Wednesday, June 27, 2012

"கர்நாடகா : பாங்கு சொல்ல தடை விதித்த 3 நாட்களில் இஸ்லாத்தை ஏற்ற மூவர்!











கர்நாடக மாநிலத்தில் கடந்த 17ந்தேதி முதல் ஒலி பெருக்கியில் பாங்கு சொல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், நேற்று முன்தினம் ஒரு நிகழ்ச்சியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 சகோதரர்கள், கலிமா சொல்லி இஸ்லாத்தை தழுவினர். பெங்களூருவை சேர்ந்த

"மேகநாதன் தாகூர்" என்பவர் தனது பெயரை "முஹம்மத் யூசுப்" என்று மாற்றிக்கொண்டார்.

அவரது மற்ற இரண்டு சகோதரர்களான

"சரவணத் தாகூர்" "முஹம்மத் யூனுஸ்" என்றும்

"ஜூவால தாண்டன்" தனது பெயரை "முஹம்மத் யாகூப்" என்றும் மாற்றம் செய்துக்கொண்டனர்.

அதே நேரம் இவர்களது தாயார் "சுமத்ரா தேவி" மட்டும் இன்னும் இஸ்லாத்தை ஏற்கவில்லை. தந்தை "காஷி நாத் தாகூர்" பல ஆண்டுகளுக்கு முன்பே மரணித்து விட்டார். படத்தில் உள்ள முஹம்மத் யூசுப் கூறுகையில், தனக்கு ஜமீல் என்ற நெருங்கிய முஸ்லிம் பல மாதங்களாக இஸ்லாத்தின் பல விஷயங்களை போதித்து வந்ததாகவும் "நரகத்தின் அச்சம் மற்றும் சொர்கத்தின் ஆசை" தான், நான் இஸ்லாத்தை ஏற்க முக்கிய காரணம் என்றார், யூசுப். ஒரு பக்கம், ஒலி பெருக்கியில் அதிகாலை பாங்கு சொல்வதையும் பொறுக்க முடியாதவர்கள் உள்ள அதே பெங்களூருவில், இஸ்லாத்தை ஏற்றுக்கொள்ளும் பக்குவம் படைத்தவர்களும் இருப்பதை பார்க்கும் போது நெஞ்சம் நெகிழ்கிறது.

maruppu net

0 comments:

Post a Comment