Wednesday, June 27, 2012

ஹைதராபாத்தில் பள்ளி செல்வோம் பிரச்சாரம்


ஹைதராபாத்: பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக பள்ளி செல்வோம் பிரச்சார நிகழ்ச்சி ஹைதராபாத்தில் நடைபெற்றது. தேசிய அளவில் பாப்புலர் ஃப்ரண்ட் மேற்கொண்டு வரும் பள்ளி செல்வோம் பிரச்சாரம் நாட்டின் பல பாகங்களிலும் சிறப்பாக நடைபெற்று வருகிறது. ஹைதராபாத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் சுமார் 250 குழந்தைகளுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டது.


இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரை நிகழ்த்திய பாப்புலர் ஃப்ரண்டின் ஆந்திர மாநில தலைவர் முஃப்தி அப்துல் சுபுஹான் கூறும்போது "பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா கல்விக்கான பணிகளை மட்டும் செய்வதில்லை மாறாக இரத்த தான முகாம், இலவச மருத்துவ முகாம், மக்கள் மத்தியில் அவர்களது உரிமைகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் என பல்வேறு துறைகளில் பணியாற்றி வருகிறது." என அவர் கூறினார்.
 
Mufti Abdus Subhan Sab Distributed school kits

சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட பேராசிரியர் அப்துர் ரஹ்மான் கூறும்போது "இந்தியாவின் கல்வி தரத்தை மென்மேலும் உயர்த்த வேண்டும். வெறும் வாய்மொழி பாடங்களாக நடத்துவதை விட செயல்முறையிலான பாடதிட்டங்களை அதிக அளவில் நடைமுறைப்படுத்த வேண்டும். அதிலும் குறிப்பாக சமூக சேவைகளில் பங்காற்றுவதற்கான படிப்புகளில் அதிக அளவில் மாணவர்களை ஈடுபடுத்த வேண்டும் " இவ்வாறு கூறினார்.



 பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில செயற்குழு உறுப்பினர் முஹம்மது ஆரிஃப் அஹமது, கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில தலைவர் டாக்டர் செய்யது பரகத்துல்லாஹ் பாஷா, பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் ஹைதராபாத் நிர்வாகி செய்யது முபஷ்ஷிர் ஆகியோர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

Participate school childrens in this program


Popular Front Distributed school Kits

0 comments:

Post a Comment