
தன்னுடைய ஆட்டோ நிறுத்திமிடம் சென்றபிறகு ஆட்டோவில் மஞ்சள் பை ஒன்றைப் பார்த்தார். அந்த பையில் ரூ.95 ஆயிரம் பணம் இருந்தது. பணத்தை குடிகாரப் பயணி தவறவிட்டிருக்கக் கூடும் என்று யூகித்த பாலாஜி வாடகை தரமறுத்ததால் பணத்தை தானே எடுத்துக் கொள்ள முயலவில்லை.
இன்று காலையில் அந்தப் பணத்தை யானைக்கவுனி காவல் நிலையத்தில் ஒப்படைத்து நடந்த விவரங்களைக் கூறினார். ஆட்டோ ஓட்டுநரின் நேர்மையைப் பாராட்டிய காவலர்கள், அந்த பயணியை அவர் இறக்கி விட்ட அடுக்குமாடி கட்டிடத்தில் தேடிக் கண்டுபிடித்தனர். பின்னர் அவரை காவல் நிலையத்துக்கு அழைத்து வந்தனர். தான் போதையில் நடந்து கொண்ட விதத்துக்கு மன்னிப்பு கோரிய அந்த நபர் ஆட்டோ ஓட்டுநருக்கு சன்மானம் தரவும் முன்வந்தார். ஆனால் ஓட்டுநர் பாலாஜி தனக்கு வாடகை பணம் ரூ.80 மட்டும் போதும் என்று வாங்கி சென்றார்.
thanks to asiananban
0 comments:
Post a Comment