Friday, February 15, 2013

ஜெய்தாப்பூர் அணு உலை திட்டத்தை கைவிடக்கோரி பேரணி!- போராட்டக்குழு அறிவிப்பு!

jaitapur protest against nuclear
மும்பை:ஜெய்தாப்பூர் அணு மின் திட்டத்தை முழுவதுமாக கைவிடக்கோரி பேரணி நடத்தப்படும் என போராட்டக்குழு அறிவித்துள்ளது. மகராஷ்டிராவின் கடலோர மாவட்டமான ரத்தனகிரி பகுதியில் உள்ள ஜெய்தாபூரில் 9,900 மெகாவாட் அணுமின் நிலையம் அமைக்க மகாராஷ்டிர அரசு முடிவு செய்துள்ளது. இந்தத் திட்டத்தை எதிர்த்து ஜெய்தாபூர் மற்றும் அதனைத் சுற்றியுள்ள கிராம மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இதையடுத்து மகாராஷ்டிர அரசு அதிக நஷ்ட ஈடு தரும் முடிவை அறிவித்தது. ஆனால், உள்ளூர் அமைப்புகள் அரசின் இழப்பீடு அறிவிப்பை ஏற்கவில்லை. “”எங்கள் போராட்டம் அணு உலைத் திட்டத்தைக் கொண்டுவரக் கூடாது என்பதற்காகத்தான். நஷ்ட ஈடு எங்களுக்குத் தேவையில்லை. இந்த அணு உலைத் திட்டம் விஷத்தைப் போன்றது.” என்று, ஜெய்தாபூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களின் சமிதி தலைவர் பிரகாஷ் வக்தாரே தெரிவித்தார்.
செய்தியாளர்களிடம் வியாழக்கிழமை அவர் பேசுகையில், “ஜெய்தாபூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள விவசாயிகள் பணத்தை விரும்பவில்லை. அணு உலைத் திட்டத்தைத்தான் எதிர்க்கிறார்கள். கொங்கண் பகுதி முழுவதும் இந்தத் திட்டத்துக்கு எதிர்ப்பு இருக்கிறது. திட்டத்தை எதிர்த்து அடுத்த மாதம் பேரணி நடத்தப்படும். ஊடகங்களில் சில அரசுக்கு ஆதரவாக செயல்படுவதாகவும், அத்தைகய ஊடகங்கள் தான் கிராம மக்கள் அதிக இழப்பீடு கோரி போராடி வருவதாக செய்திகள் வெளியிட்டுள்ளன. ஆனால் உண்மையில் ஒருபோதும் கூடுதல் தொகை கேட்டு போராடவில்லை” என்று அவர் கூறினார்.

0 comments:

Post a Comment