Wednesday, June 27, 2012

பாப்புலர் ஃப்ரண்ட் உருவாக்க இருக்கும் மக்கள் எதிர்ப்பு சக்தி

கோழிக்கோடு: "இறைவன் கேரளாவை பாதுகாத்தான்" என்ற தலைப்பில் ஒரு மாதகாலம் நடைபெற்ற பிரச்சாரத்தின் இறுதியாக பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா "மக்கள் எதிர்ப்பு சக்தி" என்ற நிகழ்ச்சியை வருகின்ற ஜூன் 29 தளச்சேரி அருகே நடத்த இருக்கின்றது.
Fazal the Martyr
ஷஹீத் முஹம்மது ஃபஜல்

சமீப காலமாக மலையாள பத்திரிகைகளிலும் தொலைக்காட்சி சேனல்களிலும் அதிக அளவில் விவாதிக்கப்பட்ட விஷயம் என்.டி.எஃப் (இன்று பாப்புலர் ஃப்ரண்ட்) உறுப்பினரான சகோதரர் ஃபஜல் அவர்களின் கொலை வழக்கை பற்றித்தான். கடந்த சில வருடங்களுக்கு முன்னால் பாப்புலர் ஃப்ரண்ட் சகோதரர் ஃபஜல் அவர்கள் மர்ம நபர்களால் மார்சிஸ்டு கம்யூனிஸ்ட் பயங்கரவாதிகளால படுகொலை செய்யப்பட்டார். அப்போது கேரளாவில் ஆட்சி செய்து கொண்டிருந்த கம்யூனிஸ்ட் கட்சி இக்கொலைக்கு காரணம் ஆர்.எஸ்.எஸ் தான் என்று கூறி திசை திருப்ப முயற்சித்து வந்தனர்.

தற்போது சி.பி.ஐ அதிகாரிகளிடம் இவ்வழக்கு ஒப்படைக்கபட்ட நிலையில் உண்மை குற்றவாளிகள் கண்டறியப்பட்டு கைது செய்யப்பட்டு வருகின்றனர்.

இவ்வழக்கின் குற்றப்பத்திரிக்கையை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த சி.பி.ஐ அதிகாரிகள் சி.பி.ஐ.எம்-ன் கிரிமினல் அஜண்டாவை குறித்தும் தகவல்களை தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. கேரள மாநிலத்தில் வகுப்பவாத செயல்களில் அதிக அளவில் சி.பி.ஐ.எம் கட்சியினர் ஈடுபட்டுள்ளனர் என்ற தகவல்களை சி.பி.ஐ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனை தொடர்ந்து சி.பி.ஐ.எம்-ன் கோர முகத்தை மக்கள் மத்தியில் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற அடிப்படையில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா கடந்த ஒரு மாத காலமாக தீவிர பிரச்சாரத்தை மேற்கொண்டது. இப்பிரச்சாரத்தின் இறுதியாக வருகின்ற ஜுன் 29 தளச்சேரியில் மக்கள் எதிர்ப்பு சக்தி என்ற ரீதியில் ஓர் நிகழ்ச்சியை நடத்த இருக்கின்றது.

இந்நிகழ்ச்சியில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய பொதுச்செயலாளர் கே.எம். ஷரீஃப் மற்றும் கேரள மாநில தலைவர்கள் கலந்து கொள்ள இருக்கின்றனர். மக்களை பாதுகாக்க பாப்புலர் ஃப்ரண்டின் உறுப்பினர்கள் இந்நிகழ்ச்சியின் போது உறுதி மொழி எடுத்துகொள்ள இருக்கின்றனர்.

thanks to chennaipfi

0 comments:

Post a Comment