Wednesday, February 29, 2012

போலீஸ் விளையாட்டு!

வேளச்சேரி என்கவுன்டர் தொடர்பாக பேராசிரியர் அ.மார்க்ஸ் தலைமையிலான உண்மை அறியும் குழு வெளியிட்டுள்ள இடைக்கால அறிக்கையில், 'ஐந்து பேரையும் கொன்று தீர்க்கும் நோக்குடன்தான் காவல்படை சென்றுள்ளது’ என்று கூறப்பட்டுள்ளது. இது குறித்துப் பேசிய பேராசிரியர் அ.மார்க்ஸ், ''கைது செய்யப்பட வேண்டியவர் மரண தண்டனை அல்லது ஆயுள் தண்டனை அளவுக்குரிய குற்றத்தை செய்திருந்தால் மட்டுமே, அவரைக் கொல்லலாம் என்று, இந்திய தண்டனைச் சட்டம் 46 தெளிவாகச் சொல்கிறது. போலீஸ் சொல்லும்...

ஈரானுக்கு முழு ஆதரவு - ரஷ்யா

ஈரான் மீது போர் தொடுக்கும் எந்த நாடாக இருந்தாலும் அவற்றை ரஷ்யாவும் எதிர்க்கும் என ரஷ்ய பிரதமர் வி ளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார்.அணு ஆயுதங்கள் இரு ப்பதாக கூறி ஈரான் மீது அழுத்தங்கள் தருவது தேவை யற்றது எனவும் கூறப்பட்டுள்ளது.வெளிநாட்டு கொள் கை பற்றிய புட்டின் வெளியிட்ட கட்டுரையொன்றில் ஈ ரான் மீது போர்த்தொடுக்கும் நாடுகள் கடுமையான விளைவை எதிர்நோக்கவேண்டி இருக்கும் எனவும் ஐநாவின் அனுமதியின்றி சிரி யா மீது தாக்குதல் நடத்தவும் கூடாது எனவும் குறிப்...

பல வருடங்களாக நடத்தும் சட்டரீதியான போர் என்னை தளர்த்தி விட்டது – கண்ணீருடன் ஸாக்கியா ஜாஃப்ரி

அஹ்மதாபாத்:குஜராத் இனப்படுகொலைக்கு தலைமை வகித்த முதல்வர் நரேந்திர மோடிக்கு எதிராக பல வருடங்களாக தொடரும் சட்டரீதியான போர் என்னை தளரச்செய்துவிட்டது என்று குல்பர்க் சொஸைட்டியில் கொடூரமாக கொலைச் செய்யப்பட்ட முன்னாள் காங்கிரஸ் எம்.பி இஹ்ஸான் ஜாஃப்ரியின் மனைவி ஸாக்கியா ஜாஃப்ரி கூறுகிறார்.“இனி எனக்கு சிறிது ஓய்வு தேவைப்படுகிறது. கடந்த 10 ஆண்டுகளாக எப்பொழுதும் என்னை சுற்றிலும் பாதுகாப்பு படையினர் நிற்கின்றனர். இந்த வயதில் என்னால் இயலாது” – மகன் தன்வீர்...

இனி எங்களுக்கு அணு உலையே வேண்டாம் : ஜப்பான் அலறல் !

 டோக்கியோ: இனி புதிய அணு மின் நிலையங்களை அமைப்பதில்லை என்றும், படிப்படியாக மாற்று மின் திட்டங்களை செயல்படுத்தப் போவதாகவும் ஜப்பான் அறிவித்துள்ளது. மேலும் இனி ஒரு அணுஉலை விபத்து வெடித்தாலோ, ஏற்கெனவே சேதமடைந்த புக்குஷிமா உலையிலிருந்து மீண்டும் கதிர்வீச்சு வெளிப்பட்டாலோ அதைச் சமாளிக்கும் நிலையில் ஜப்பான் இல்லை எனவும் அந்நாட்டு அரசே அறிவித்துள்ளது.சர்வதேச அளவில் அணுஉலைகள் குறித்த மாயையில் சிக்கியிருக்கும் நாடுகளுக்கு ஜப்பானின் இந்த அறிவிப்பு...

