Tuesday, June 19, 2012

அல் அய்ன் மண்டல தமுமுக சார்பில் வட்டியில்லாக் கடனுதவி


அல்லாஹ்வின் கிருபையால் அல் அய்ன் மண்டல தமுமுக சார்பில் நடத்தப்பட்டு வரும் வட்டியில்லாக் கடனுதவி திட்டத்தின் எட்டாம் ஆண்டின் முதலாவது கடனுதவி வழங்கும் எளிய நிகழ்ச்சி அல் அய்ன் நகரின் தொழிற்பேட்டையான செனையா'வில் நடைபெற்றது.
இத்திட்டத்தின் ஒருங்கிணைப்பாளர் சகோதரர் பூதமங்கலம் ஜாகிர் ஹுசைன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், இந்திய மதிப்பில் (ரூ.2,82000.00) இரண்டு லட்சத்து எண்பத்தி இரண்டாயிரம் ரூபாய் வட்டியில்லாக் கடனாக 10 பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் மண்டல தலைவர் சகோதரர் தோப்புத்துறை ஷேக் தாவூது,மண்டல முன்னாள் தலைவர் தோப்புத்துறை சர்புதீன் காகா,வட்டியில்லாக் கடனுதவி திட்டத்தின் ஒருங்கிணைப்புக் குழு உறுப்பினரும் மண்டல மருத்துவ சேவை அணி செயலாளருமான சகோதரர் கீழை அ.முஹம்மது இபுனு காகா,செனையா பகுதி தலைவர் எலந்தங்குடி யூசுப் மற்றும் மண்டல நிர்வாகக் குழு உறுப்பினர் கொடிக்கால்பாளையம் சகோதரர் அப்துல் ஜப்பார் ஆகியோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

thanks to tmmk.in

0 comments:

Post a Comment