Wednesday, February 20, 2013

அப்ஸல் குரு மரணத்திற்கு நீதி கேட்டு போராடியவர்கள் மீது ஆர்.எஸ்.எஸ் மற்றும் போலீசார் தாக்குதல்



     அப்ஸல் குருவுக்கு நிறைவேற்றப்பட்ட அநியாய மரணத்தண்டனையை கண்டித்து டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்திய கஷ்மீர் மாணவர்களையும், மனித உரிமை ஆர்வலர்களையும் போலீஸ் உதவியுடன் பஜ்ரங்தள் தீவிரவாதிகள் தாக்கினர். நேற்று காலை 11 மணியளவில் கஷ்மீர் மாணவர்களும், என்.சி.ஹெச்.ஆர்.ஓ, பி.யு.டி.ஆர் போன்ற மனித உரிமை அமைப்புகளும் ஜந்தர் மந்தரில் அமைதியான முறையில் போராட்டம் நடத்தினர். அப்பொழுது போலீஸ் உதவியுடன் பஜ்ரங்தள் வெறியர்கள் ஆக்ரோஷத்துடன் அவர்களை தாக்கினர்.



     பஜ்ரங்தள், ஆர்.எஸ்.எஸ், வி.ஹெச்.பி வெறியர்களை தடுப்பதற்கு பதிலாக காவல்துறை அவர்களை சமாதானப்படுத்தினர்.இதனால் கூடுதலாக சந்தோசபட்டசங்கபரிவார தீவிரவாதிகள் காவல்துறை  உதவியுடன் இளம் பெண்கள்,முதியோவர்கள் மற்றும் மனித உரிமை ஆர்வலர்கள் பலரை காட்டுமிராண்டி தனமாக தாக்கினர் மேலும் பஜ்ரங்தள் தீவிரவாதிகள் கஷ்மீர் இளம்பெண்களிடம் தவறாக நடக்க முயன்றனர். போராட்டம் நடத்தியவர்கள் மீது பாட்டில் மற்றும் செருப்புக்களை வீசினர். இதை எல்லாம் பார்த்து கொண்டு இருந்த காவல்துறை அத்துமீறிய ஆர்.எஸ்.எஸ் தீவிரவாதிகளை ஒன்றும் செய்யாமல் ஜனநாயக முறைப்படி போராடிய மனித உரிமை ஆர்வலர்களை கைது செய்தனர் 

     பெண்களுக்கு ஆதரவாக நாங்கள் இருக்கின்றோம் என்று கூறிய மத்திய மாநில அரசு இளம்பெண்கள் மீது பஜ்ரங்தள் தீவிரவாதிகள்  தாக்குதல் நடத்திய பொழுது ஒன்றும் செய்யாமல் கை கட்டி  பார்த்து கொண்டு இருந்தது.

நன்றி :

http://twocircles.net/2013feb09/clamor_abolition_capital_punishment_after_%E2%80%98secretive%E2%80%99_and_political_execution_afzal_guru.h

http://www.muslimmirror.com/top-news/2150-afzal-guru-was-not-given-fair-trial-nchro

http://www.mid-day.com/news/2013/feb/100213-afzal-gurus-hanging-causes-a-furore-in-delhi.htm

http://zeenews.india.com/news/delhi/scuffle-in-delhi-over-afzal-guru-s-hanging_828078.html

http://www.sahilonline.org/english/newsDetails.php?cid=3&nid=16662

http://www.icawpi.org/peoples-resistance/statements/888-joint-press-statement-on-afzal-gurus-hanging-9-feb-13











 

















0 comments:

Post a Comment