Monday, June 25, 2012

புதுக்கோட்டை மாவட்டத்தில் இலவச தையல் இயந்திரம் வழங்கப்பட்டது

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சமூக மேம்பாட்டுத்துறையின் சார்பாக 20.06.2012 புதுன் கிழமை 25 தையல் இயந்திரம் வழங்கப்பட்டது.

விதவைப் பெண்கள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், வருமானத்தில் மிகவும் பின் தங்கியவர்களை கண்டறிந்து அவர்களுக்கு வருமானத்தில் முன்னேற்றம் ஏற்படுத்தும் வகையில் இலவசமாக 25 தையல் இயந்திரம் வழங்கப்பட்டது.



இதில் மாவட்ட செயலாளர் எம். அபூபக்கர் சித்தீக் தலைமை வகித்தார். பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில தலைவர் ஏ.எஸ். இஸ்மாஹில் மற்றும் ஷோசியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியாவின் மாநில பொதுச்செய்லாளர்  எஸ்.எம். ரஃபீக் அஹமது ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர்.



கறம்பக்குடி குத்தூஸ் மெட்ரிக் பள்ளியின் தாளாளர் கே. முஹம்மது அன்சாரி, என்.எம் கல்வி நிறுவனத்தின் தலைவர் எம். முஹம்மது அலி, புதுகை பெரிய பள்ளியின் காரியகாரர் எம். ராஜா தாஜ் முஹம்மது, அம்மாபட்டிணம் ஜமாத் தலைவர் எஸ்.எஸ்.கே அபுல் ஹஸன், நகராட்சி துணைத்தலைவர் எஸ்.ஏ.எஸ். சேட், கறம்பகுடி ஜமாத் தலைவர் ஏ.எம். கலிபுல்லாஹ், அறந்தாங்கி ஜமாத் தலைவர் ஹாஜி முஹம்மது முஹைதீன், எஸ்.டி.பி.ஐயின் மாவட்ட தலைவர் அப்துல் வஹாப் ஆகியோர் கலந்து கொண்டனர்.





0 comments:

Post a Comment