Tuesday, February 19, 2013

போலீஸ், ராணுவ தேடுதல் வேட்டையில் கஷ்மீரில் முஸ்லிம் பெண் மாரடைப்பால் மரணம்!


    ஸ்ரீநகர்:தெற்கு கஷ்மீரின் குல்காமில் பாதுகாப்பு படையினர் நடத்திய தேடுதல் வேட்டையின் போது ஒரு முஸ்லிம் பெண்மணி மாரடைப்பால் மரணமடைந்தார்.

    போலீஸும், ராணுவம் கூட்டாக தேடுதல் வேட்டையில் ஈடுபட்டபோது வீட்டில் இருந்த நஸீரா பேகம்(வயது 55) என்ற பெண்மணி அதிர்ச்சியில் மாரடைப்பால் மரணமடைந்தார். மருத்துவமனைக்கு கொண்டு சென்ற பிறகு அவரது உயிரை காப்பாற்ற முடியவில்லை.

    பெண் போலீஸார் இல்லாமல் ராணுவமும், போலீசும் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டதாக மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். குல்காமில் முக்கிய சாலையை மறித்த மக்களை கலைக்க போலீஸ் முயன்றபோது மோதல் ஏற்பட்டது.

0 comments:

Post a Comment