Tuesday, March 20, 2012

இன்றிய பொதுமக்களின் எழுத்தாக்கம் - நாம் யார் ?

நாம் யார் ?
 

வளமையான 
வாழ்விற்காக 
இளமைகளை 
தொலைத்த 
துர்பாக்கியசாலிகள் ! 

வறுமை என்ற 
சுனாமியால் 
அரபிக்கடலோரம்
கரை ஒதுங்கிய 
அடையாளம் தெரிந்த
நடை பிணங்கள் !

சுதந்திரமாக 
சுற்றி திரிந்தபோது 
வறுமை எனும்
சூறாவளியில் சிக்கிய 
திசை மாறிய பறவைகள் !

நிஜத்தை தொலைத்துவிட்டு
நிழற்படத்திற்கு 
முத்தம் கொடுக்கும் 
அபாக்கிய சாலிகள் ! 

தொலைதூரத்தில்
இருந்து கொண்டே
தொலைபேசியிலே
குடும்பம் நடத்தும் 
தொடர் கதைகள் ! 

கடிதத்தை பிரித்தவுடன்
கண்ணீர் துளிகளால் 
கானல் நீராகிப் போகும் 
மனைவி எழுதிய
எழுத்துக்கள்! 

ஈமெயிலிலும் 
இண்டர்நெட்டிலும் 
இல்லறம் நடத்தும் 
கம்ப்யூட்டர் வாதிகள் ! 

நலம் நலமறிய
ஆவல் என்றால் 
பணம் பணமறிய
ஆவல் என கேட்கும் 
ஏ . டி . எம் . மெஷின்கள் ! 

பகட்டான
வாழ்க்கை வாழ
பணத்திற்காக 
வாழக்கையை 
பறி கொடுத்த 
பரிதாபத்துக்குரியவர்கள் ! 

ஏ . சி . காற்றில்
இருந்துக் கொண்டே 
மனைவியின்
மூச்சுக்காற்றை
முற்றும் துறந்தவர்கள் !

வளரும் பருவத்திலே
வாரிசுகளை
வாரியணைத்து 
கொஞ்சமுடியாத 
கல் நெஞ்சக்காரர்கள் ! 

தனிமையிலே 
உறங்கும் முன் 
தன்னையறியாமலே 
தாரை தாரையாக
வழிந்தோடும்
கண்ணீர் துளிகள் ! 

அபஷி என்ற அரபி 
வார்த்தைக்கு 
அனுபவத்தின் மூலம் 
அர்த்தமானவர்கள் !

உழைப்பு என்ற
உள்ளார்ந்த அர்த்தத்தை 
உணர்வுபூர்வமாக
உணர்ந்தவர்கள்! 

முடியும் வரை
உழைத்து விட்டு
முடிந்தவுடன்
ஊர் செல்லும்
நோயாளிகள் ! 

கொளுத்தும் வெயிலிலும் ........
Sayed Kasali 

0 comments:

Post a Comment