதிற்கும் மேற்பட்ட கட்டுரைகள் வெளிவந்துள்ளன,
பல்லாயிரக்கணக்கான மக்கள் திரள் சக்தியாக பாப்புலர் ஃபிரன்ட் வெளிவந்த பின்பும் இந்திய உளவுத்துறையும் ,இஸ்ராயிலும் இணைந்து இந்த இயக்கத்தை தடை செய்ய திட்டமிட்டு செயல்படுகின்றன.
இந்தியாவிலிருந்து மிகத்தீவிரமாக இஸ்ரேலிய மற்றும் ஏகாதிபத்திய எதிர்ப்புடன் செயல்படும் ஒரு இயக்கம் இப்பொழுது அவர்களுக்கு மிகப்பெரும் அச்சுறுத்தலாக உள்ளது ,
The Pioneer,
Dainik Jagran ,
Nav Bharat Times ,
The Inquilab,
Deccan Chronicle ,
CNN & IBN live(Lie) ,
Times Of india
போன்ற பத்திரிக்கைகள் அவதூறுகளையும் கட்டுக்கதைகளையும் பரப்புவதில் முன்னணியில் உள்ளன , இவற்றில் ஏதாவது ஒன்றில் தினமும் பாப்புலர் ஃபிரன்ட் இந்தியாவிற்கெதிராக ஏதாவது ஒரு கட்டுரை பிரசுரிக்கப்படுவதை நீங்கள் காண முடியும்.

அவர்கள் எத்தகையோரென்றால்,(ஒருசில) மனிதர்கள் அவர்களிடம் வந்து ; “திடமாக மக்களில் (பலர் உங்களுடன் போரிடுவதற்காகத்) ஒன்று கூடியிருக்கிறார்கள் , ஆதலால் அவர்களை பயந்து கொள்ளுங்கள்” என்று கூறி (அச்சுறுத்தி)னர்; ஆனால் இ(க்கூற்றானது) அவர்களுக்கு(ப் பயம் ஏற்படுத்துவதற்கு பதிலாக அல்லாஹ்வின் மீதான நம்பிக்கையை அதிகப்படுத்தியது : மேலும் “அல்லாஹ்வே எங்களுக்குப் போதுமானவன். பாதுகாவலர்களில் அவனே மிக்க நல்லவன் ” என்று அவர்கள் கூறினார்கள்.

சூரா ஆல-இம்ரான் : வசனம் 173

0 comments:

Post a Comment