ஈரானின் அடுத்த எச்சரிக்கை. உலக வரை படத்திலிருந்து இஸ்ரேலை அழித்து விடுவோம்.

உலக வரை படத்திலிருந்து இஸ்ரேலை அழித்து விடுவோம், ஈரான் கடும் எச்சரிக்கை.எங்கள் நாட்டின் மீது போர் தொடுத்தால், இஸ்ரேல் என்ற நாடே இல்லாமல் போய்விடும்" என்று ஈரான் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஈரானின் அணு உலைகள் மீது கட்டுப்பாடு விதிக்க அமெரிக்கா முயற்சிகள் மேற்கொண்டதால் ஈரான், அமெரிக்கா இடையேயான மோதல் உச்சகட்டத்தை அடைந்துள்ளதுஅறிந்ததே.இதன் ஒரு பகுதியாக, இஸ்ரேலும் ஈரானைத் தாக்கப் போவதாகத் தெரிவித்தது. இந்நிலையில் ஈரான் மீது போர் தொடுக்கப்படுமானால்...

சம உரிமை பெற்றிட ....!!! முஸ்லிம் சமுகமே திரண்டுவா ....!!!

அஸ்ஸலாமு அழைக்கும் .... முஸ்லிம்களுக்கு இடஒதிக்கீடு மத்தியில் 10 % மாநிலத்தில் 7  %                   வேண்டும் என்ற முழக்கத்துடன் பாப்புலர் ப்ரண்ட் ஆஃப் இந்தியா        கோவை , மதுரை, சென்னை, தஞ்சாவூர், நெல்லை,                       ஆகிய இடங்களில்                  வரும் ஏப்ரல் 22...

Tuesday, February 28, 2012

நெல்லை மாவட்டம் , பத்தமடையில் நேசனல் விமன்ஸ் பிரண்ட்(NWF) சார்பில் பெண்களுக்கான மாபெரும் மார்க்க விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது.

அஸ்ஸலாமு அலைகும் ,  நெல்லை மாவட்டம் , பத்தமடையில் நேசனல் விமன்ஸ் பிரண்ட்(NWF) சார்பில் பெண்களுக்கான மாபெரும் மார்க்க விளக்க பொதுக்கூட்டம் 26/02/2012(ஞாயிறு) அன்று நடைபெற்றது. நெல்லை மாவட்ட நேசனல் விமன்ஸ் பிரண்ட்(NWF) தலைவர் சகோதரி. மும்தாஜ் ஆலிமா அவர்களின் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. நேசனல் விமன்ஸ் பிரன்ட் ஏன் ? எதற்கு ? என்ற தலைப்பில் சகோதரி . அனீஸ் பாத்திமா அவர்கள் NWF இன் அவசியத்தையும், அது செய்து வரும் பணிகளையும் விளக்கினார்கள்....

அமெரிக்காவின் 50 லட்சம் ரகசிய இமெயில்களை வெளியிட்டது விக்கிலீக்ஸ் !

 சிறிது காலம் அமைதியாக இருந்த விக்கிலீக்ஸ் நிறுவனம், அமெரிக்காவின் ‘ஸ்டிராட்ஃபோர்’ உளவு நிறுவனத்தின் 50 லட்சம் ரகசிய இமெயில்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. ஆஸ்திரேலியாவை சேர்ந்த பிரபல பத்திரிகையாளர் ஜூலியன் அசாஞ்ச் (40) நடத்திவரும் இணைய இதழ் ‘விக்கிலீக்ஸ்’. ஈராக் போர், ஆப்கன் போர் தொடர்பாக அமெரிக்க அரசு மிகமிக ரகசியமாக வைத்திருந்த முக்கிய ஆவணங்களை இந்நிறுவனம் 2010-ம் ஆண்டு வெளியிட்டது. கியூபாவின் குவான்டனாமோ சிறையில் நடக்கும்...

