Tuesday, March 20, 2012

சிங்கள பயங்கரவாததிற்கு ஆதரவு அளித்த RSS இயக்கம்!


 ஐ.நா.,வில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டுவரும் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்கக் கூடாது.

இந்த விஷயத்தில் இந்தியா ஒரு முழுமையான நிலைப்பாட்டை மேற்கொள்ள வேண்டும் என்று  ""RSS இயக்கத்தின்அதிகாரப்பூர்வ பத்திரிகையான ஆர்கனைசரில் செய்தி வெளியாகி உள்ளது.

இந்தியாவின் பூகோள ரீதியான நன்மையை  கணக்கில் கொண்டு, உறுதியான நிலைப்பாட்டை  எடுக்க வேண்டும்.மேற்கத்திய நாடுகள் முழுமையான ஒரு கவலையுடன்இந்த தீர்மானத்தை கொண்டு வரவில்லை. ஜனநாயக ரீதியாக தேர்வு செய்யப்பட்ட அரசின் விஷயத்தில், அமெரிக்காவோ, ஐரோப்பிய நாடுகளோ தலையிட வேண்டிய அவசியம் இல்லை. 

இலங்கை அரசுக்கு எதிராக, மனித உரிமை மீறல் குற்றச்சாட்டை கூறும் போது, அவர்களுக்கு எதிராக சண்டையிட்ட விடுதலைப் புலிகளை அமைதியானவர்கள் என்றோ, ஆயுதமற்றவர்கள்என்றோ கூற முடியாது. நவீன துப்பாக்கிகள், ராக்கெட் லாஞ்சர்கள், டாங்குகள் என, முழுமையான படைக்கலம் அவர்களிடம் இருந்தது.

சிந்திக்கவும்:  காந்தி படுகொலை, தொடர் குண்டு வெடிப்பு, மதக்கலவரங்கள்  என்று இந்தியாவில் பல பயங்கரவாத செயல்களில் நேரடியாகவும், மறைமுகமாகவும் ஈடுபட்டு வந்த ஒரு இயக்கம்தான் RSS இயக்கம். ஒரு பயங்கரவாததிற்கு இன்னொரு பயங்கரவாதத்தால் தான் துணை போக முடியும் என்பதை இதன் மூலம் RSS நிரூபித்துள்ளது.

RSS இயக்கத்தின் அடிவருடிகளான  சுப்பிரமணிய சுவாமி, மற்றும் பார்பன கூட்டங்கள் ஈழத்து இன அழிவுக்கு எதிராக ராஜீவ் காந்தி கொலையை காரணமாக சொல்லி அதை திசை திருப்ப முயன்றனர். வசதியாக ராஜீவ் அமைதிப்படை என்கிற கொலைகார படை மூலம் நடத்திய அக்கிரமங்களை மறைத்தனர். 

ஈழத்திலே அமைதி ஏற்படுத்துகிறோம்  என்று சொல்லி அப்பாவி மக்களை, பெண்களை, குழந்தைகளை  கொன்று குவித்து, பெண்களை கற்பழித்து மானபங்கப்படுத்தி கொடூரங்களைநிகழ்த்திய ஒரு கேவலமான படையை அனுப்பி பிரதமர் என்கிற ஒரு உயர்பதவியை பயன்படுத்தி பயங்கரவாத செயல்புரிந்தார் ராஜிவ்காந்தி. 

மேற்கத்திய நாடுகள் முழுமையான ஒரு கவலையுடன் இந்த தீர்மானத்தை கொண்டு வரவில்லை என்று  கூறுவது  குஜராத் இனப்படுகொலை, காஷ்மீரில் ராணுவ பயங்கரவாதம், சத்திஸ்கரில் பழங்குடி மக்களுக்கு எதிராக ராணுவ நடவடிக்கை போன்றவற்றை நடத்திய ஆர்.எஸ்.எஸ். மற்றும் இந்தியா நிகழ்த்திய பயங்கரவாதங்கள் வெளிஉலகிற்கு வந்துவிடுமோ என்கிற அச்சம். 

இலங்கையில் நடந்த போர் குற்றம் நிரூபிக்கப்பட்டால் தை தொடர்ந்து இந்தியாவில் நடந்தமதக்கலவரங்களும், ராணுவ, மனித உரிமை மீறல்களும் உலக அரங்கில் கொண்டு செல்லப்படும். ஏற்கனவே மோடிக்கு அமெரிக்காவுக்கு போவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. உலக அளவில் பல்வேறு பெயர்களில் இயக்கங்கள் நடத்தி நிதிவசூல் செய்து வருகிறது RSS இயக்கம்.  உலக அரங்கில் RSS ஒரு  பயங்கரவாத இயக்கம் என்று வெளிப்படையாக அறிவிக்கப்பட்டால் அதன் நிதிவருவாய் நின்றுபோகும் என்கிற பயம்.

ஹிந்துக்களை, ஹிந்து கோவில்களை பாதுகாக்கிறோம், ராமருக்கு கோவில் கட்ட போகிறோம்என்று சொல்லி மசூதியை இடித்த சூரப்புலிகள் இப்போது யாழ்பாணத்தில் இருக்கும்கோவில்களை இடித்து அதில் புத்த விகார் காட்டுகிறான் சிங்கள வெறியன். அதை குறித்து ஆர்.எஸ்.எஸ். மற்றும் அவர்களின் பரிவாரங்களான இந்து முன்னணி, பஜ்ரங்தள், சிவசேனை, இந்து மக்கள் கட்சி என்று ஒருத்தனும் வாய்திறக்க வில்லை.

ஈழத்திலே கொல்லப்பட்டது ஹிந்துக்கள் இல்லையா?  ஈழத்து ஹிந்துக்களால் தங்களுக்கு ஒரு  லாபமும் இல்லை அதுதான் இந்த மவுனத்திற்கு காரணம். இது இந்தியாவை ஆட்சி செய்ய பிராமணர்கள் போட்ட ஹிந்து முகமூடி. ஆனால் கஷ்மீர் இந்துக்களை பற்றி மட்டும் ரொம்ப கவலைப்படுவார்கள் ஏன் என்றால் அது  உயர் ஜாதி பண்டிட்டுகள் ஆட்சேஜாதிகொடுமையால் கொல்லப்படும் தலித் மக்கள் குறித்து பேசமாட்டார்கள். அதுகுறித்து கேட்டால்? ஜாதி ஏற்றத்தாழ்வு வேண்டும்! ஆனால் ஜாதி கொடுமை கூடாது என்று விநோதமாக பதிலளிப்பர்.


இலங்கையில் பல்லாயிரக்கணக்கில் அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர். அதுகுறித்து நீதி விசாரணை தேவை என்பதை மனித நேயம் கொண்ட யாராலும் மறுக்க முடியாது.  போரில் கடைபிடிக்கப்பட வேண்டிய விதிமுறைகள் அனைத்தும் அங்கே மீறப்பட்டுள்ளதுஇதை சானல் 4  வீடியோ ஆவணம் தெளிவாக விளக்குகிறது. தீர்மானத்தை யார் கொண்டுவருகிறார்கள் என்பது இங்கே முக்கியம் அல்ல அந்த மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதையே மனித நேயம் கொண்ட ஒவ்வொருவரின் கருத்தாகும்.

    *மலர்விழி*        
thanks to sinthikkavum blogger

0 comments:

Post a Comment