Monday, February 28, 2011

தமிழக மீனவர்களுக்கு துப்பாக்கி குடுக்கப்படுமா?

உலகிலுள்ள எந்த நாடும் கடல் எல்லை தாண்டும் மீனவர்களை சுட்டுக் கொல்வதில்லை. பாகிஸ்தான் கூட எல்லை தாண்டும் இந்திய மீனவர்களை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தியதே வழக்கமாக இருந்திருக்கிறது. காரணம், சர்வதேசகடல் சட்டம் சரத்து 73, மீனவர்களை கடலில் சுடுவதை தடை செய்திருக்கிறது. இச்சட்டத்தில் உலகிலுள்ள அனைத்து நாடுகளும் கையொப்பம் இட்டுள்ளன. இதில், இந்தியாவும், இலங்கையும் கூட அடக்கம். ஆனால், இச்சட்டத்தை இலங்கை அரசு இதுவரை மதித்து நடந்ததில்லை. இந்திய அரசும்...

நலத்திட்டங்களை அறிவித்தார் சவுதி மன்னர்.

சவுதி மன்னர் அப்துல்லா சவுதி அரேபியாவின் மன்னர் அப்துல்லா மூன்று மாத கால மருத்துவ சிகிச்சைக்கு பின்னர் நாடு திரும்பியுள்ளார்.அவரின் வருகையை ஒட்டி வீதிகள் எங்கும் தேசிய கொடி பறந்து கொண்டிருந்தன. அரச ஊடகம் உற்சாக மிகுதியில் காணப்பட்டது.மத்திய கிழக்கு பகுதியில் உள்ள நாடுகள் சிலவற்றில் மக்கள் ஆர்ப்பாட்டங்கள் உலுக்கி கொண்டிருக்கும் நேரத்தில் சவுதி மன்னர் நாடு திரும்பியுள்ளார்.சவுதி அரேபியாவின் நீண்ட நாள் கூட்டாளியான எகிப்தின் ஹோஸ்னி முபாராக் வீட்டிற்கு...

குவைத் அரசின் சிறப்பு கருணைக்கால அறிவிப்பு.

TMCA NEWSLETTER குவைத் அரசின் சிறப்பு கருணைக்கால அறிவிப்பு அன்புடையீர், எதிர்வரும் மார்ச் மாத முதல் தேதி முதல் ஜூன் மாத கடைசி வரையிலான நான்கு மாத காலங்களுக்குள், இகாமா இல்லாது சட்டத்திற்கு புறம்பாக வசிப்பவர்கள், இகாமாவை முறைப்படுத்திக் கொள்ளவும் அல்லது எவ்வித அபராதத் தொகையுமின்றி குவைத்தை விட்டு வெளியேறவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அவ்வாறாக செல்பவர்கள் மீண்டும் குவைத் திரும்புவதற்கு ஏற்ப, அவர்களது பெயர்கள் கம்ப்யூட்டரில் பதிவாகாது எனவும் மற்றும்...

2011-12-ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையின் முக்கிய அம்சங்கள்

டெல்லி,பிப்.28:இன்று 2011-12-ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையை மத்திய நிதித்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி பாராளுமன்றத்தில் தாக்கல் செய்தார். அவர் தாக்கல் செய்துள்ள நிதிநிலை அறிக்கையின் முக்கிய அம்சங்கள் வருமாறு: 2011 ல் மொத்த பொருளாதார வளர்ச்சி8.6 சதமாக இருக்கும். 2011- 2012 ல் பொருளாதார வளர்ச்சி 9.1 சதமாக இருக்கும் கஷ்மீரின் வளர்ச்சிக்கு ரூ.8 ஆயிரம் கோடி மெளலானா ஆசாத் கல்வி அறக்கட்டளைக்கு ரூ.200 கோடி அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழக கேரள மாநிலம்...

எகிப்தின் உள்நாட்டு விவகாரத்தில் தலையிடும் பிரிட்டன் - முஸ்லிம் சகோதரத்துவ இயக்கம் கண்டனம்

கெய்ரோ,பிப்.28:எகிப்தில் மக்கள் புரட்சிக்கு பின்னர் சுற்றுப்பயணம் மேற்கொண்ட பிரிட்டன் பிரதமர் எகிப்தின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிடும் விதமாக சில கருத்துக்களை தெரிவித்திருந்தார். இதற்கு முஸ்லிம் சகோதரத்துவ இயக்கத்தின் தலைவர்களில் ஒருவரான எஸ்ஸாம் அல் எரியான் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது: "௦65 ஆண்டுகளுக்கு முன்பே பிரிட்டனின் ஆதிக்கம் எகிப்தில் முடிந்து போய்விட்டது. எகிப்தியர்களுக்கு அவர்களுடைய பிரச்சனையை எப்படி நிர்வகிக்க வேண்டுமென்பது நன்றாகவே தெரியும்." எனத் தெரிவித்துள்ளார். பிரிட்டன் பிரதமர் எகிப்து சுற்றுப்பயண வேளையில்...

