Sunday, March 25, 2012

Muthupettai Express பழனி பாபாவை பற்றிய ஓர் ஆவணப்படம் விரைவில், ஆளூர் ஷாநவாஸ் பேட்டி!




சென்னை,மார்ச் 24 : இறந்து போன பழனி பாபா அவர்களைப் பற்றிய ஆவணப்படம் எடுப்பதற்கு என்ன காரணம்? என்ற தலைப்பில் முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தளத்திற்கு சமூக ஆர்வலர் மற்றும் பிரபல எழுத்தாளர் ஜனாப். அளூர் ஷாநவாஸ் அவர்கள் அளித்த பேட்டி பின்வருமாறு:
காய்தே மில்லத் அவர்களைப்பற்றி ஆவணப்பட உருவாக்கத்தில் ஏற்பட்ட பின்னடைவு பழனி பாபா அவர்களைப்பற்றிய அவானப்பட உருவாக்கத்தில் ஏற்பட வாய்ப்பில்லை என்றும், அவர் தெரிவித்தார். ஏனென்றால் பழனி பாபா நாம் வாழும் காலத்திலேயே வாழ்ந்தவர் என்றும், அவரது பேச்சுகள் அனைத்தும் காட்சி வடிவில் பதிவு செய்யப்பட்டுள்ளன என்றும் அவர் தெரிவித்தார். மேலும் பழனி பாபாவோடு பழகியவர்களும், அரசியல் நடத்தியவர்களும் நம்மோடு வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். எனவே அவரைப்பற்றிய ஆவணப்படம் என்பது மிக எளிதாகவும், விரைவாகவும் செய்து விடக்கூடிய ஒன்றுதான் என்றும் அவர் தெரிவித்தார். மேலும் அதற்க்கான முயற்சிகளில் தற்போது ஈடுபட்டுள்ளோம். விரைவில் அந்த தலைவரின் வரலாறும் ஆவணப்படமாய் உங்கள் கைகளில் தவழும் இன்ஷா அல்லாஹ். 
source from: www.mttexpress.com
தொகுப்பு

ரிப்போர்ட்டர் இல்யாஸ், ASNS . அப்துல் பாரி, EKA .முனவ்வர் கான், ரிப்போர்ட்டர் முஹைதீன் பிச்சை. 

0 comments:

Post a Comment