Tuesday, February 19, 2013

‘எனக்கு அல்லாஹ் அளித்த பதவியைக் குறித்து அபிமானம் கொள்ளுங்கள்’ – தூக்கிற்கு முன் அப்ஸல் குரு தனது குடும்பத்திற்கு எழுதிய கடிதம்!

Proud of my sacrifice said Afzal Guru in letter to family  
     ஸ்ரீநகர்:“நீங்கள் தைரியமாக இருங்கள் அல்லாஹ் உங்களுக்கு துணை புரிவான்… அல்லாஹ் எனக்கு அளித்த பதவியைக் குறித்து அபிமானம் கொள்ளுங்கள்” – திஹார் சிறையில் தூக்கிலிடப்படுவதற்கு ஒரு மணிநேரத்திற்கு முன்பு அப்ஸல் குரு தனது குடும்பத்தினருக்கு எழுதிய கடிதத்தின் வரிகள் இவை.

     அப்ஸல் குருவின் கையெழுத்துடன் சிறை சூப்பிரண்டின் குறிப்பும் அடங்கிய கடிதத்தை அப்ஸல் குருவின் மனைவி தபஸ்ஸும் நேற்று முன் தினம் ஊடகங்களுக்கு அளித்தார்.

    அப்ஸல் குருவை தூக்கிலிடப்படும் விபரத்தை தெரிவிக்கும் அதிகாரிகளின் கடிதத்துடன் ஸ்பீட் போஸ்டில் வந்த கடிதம் கடந்த பெப்ருவரி 12-ஆம் தேதி அவரது குடும்பத்தினருக்கு கிடைத்தது.

அவர் கடிதத்தின் விபரம்:
“6.25 am 09/02/2013
    மதிப்பிற்குரிய எனது குடும்பத்தினர் மற்றும் அனைத்து முஃமின்களுக்கு(நம்பிக்கையாளர்கள்)! அஸ்ஸலாமு அலைக்கும்! (உங்கள் மீது சாந்தி உண்டாகட்டுமாக!)

    என்னை இப்பதவிக்கு தேர்வுச் செய்த அல்லாஹ்வுக்கு நான் நன்றி செலுத்துகிறேன்! அனைத்து முஃமின்களுக்கும் நான் பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்ளுகிறேன். நாம் அனைவரும் சத்தியம் மற்றும் நியாயத்தின் பக்கம் நிற்கவேண்டும். நமது இறுதி முடிவும் சத்தியம் மற்றும் நியாயத்தின் பாதையில் கட்டாயம் அமையவேண்டும். எனது குடும்பத்தினருக்கு நான் விடுக்கும் வேண்டுகோள் என்னவெனில், நீங்கள் எனது முடிவிற்காக வருந்துவதற்கு பதிலாக நான் அடைந்த இந்த பதவிக்காக நீங்கள் அபிமானம் கொள்ளவேண்டும்.

    எல்லாம் வல்ல அல்லாஹ் உங்களுக்கு மிகப்பெரிய பாதுகாவலனும், மிகப்பெரிய உதவியாளனும் ஆவான்.  நான் உங்களை அல்லாஹ்வின் பாதுகாப்பில் விட்டுச் செல்கிறேன்!” இவ்வாறு அக்கடிதத்தில் எழுதப்பட்டுள்ளது.

    இதுக்குறித்து கருத்து தெரிவித்துள்ள அப்ஸல் குருவின் சகோதரர் இஜாஸ் அஹ்மத் குரு கூறுகையில், “இக்கடிதம் அப்ஸல் குருவின் குடும்பத்தினருக்கு மட்டுமல்ல, அனைத்து கஷ்மீரிகளுக்கும் ஆகும்” என்றார்.

0 comments:

Post a Comment