Tuesday, February 19, 2013

திரைத்துறை ஒரு சமூகப்பார்வை – பிப்ரவரி 20-ஆம் தேதி சென்னையில் பாப்புலர் ஃப்ரண்ட் நடத்தும் கருத்தரங்கம்!

திரைத்துறை ஒரு சமூகப்பார்வை

     சென்னை:தமிழ் திரைப்படத் துறையில் முஸ்லிம்கள் மற்றும் இஸ்லாத்திற்கு எதிரான அவதூறு பிரச்சாரங்கள் தொடர்ந்து இடம் பெற்று வருகின்றன. அண்மையில் வெளியான கமலஹாசனின் விஸ்வரூபம் உலக மக்களுக்கு நல்லுபதேசமான இறை வேதம் திருக்குர்ஆன் மற்றும் முஸ்லிம்களின் வழிப்பாட்டு முறைகள் தீவிரவாதத்தை தூண்டுவதாக சித்தரித்தது.

    இதற்கு எதிராக முஸ்லிம் சமூகம் வெகுண்டெழுந்தது. இந்நிலையில் திரைப்படத் துறையினருக்கு சமூகம் குறித்த பார்வை தேவை என்பதை வலியுறுத்தும் வகையில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பாக சென்னையில் ‘திரைத்துறை ஒரு சமூகப் பார்வை’ என்ற தலைப்பில் ஒரு கருத்தரங்கம் ஏற்பாடுச் செய்யப்பட்டுள்ளது.

     இந்நிகழ்ச்சி சென்னை எழும்பூர் பாண்டியன் ஹோட்டலில் வைத்து பிப்ரவரி 20-ஆம் தேதி மாலை 6.45 மணிக்கு நடைபெறுகிறது.  இக்கருத்தரங்கிற்கு தமிழ் மாநில பாப்புலர் ஃப்ரண்ட் தலைவர் ஏ.எஸ்.இஸ்மாயீல் தலைமை தாங்குகிறார். மாநிலச் செயலாளர் ஷேக் முஹம்மது அன்ஸாரி வரவேற்புரை நிகழ்த்துகிறார். எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில தலைவர் கே.கே.எஸ்.தெஹ்லான் பாகவி, பாப்புலர் ஃப்ரண்ட் மாநில செயற்குழு உறுப்பினர் அ.அஹ்மத் பக்ருத்தீன், திரைப்படத்துறையைச் சார்ந்த இயக்குநர் அமீர், நடிகர் ராதாரவி, இயக்குநர் சீமான் ஆகியோர் சிறப்புரை நிகழ்த்துகின்றனர். பாப்புலர் ஃப்ரண்டின் மாநில பொதுச் செயலாளர் அ.காலித் முஹம்மது நன்றியுரை ஆற்றுவார்.

0 comments:

Post a Comment