துருக்கி முன்னாள் பிரதமர் நஜ்முத்தீன் எர்பகான் மரணம்

அங்காரா,பிப்.28:துருக்கி முன்னாள் பிரதமர் நஜ்முத்தீன் எர்பகான் மரணமடைந்தார். இஸ்லாமிய இயக்கத்தின் தலைமையிலான துருக்கியின் முதல் பிரதமராக பதவி வகித்தவர் எர்பகான் ஆவார். கடந்த ஜனவரி மாதம் முதல் அங்காராவிலுள்ள ஒரு மருத்துவமனையில் சிகிட்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார் எர்பகான். 84 வயதான எர்பகான் இதய அதிர்ச்சி மூலம் மரணமடைந்துள்ளார். எர்பகானின் மரணத்திற்கு துருக்கி பிரதமர் ரஜப் தய்யிப் உருதுகான் அனுதாபம் தெரிவித்துள்ளார். தனது வாழ்க்கையின் மூலம் முன்மாதிரியாக...

மலேசியாவில் ஹிந்துத்துவா அமைப்பினர் கைது

கோலாலம்பூர்,பிப்.28:சட்டவிரோதமாக போராட்டம் நடத்திய 109 இந்திய வம்சாவழியைச் சார்ந்த ஹிந்துத்துவா அமைப்பினரை போலீஸார் கைது செய்துள்ளனர்.பள்ளிக்கூட பாடத்திட்டத்தில் விவாத நூலை உட்படுத்தியதாக குற்றஞ்சாட்டி பேரணி நடத்திய தடைச் செய்யப்பட்ட ஹிந்துத்துவா அமைப்பான ஹிந்து ரைட்ஸ் ஆக்‌ஷன் ஃபோர்ஸ் உறுப்பினர்கள்தாம் போலீசாரால் கைது செய்யப்பட்டவர்கள். நகரத்தில் சட்ட ஒழுங்கை பாதுகாப்பதற்காக இவர்களை கைது செய்துள்ளதாக மாநகர போலீஸ் தலைவர் துல்கிஃப்லு அப்துல்லாஹ் தெரிவித்துள்ளார். ஜனநாயக...

லிபியாவிலிருந்து விமானம் மூலம் மீண்ட இந்தியர்கள்-தலைவன்கோட்டை தமிழர்கள் வரவில்லை!

டெல்லி: லிபியாவில் மக்கள் போராட்டம் அதிகரித்துள்ளது. அவர்கள் மீது மிகக் கடுமையான தாக்குதல் நடந்து வருகிறது. சாலையெங்கும் உடல்களாக கிடக்கின்றன. அவற்றை புல்டோசர்கள் மூலம் அகற்றி குப்பைகளில் வீசுகிறார்கள் என்று அங்கிருந்து மீண்டு வந்த இந்தியர்கள் கூறியுள்ளனர். லிபியாவுக்கு அனுப்பப்பட்ட 2 சிறப்பு ஏர் இந்தியா விமானங்கள் மூலம் முதல் கட்டமாக 528 பேர் வந்து சேர்ந்தனர். இன்னும் பலர் லிபியாவிலேயே இருப்பதாக, மீண்டு வந்தவர்கள் தெரிவித்துள்ளனர். லிபியாவில் அமைதி...

உடல் இடையை கூட்ட, குறைக்க, திராட்ச்சை சாப்பிடுங்கள்!

உடல் எடையைக் கூட்டவும், குறைக்கவும் திராட்சை பழம் உதவுகிறது. இவற்றில் கறுப்புத் திராட்சை,பச்சைத் திராட்சை, பன்னீர்த் திராட்சை, காஷ்மீர்த் திராட்சை ஆங்கூர் திராட்சை, காபூல் திராட்சை, விதையில்லா திராட்சை என பல வகையுண்டு. இந்தப் பழங்களை உலரவைத்து எடுக்கப் படும் உலர்ந்த திராட்சையை கிசுமுசுப் பழம் என்பார்கள். உலர்ந்த திராட்சையில் சாதாரண திராட்சை விட 5 மடங்கு அதிக சர்க்கரைச் சத்து உள்ளது. தொடர்ந்து உலர்ந்த திராட்சை சாப்பிட்டு வந்தால் உடல் எடை அதிகரிக்கும்....

Sunday, February 27, 2011

புதுமனைதெருவின் அவலநிலை.

