Tuesday, February 19, 2013

அப்ஸல் குருவை தூக்கிலிட்டதை கண்டித்து கஷ்மீரில் வெள்ளிக்கிழமை முழு அடைப்பு!

Shutdown called in Kashmir
    ஸ்ரீநகர்:அப்ஸல் குருவை தூக்கிலிட்டதை கண்டித்து செய்யத் அலிஷா கிலானியின் தலைமையிலான தெஹ்ரீக் – இ – ஹுர்ரியத் கட்சி வெள்ளிக்கிழமை முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்துள்ளது.

     டெல்லியில் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ள கிலானி இவ்வாரம் எதிர்ப்பு நிகழ்ச்சிகளை நடத்த திட்டமிட்டுள்ளார். அப்ஸல் குருவின் மரணத்தண்டனைக்கு எதிராக போராட வேறொரு வழியும் இல்லாததால் முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்ததாக கிலானி தெரிவித்துள்ளார்.

      அமைதியான முறையில் எதிர்ப்புகளை தெரிவிக்கவேண்டும் என்றும், எதிர்கால நடவடிக்கைகள் வெள்ளிக்கிழமை தீர்மானிக்கப்படும் எனவும் கிலானி கூறினார். மீர்வாய்ஸ் ஃபாரூக் தலைமையிலான ஹுர்ரியத் மாநாட்டுக் கட்சியும், ஜம்மு கஷ்மீர் விடுதலை முன்னணியும் வெள்ளிக்கிழமை முழு அடைப்பு போராட்டத்தில் பங்கேற்கின்றன.

0 comments:

Post a Comment