Sunday, February 17, 2013

கோவையில் சிறுமிக்கு ஏற்பட்ட கொடூரம்

கோவையில் சிறுமிக்கு ஏற்பட்ட கொடூரம்      கோவை ராமநாதபுரம் என்.கே. தேவர் வீதியைச் சேர்ந்த கோ‌கிலா (13) எ‌ன்ற மாண‌வி அதே பகுதியில் உள்ள பள்ளியில் 9ஆம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த ஆண்டு கோ‌கிலா‌வின் பெற்றோர் ஒண்டிப்புதூருக்கு செ‌ன்று குடியே‌றியதால் கோ‌கிலா ராமநாதபுரத்தில் உள்ள தனது அத்தை ஈஸ்வரி வீட்டில் தங்கியிருந்து படித்து வந்தார்.
     சில மாதங்களுக்கு முன்பு கோ‌கிலாவு‌க்கு உடல்நலம் பாதிக்கப்பட்டதா‌ல் அவரது மாமா கோபாலகிருஷ்ணன் (55) கோவை அரசு மரு‌த்துவமனை‌யி‌ல் வேலை பார்த்து ஓய்வு பெற்றவரான கம்பவுண்டர் பாலு (70) என்பவரிடம் அழைத்து சென்று‌ள்ளா‌ர்.அ‌ப்போது, பாலு, மாணவி கோ‌கிலாவுக்கு மயக்க ஊசி போட்டதுடன் கோபாலகிருஷ்ண‌னுடன் இணைந்து பாலியல் வன்புணர்ச்சியில் ஈடுபட்டுள்ளனர். மயக்கம் தெளிந்த உடன் தன்னை இருவரும் சீரழித்தது கண்டு அழுது புலம்பினார். இதனால் அவ்விருவரும் கோ‌கிலா‌விட‌ம், நடந்த சம்பவத்தை வெளியே சொ‌ன்னா‌ல் கொலை செய்துவிடுவதாக ‌மிர‌ட்டல் விடுத்துள்ளனர்
     இதனா‌ல் பய‌ந்துபோன கோ‌கிலா தன‌க்கு நே‌ர்‌ந்த கொடுமையை வெ‌ளி‌யி‌ல் சொ‌ல்லாம‌ல் இரு‌ந்து‌ள்ளா‌ர். இ‌ந்த ச‌ந்த‌ர்‌ப்ப‌‌த்தை பய‌ன்படு‌த்‌தி கொ‌ண்ட கோபால‌கிரு‌‌ஷ்ண‌ன், கோ‌கிலாவை தொடர்ந்து பாலியல் பலாத்காரம் செய்து வந்து‌ள்ளா‌ர்.மேலு‌ம், கோ‌கிலாவை பொள்ளாச்சிக்கு தேங்காய் பறிக்க செல்வதாக கூறி அழைத்து சென்ற கோபால‌கிரு‌ஷ்ண‌ன், அ‌ங்கு அவரது நண்பர்கள் கருப்பசாமி (50), ராகம் கருப்பசாமி (55) ஆகியோ‌ருடன் இணைந்து கோ‌கிலா‌வி‌ன் க‌ற்பை சூறையாடியு‌ள்ளன‌ர்.தனக்கு ஏற்பட்ட கொடுமைகளை வெளியில் சொல்ல முடியாமல் தவித்த நிலையில்,கோ‌கிலா க‌ற்ப‌ழி‌க்க‌ப்ப‌ட்ட ச‌ம்பவ‌‌ம் அவரது உறவினர் கார்த்திக் (19) என்பவரு‌க்கு தெ‌ரி‌ந்து‌ள்ளது. இதை வை‌த்து ‌மிர‌ட்டிய கா‌ர்‌த்‌தி‌க் ‌வீடு புகுந்து கோ‌கிலாவை பாலியல் பலாத்காரம் செய்து‌ள்ளா‌ர்.
     இதனா‌ல் கோபம் கொண்ட கோ‌கிலா, கோவை மாநகர போலீஸ் கமிஷனர் ‌வி‌ஸ்வநாதனை ச‌ந்‌தி‌த்து, தனது கற்பு சூறையாடப்பட்டது குறித்து கண்ணீருடன் புகா‌ர் கூ‌றியு‌ள்ளா‌ர்.
     போலீஸ் கமிஷன‌ரி‌ன் உத்தரவு படி, ராமநாதபுரம் போலீசார், கோ‌கிலாவை க‌ற்பை சூறையாடிய மாமா கோபாலகிருஷ்ணன், பாலு, கருப்பசாமி, ராகம் கருப்பசாமி, கார்த்திக் ஆகியோரை கைது செய்து ‌சிறை‌யி‌ல் அடை‌த்த‌ன‌ர்.

0 comments:

Post a Comment