இந்த 19வது வார்டு மெம்பர் சகோதரரி ஃபர்வீன் அவர்கள். பேராசியர் அப்துல் காதர் அவர்களின் மருமகள். மருமகளை தேர்தலில்போட்டியிட வைத்து,வாக்கு சேகரித்தவர் பேராசியர் அவர்கள்தான்.அவர்களின் திறமையின் மீது நம்பிக்கை வைத்துதான் ஓட்டுபோட்டு வெற்றி பெறவைத்தனர் இந்த வார்டு மக்கள்.நமது 19வது வார்டுமெம்பர்சகோதரரி ஃபர்வீன் அவர்கள் ஒருவர்தான்பேரூராட்சி மன்றத்தின் கூட்டத்தில் கலந்து கொல்லாமல் தனது கணவரை வைத்து சில காரியங்களை சென்னையில் இருந்து கொண்டே சம்பளம் பெறுகிறார்.அவரது...

நீதிமன்றமா? காவிமன்றமா? ஸ்டெயின்ஸ் பாதிரியார் கொலை வழக்குத் தீர்ப்பு!

ஒரிசா மாநிலத்தில் கடந்த 1999-ஆம் ஆண்டு பஜ்ரங் தள்ளைச் சேர்ந்த தாரா சிங் என்ற இந்து பயங்கரவாதியின் தலைமையில் வந்த கும்பலொன்று, அம்மாநிலத்தில் மதப் பிரச்சாரம் செய்து வந்த ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த கிறித்துவப் பாதிரியார் கிரஹாம் ஸ்டெயின்ஸையும், சிறுவர்களான பிலிப், திமோதி என்ற அவரது இரு மகன்களையும் – அவர்கள் மூவரும் ஒரு ஜீப்பில் உறங்கிக் கொண்டிருந்த வேளையில் உயிரோடு எரித்துக் கொன்றனர். இப்பயங்கரவாதப் படுகொலையைச் செய்த தாரா சிங் உள்ளிட்ட 13 பேரையும் குற்றவாளிகள்...

திமுக கூட்டணியில் முஸ்லிம் லீக்குக்கு 3 தொகுதிகள், அதிமுக கூட்டணியில் மமக-விற்கு 3 தொகுதிகள்

பிப்.27:வருகின்ற சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் முஸ்லீம் லீக்குக்கு 3 தொகுதிகள் ஒதுக்கப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேப்போன்று அதிமுக கூட்டணியில் மனித நேய மக்கள் கட்சிக்கு மூன்று தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அண்மையில் மு.க.ஸ்டாலினை சந்தித்து இதற்கான பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட முஸ்லிம் லீக் கட்சித் தலைவர் காதர்மொய்தீன் இன்று சென்னையில் திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்துப் பேசினார். இந்த சந்தி்ப்புக்குப் பின்னர், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த காதர் மொய்தீன், வெற்றிகரமாக அமைந்துள்ள இந்தக் கூட்டணியில் தங்கள் கட்சிக்கு 3 தொகுதிகள்...

கர்ப்பிணிகள் உயிரைப் பறித்த கெட்டுப்போன குளுக்கோஸ்- 13 பேர் பலி :ராஜஸ்தானில் நடந்தது விபரீத

ஜோத்பூர்,பிப்.27:ராஜஸ்தானில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கர்ப்பிணிகளுக்கு, சத்துக்காக குளுக்கோஸ் மருந்தை ஏற்றியபோது, அதிகளவு ரத்தப் போக்கு ஏற்பட்டு 13 பேர் பலியான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.விசாரணையில், கெட்டுப் போன குளுக்கோஸ் திரவத்தை ஊசி மூலம் அவர்களுக்கு ஏற்றியது தெரியவந்துள்ளது. ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் உமைத் என்ற அரசு மருத்துவமனை உள்ளது. இங்கு கர்ப்பிணி பெண்கள் சிலர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அவர்களுக்கு...

சுனில் ஜோஷி கொலை: பெண் ஹிந்துத்துவ தீவிரவாதி பிரக்​யாசிங் தாக்கூர் கைது

மும்பை,பிப்.27:ஸம்ஜோதா எக்ஸ்பிரஸ் உள்பட இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் நடந்த குண்டுவெடிப்புகள் மற்றும் நாசவேலைகளில் ஈடுபட்ட ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாதி சுனில் ஜோஷி கொலைத் தொடர்பான வழக்கில் ஹிந்துத்துவா பெண் தீவிரவாதியான சன்னியாசினி பிரக்யாசிங் தாக்கூர் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் ஏற்கனவே மலேகான்-2008 குண்டுவெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு சிகிட்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மலேகான் வழக்கை விசாரித்துவரும் Maharashtra Control of Organised Crime Act (MCOCA) நீதிமன்றத்தின் அனுமதியுடன் மத்தியபிரதேச போலீஸார்...

