Friday, February 15, 2013

வீரப்பன் கூட்டாளிகளை தூக்கிலிடக்கூடாது: முத்துலட்சுமி கோரிக்கை!

muthulakshmi
சேலம்:தனது கணவரின் நான்கு கூட்டாளிகளை தூக்கிலிடக்கூடாது என்று சந்தனக் கடத்தல் வீரப்பனின் மனைவி முத்துலட்சுமி கோரிக்கை விடுத்துள்ளார். வீரப்பனின் சகோதரர் ஞானப்பிரகாசம், சைமன், மீசை மாதையன், பிலவேந்திரன் ஆகியோரின் கருணை மனுக்களை குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி தள்ளுபடி செய்திருந்தார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளிக்கையில் முத்துலட்சுமி இக்கோரிக்கையை விடுத்துள்ளார்.
அவர் கூறியது:எனது கணவரை தமிழ்நாடு போலீஸ் கொலை செய்தது. இப்பொழுது அவரது கூட்டாளிகளும் கொலை செய்யப்பட இருக்கின்றார்கள். தயவு செய்து அவ்வாறு செய்துவிடாதீர்கள் என்று அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். தப்பிவிடுவார் என்று கருதிய கணவர் கொல்லப்படுவார் என்பதை அறிந்து அதிர்ச்சி அடைந்துள்ளதாக மீசை மாதையாவின் மனைவி தங்கம்மாள் தெரிவித்தார்.

0 comments:

Post a Comment