நியு சண்டே எக்ஸ்பிரஸ் பத்திரிக்கையின் குற்றச்சாட்டுகளுக்கு பாப்புலர் ஃப்ரண்ட் கண்டனம்

புதுடெல்லி: பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவைப் பற்றி எந்த அடிப்படை ஆதாரமும் இல்லாத பொய்யான செய்தியை வெளியிட்ட தி நியு சண்டே எக்ஸ்பிரஸ் பத்திரிக்கையை வன்மையாக கண்டிப்பதோடு அவர்களுக்கு பதில் கடிதத்தையும் அனுப்பியுள்ளது பாப்புலர் ஃபரண்ட்.டெல்லியில் வெளிவரும் பத்திரிக்கையான தி நியு சண்டே எக்ஸ்பிரஸ் பிப்ரவரி 26 ஞாயிற்று கிழமை அன்று பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா தொடர்பாக தவறான செய்தியை வெளியிட்டுள்ளது. இதனை வன்மையாக கண்டித்து பாப்புலர்...

10 வருடங்கள் ஆகியும் இரத்தக்கரையோடு இருக்கும் குஜராத்!

சென்னை: குஜராத் இனப்படுகொலை நடைபெற்று நேற்றோடு 10 வருடங்கள் கடந்து விட்டது. பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா குஜராத் கலவரத்தால் வீட்டை இழந்து, குடும்பத்தினரை இழந்து தவித்து வரும் அனைத்து குடும்பங்களுக்கும் தன்னுடைய ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறது.தங்களை மதச்சார்பற்ற கட்சிகள் என்று கூறிக்கொண்டு சிறுபான்மை மக்களின் ஆதரவோடு ஆட்சிக்கட்டிலில் அமர்ந்த எந்த அரசாங்கமும் நரவேட்டை நாயகனான நரேந்திர மோடியிடம் இருந்து குஜராத் மக்களை இன்று வரை பாதுகாக்க...

முஹம்மது நபியை குறித்து இயேசு முன்னறிவிப்புச் செய்யும் பைபிள் கண்டுபிடிப்பு !

இஸ்லாத்தின் இறுதி தூதரான முஹம்மது நபியை குறித்து இயேசு(ஈஸா நபி) முன்னறிவிப்புச் செய்யும் 15 நூற்றாண்டுகள் பழமையான பைபிள் துருக்கியில் கண்டெடுக்கப்பட்டது. பர்ணபாஸின் சுவிசேஷம் என்று அழைக்கப்படும் இந்த நூல் 12 ஆண்டுகளாக துருக்கியில் ரகசியமாக பாதுகாக்கப்பட்டு வந்துள்ளது. பைபிளில் கூறப்படும் பர்ணபாஸ்இயேசுவின் முக்கிய சீடராவார். இந்த நூலை பார்ப்பதற்கு 16-வது போப் பெனடிக்ட் விருப்பம் தெரிவித்துள்ளார். இறுதி தூதர் முஹம்மது நபியின் வருகையை குறித்தும்,...

Monday, February 27, 2012

திருவாரூரில் SDPI யின் மாபெரும் ரயில் மறியல் போராட்டம்! 300௦ பேர் கைதாகி விடுதலை .

SDPI நடத்திய மாபெரும் ரயில் மறியல் போராட்டம் இன்று மதியம் 1.30 மணியளவில் திருவாரூர் ரயில்வே நிலையத்தில் நடைபெற்றது. திருவாரூர், நாகை, தஞ்சை தெற்கு மாவட்டங்களிலிருந்து வந்திருந்த SDPI யின் தொண்டர்கள் அனைவரும் விஜயபுரம் – பள்ளிவாசல் அருகே கூடியிருந்தனர்.A. அபுபக்கர் சித்திக் தலைமையில் (மாநில செயற்குழு உறுப்பினர்) அனைத்து தொண்டர்களும் கண்டன கோஷங்கள் எழுப்பிவாறு திருவாரூர் ரயில்வே நிலையம் சென்றடைந்தனர்.காரைக்குடியிலிருந்து...