ஆதரவாளர்களுக்கு ஆயுதம் வழங்கும் கத்தாஃபி

திரிபோலி,பிப்.27:உள்நாட்டில் எதிர்ப்புப் போராட்டம் வலுவடைந்து சர்வதேச அளவில் எதிர்ப்பு அதிகரித்த நிலையில் தனது ஆதரவாளர்களுக்கு ஆயுதங்களை வழங்குகிறார் அந்நாட்டு சர்வாதிகாரி முஅம்மர் கத்தாஃபி. ஆயுதக் கிடங்குகளை எனது ஆதரவாளர்களுக்கு திறந்துக் கொடுத்துள்ளேன் என கத்தாஃபி தெரிவித்துள்ளார். திரிபோலியில் போலீஸ் நிலையங்கள் ஆயுதம் ஏந்திய கத்தாஃபியின் ஆதரவாளர்களின் கட்டுப்பாட்டிலிருப்பதாக AP நியூஸ் கூறுகிறது. இவர்களின் ட்ரக்குகள் தெருக்களில் ரோந்து வந்துக் கொண்டிருக்கின்றன. லிபியாவின் பல பகுதிகளிலும் ராணுவம் மக்களுடன் சேர்ந்ததால் இந்த நடவடிக்கையை கத்தாஃபி...

யெமன் எழுச்சிப் போராட்டத்தில் பழங்குடியினரும் இணைகின்றனர்

ஸன்ஆ,பிப்.27:ஏகாதிபத்தியவாதி அலி அப்துல்லாஹ் ஸாலிஹின் ஆட்சிக்கெதிராக யெமன் நாட்டில் நடைபெற்று வரும் போராட்டத்தில் அந்நாட்டின் பிரபல பழங்குடி இனத்தவர்களும் கலந்துக் கொண்டுள்ளனர். ஸன்ஆவின் பழங்குடியினர் பகுதியில் நேற்று நடந்த பழங்குடியின தலைவர்களின் கூட்டத்தில் இதுத் தொடர்பான தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது. ஹாஷித், பாகில் உள்பட முக்கிய பழங்குடியினத் தலைவர்கள் இக்கூட்டத்தில் பங்கேற்றனர். அமைதியாக நடந்துவரும் போராட்டத்தை அடக்கி ஒடுக்கும் அரசு நடவடிக்கையைக் கண்டித்து ஆளுங்கட்சியான ஜெனரல் பீப்பிள்ஸ் காங்கிரஸிலிருந்து ராஜினாமா செய்வதாக ஹாஷித் பழங்குடியினத்...

எகிப்து:போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது பலம் பிரயோகித்த ராணுவம்

கெய்ரோ,பிப்.27:முபாரக் ஆட்சியில் அங்கம் வகித்த அமைச்சர்களை இடைக்கால அமைச்சரவையிலிருந்து நீக்க வேண்டுமெனக்கோரி தஹ்ரீர் சதுக்கத்தில் போராட்டம் நடத்த திரண்டவர்களை அந்நாட்டு ராணுவம் பலம் பிரயோகித்து வெளியேற்றியுள்ளது. போராட்டத்தில் கலந்துக்கொண்ட மக்கள் மீது லத்திசார்ஜ் நடத்தியும் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டும் நடவடிக்கையை மேற்கொண்டது ராணுவம். கடந்த வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகைக்குப் பிறகு மக்கள் தஹ்ரீர் சதுக்கத்தில் கூடினர். முபாரக் அமைச்சரவையிலிருப்பவர்கள் இடைக்கால அரசில் இடம்பெற மாட்டார்கள் என்ற ராணுவம் அளித்த வாக்குறுதியைப் பேண வேண்டுமென...

குண்டுவெடிப்பு:ஈராக்கில் முக்கிய எண்ணை சுத்திகரிப்பு ஆலை மூடப்பட்டது

பாக்தாத்,பிப்.27:ஈராக்கில் முக்கிய எண்ணை சுத்திகரிப்பு ஆலை ஒன்று பைஜி குண்டுவெடிப்பைத் தொடர்ந்து மூடப்பட்டுள்ளது. நேற்று காலை நடந்த குண்டுவெடிப்பிலும், துப்பாக்கிச்சூட்டிலும் இரண்டு தொழிலாளர்கள் கொல்லப்பட்டனர். வடக்கு பாக்தாதில் ஸலாஹுத்தீன் மாகாணத்தில் எண்ணை சுத்திகரிப்புச் சாலையின் ஒரு யூனிட்டில் மர்ம நபர்கள் குண்டுவைத்துள்ளனர். பெரும் சேதம் விளைந்துள்ளதாக அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. முன்னர் போராளிகளின் வலுவான பகுதியாகயிருந்தது பைஜி. பாக்தாத், பஸ்ரா ஆகியவற்றுடன் ஈராக்கின் முக்கிய எண்ணை சுத்திகரிப்பு ஆலை பைