Sunday, April 29, 2012

சிறுமி நரபலிக்காக 6 லட்சம் ரூபாய் கொடுத்தேன்: கைதான தி.மு.க. பிரமுகர் பரபரப்பு வாக்குமூலம்

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே உள்ள கச்சைக்கட்டியை சேர்ந்தவர் தொத்தன் என்ற தொத்தல், விவசாய கூலி தொழிலாளி. இவரது மனைவி அன்னக்கிளி. இந்த தம்பதிக்கு ராஜலட்சுமி (வயது5) என்ற மகள் இருந்தாள். அங்குள்ள பள்ளியில் 1-ம் வகுப்பு படித்து வந்தார்.  கடந்த 1.1.2011 அன்று வீட்டு அருகில் விளையாடி கொண்டு இருந்த ராஜலட்சுமி திடீர் என மாயமானாள். பெற்றோர் பல இடங்களில் தேடினர். எங்கும் அவளை காணவில்லை. மறுநாள் அதே பகுதியை சேர்ந்த வீரணன் என்பவரின் மாட்டு...

பின்லேடன் கொலையை தேர்தலுக்கு பயன்படுத்தும் ஒபாமா

அமெரிக்க அதிபர் தேர்தல் வருகிற நவம்பர் 6-ந்தேதி நடக்கிறது. அதில் ஆளும் ஜனநாயக கட்சி வேட்பாளராக அதிபர் ஒபாமா மீண்டும் போட்டியிடுகிறார். எதிர்க்கட்சி வேட்பாளராக குடியரசு கட்சியைச் சேர்ந்த மிட்ரோம்னி களம் இறங்குகிறார். இவர் அதிபர் ஒபாமாவுக்கு கடும் போட்டியாக திகழ்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.  எனவே பிரசாரம் கடுமையாக இருக்கும் என தெரிகிறது. அதில் சர்வதேச பயங்கரவாதி பின்லேடன் கொல்லப்பட்ட விவகாரம் முக்கிய பங்கு வகிக்கிறது. ஏனெனில் பின்லேடன்...

ஜாதிவாரியான மக்கள் தொகை கணக்கெடுப்பில் முஸ்லீம்களை பதிவுசெய்வொம்!.

இந்தியா முழுவதும் ஜாதிவாரியாக மக்கள்தொகை எண்ணிக்கையை வைத்துத்தான் இடஒதுக்கீடு உட்பட அனைத்து சலுகைகளையும் அரசு சமூகங்களுக்கு வழங்கி வருகின்றது. 2001-ம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இந்தியாவில் முஸ்லீம்கள் 13.4 சதவிகிதமும், தமிழகத்தில் முஸ்லீம்கள் 5.6 சதவிகிதமும் வாழ்ந்து வருவதாக புள்ளிவிவரம் தெரிவிக்கின்றது. ஆனால் அப்போதே பல்லாயிரக்கணக்கான முஸ்லீம்களின் எண்ணிக்கையை இக்கணக்கெடுப்பில் சேர்க்காமல் விட்டுவிட்டனர்.எனவே தற்போது நடைபெறும் ஜாதிவாரியான கணக்கெடுப்பு நமக்கு ஒரு நல்ல வாய்ப்பாகும். இதில் அனைத்து முஸ்லீம்களின் பெயரும் கண்டிப்பாக பதிவு...

டெரரிஸ்டுகள் அல்ல மாவோயிஸ்டுகள்!

சென்னை: பயங்கரவாதம் என்பது தேசம் எதிர்கொள்ளும் பிரச்சனைகளில் முக்கியமானதொன்றாகும். காரணம் பயங்கரவாத தாக்குதல்களினால் எண்ணெற்ற உயிர் சேதங்கள், பொருட்சேதங்களும் ஏற்பட்டதோடு மட்டுமல்லாமல் மக்கள் மத்தியில் இந்த பயங்கரவாத தாக்குதல்கள் ஒரு வித பீதியை ஏற்படுத்தியுள்ளது என கூறலாம். இந்தியாவில் பயங்கரவாத தாக்குதல்களை நிகழ்த்துவதற்கு சங்கப்பரிவார ஃபாசிஸ்டு தீவிரவாதிகளை விட கொரூரமானவர்கள் உண்டு என்றால் அது கம்யூனிஸ தீவிரவாதமான மாவோயிஸ்டுகள் தான்....

Friday, April 27, 2012

சென்னையில் பயங்கர சப்தத்துடன் வெடித்த வெடி குண்டு...

சென்னை,ஏப்ரல் 27 : ‌கீ‌ழ்‌ப்பா‌க்க‌‌த்‌தில் ‌பழமை வா‌ய்‌ந்த வீ‌ட்டு வச‌தி வா‌ரிய குடி‌யிரு‌ப்‌பு உ‌ள்ளது. ‌இ‌தன் ‌கீ‌ழ்‌ பகு‌தி‌யி‌ல் 10 கடைக‌ள் வாடகை‌க்கு ‌விட‌ப்ப‌ட்டு‌ள்ளது. முத‌ல் மாடி‌யி‌ல் த‌ங்கு‌ம் ‌அறைக‌ள் க‌ட்ட‌ப்‌ப‌ட்டு வாடகை‌க்கு விடப்பட்டுள்ளது. முத‌ல் மாடி‌யிலுள ஒரு அறை‌யி‌ல் தூ‌த்து‌க்குடியை சே‌ர்‌ந்த ச‌த்யா, சுக‌ந்த‌ன் ஆ‌கியோ‌ர் வ‌சி‌த்து வ‌ந்து‌ள்ளன‌ர். நேற்று ந‌ள்‌ளிரவு 1.30 மண‌ி‌க்கு அவ‌ர்க‌ள் த‌ங்‌கி‌யிரு‌ந்த அறை‌யி‌ல் நா‌ட்டு...

வீடியோ கேம் வாங்கித் தராத தந்தையைச் சுட்டுக் கொன்ற 4 வயது சிறுவன்

சவுதி அரேபியாவில் தனது தந்தையை 4 வயது மகன் சுட்டுக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சவுதி அரேபியாவின் தெற்கு ஜிசான் பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளதாக அந்நாட்டு அஸ்ராக் பத்திரிக்கை செய்தி வெளியிட்டுள்ளது. தந்தையிடம் பல நாட்களாக வீடியோ கேம் வாங்கித் தருமாறு நச்சரித்து கொண்டிருந்த அச்சிறுவன் அலுவலகம் சென்ற தந்தை வெறும் கையுடன் வந்ததை பார்த்து கோபமடைந்துள்ளான். தந்தை உடை மாற்றும் போது கீழே வைத்த அவரது துப்பாக்கியை எடுத்து அவரை சுட்டுள்ளான்....

சிரியாவில் கட்டடத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில், 70 பேர் பலி

ஹாமா:சிரியாவில், நேற்று ஆயுதங்கள் சேமிக்கப்பட்டிருந்த கட்டடத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில், 70 பேர் பலியாயினர்.சிரியாவில், அதிபர் பஷீர் அல் ஆசாத் ஆட்சியை எதிர்த்து, ஓராண்டுக்கும் மேலாக, போராட்டங்கள் நடந்து வருகின்றன. போராட்டக்காரர்களை ராணுவத்தினர் ஒடுக்கி வருகின்றனர். இதில், பல ஆயிரம் பேர் பலியாகியுள்ளனர். இந்நிலையில், ஹாமா மாகாணத்தின் மாஷா அல் தயார் மாவட்டத்தில், போராட்டக்காரர்களால் ஆயுதங்கள் சேமித்து வைக்கப்பட்டிருந்ததாகக் கருதப்படும்...

ஆசியாவை குறிவைக்கும் அமெரிக்க உளவுப் பிரிவு !

வாஷிங்டன்:ஆசியாவில் வளர்ந்துவரும் நாடுகளை குறிப்பாக ஈரானையும், சீனாவையும் குறிவைத்து அமெரிக்க பாதுகாப்புத்துறை புதிய உளவு நெட்வர்க்கை துவங்குகிறது. பாதுகாப்பு செயலாளர் லியோன் பனேட்டா இதற்கு அனுமதி வழங்கியுள்ளதாக நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை கூறுகிறது. புதிய உளவுப்பிரிவு சி.ஐ.ஏ மற்றும் இதர அமெரிக்க உளவுத்துறைகளுடன் ஒத்துழைத்து இயங்கும். சர்வதேச அளவில் நடவடிக்கைகளை பலப்படுத்தும் வகையில் புதிய ஏஜன்சியை உருவாக்கி இருப்பதாக பாதுகாப்பு துறையில்...

வஹாபிகள் – பரேலவிகள் : முஸ்லீம்களின் பிரிவினையை தூண்டி விட்டு குளிர் காயும் மத்திய அரசு !

ஒரே மதத்தை பின்பற்றுவர்களுக்கு மத்தியில் சிறு சிறு கருத்து வேறுபாடுகள் இருப்பது சகஜம் தான். ஆனால் அவற்றை ஒன்றுபடுத்த முடியவில்லையென்றாலும் குறைந்தபட்சம் அவற்றுக்கு மத்தியில் பிரிவினைக்கு தூபம் போடும் அபாயகரமான வேலையை ஒரு அரசு, அதுவும் மதசார்பற்ற அரசு செய்வது பிற்காலத்தில் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை பஞ்சாப் விஷயத்தில் அடிபட்டு உணர்ந்த பிறகும் காஷ்மீரில் அதை மத்திய அரசு தொடர்வது விந்தையாக உள்ளது. ஏற்கனவே பஞ்சாபில் ஆயுதம் தாங்கிய சீக்கியர்களை...

ஹைதராபாத் கலவரம்:அரசியல் ஆதாயம் தேட ஹிந்துத்துவா சக்திகளின் சதித்திட்டம் – உண்மை கண்டறியும் குழு!

புதுடெல்லி:ஹைதராபாத் பழைய நகரத்தில் நடந்த வகுப்பு கலவரம் இரு சமூகங்கள் இடையே வகுப்பு பிரிவினையை உருவாக்கி ஆதாயம் தேட முயன்ற ஹிந்துத்துவா சக்திகளின் சதித்திட்டம் என்று உண்மைக் கண்டறியும் குழுவின் அறிக்கை கூறுகிறது.   வகுப்புக் கலவரத்தின் மூலம் 2014-ஆம் ஆண்டு நடைபெறவிருக்கும் ஆந்திரபிரதேச மாநில சட்டப்பேரவை தேர்தலிலும் மக்களவை பொதுத் தேர்தலிலும் ஆதாயம் தேடுவதே ஹிந்துத்துவா சக்திகளின் நோக்கம் என்றும், கலவரத்திற்கான சதித்திட்டத்தில் அரசியல் கட்சிகளுக்கும்...

சமூக நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் ஏ.பி.வி.பி - கேம்பஸ் ஃப்ரண்ட் குற்றச்சாட்டு

சங்கப்பரிவார கும்பல்களின் மாணவர் பிரிவான "அகில பாரதிய வித்யார்த் பரிஷத்" ஹைதராபாத் உஸ்மானிய பல்கலைகழகத்தில் சமூக நல்லிணக்கத்தை சீர்குலைப்பதாக கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் ஆந்திர‌ மாநில தலைவர் டாக்டர் செய்யது பரகத்துல்லாஹ் குற்றஞ்சாட்டியுள்ளார். சங்கப்பரிவார்களின் தீர்மானங்களை ஏ.பி.வி.பி செயல்படுத்தி வருவதாகவும், தலித் மற்றும் சிறுபான்மை மக்கள் மத்தியில் நிலவி வரும் நல்லிணக்கத்தை சீர்குலைக்க முயற்ச்சித்து வருவதாகவும் கூறியுள்ளார்.ஹைதராபாத்...

விடியல் வெள்ளியின் சந்தாதாரர் ஆவீர்!

உலகளவிலும், தேசிய அளவிலும் முஸ்லிம்களின் அவலை நிலையை சமூக மக்களிடம் கொண்டு சேர்க்கும் பணியை "விடியல் வெள்ளி" மாத இதழ் பல ஆண்டுகளாக சிறப்பாக செய்து வருவது தாங்கள் அறிந்த ஒன்றே. சிறிய வடிவிலான ஏடாக தொடங்கப்பட்ட இந்த இதழ் இறைவனின் கிருபையால் தற்போது மாதந்தோரும் 25,000ற்கும் மேற்பட்ட எண்ணிக்கையில் அச்சிடப்பட்டு வருகிறது. தமிழக முஸ்லிம்களின் வரலாற்றில் ஃபாசிஸ சங்கப்பரிவாரங்களின் அட்டூழியங்களை முதன் முதலில் சமூகத்திற்கு எடுத்துறைத்த பெருமை விடியல் வெள்ளியையே சாரும். தமிழகத்தில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா என்ற இயக்கம் பெயர் இல்லாமல் செயல்பட்ட...

புதுடெல்லியில் இஸ்ரேலை கண்டித்து எழுச்சியுடன் நடைபெற்ற பேரணி

புதுடெல்லி: உலக பயங்கரவாத நாடான இஸ்ரேலுடன் எவ்வித உறவையும் ஏற்படுத்தக்கூடாது என்றும், இதுவரை அந்நாட்டோடு இருக்கின்ற எல்லா உறவுகளையும் ரத்து செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி முஸ்லிம் சமுதாயத்தின் இயக்கங்கள் பல ஒன்றினைந்து இன்று காலை 10 மணியளவில் பாராளுமன்றம் நோக்கி மாபெரும் பேரணியை நடத்தியது. பெண்கள் உட்பட ஏராளமானோர் இதில் கலந்து கொண்டனர். விரிவான செய்திகள் பின்னர் வெளியிடப்படும் இன்ஷா அல்லாஹ்! பேரணிக்காட்சிகள் ...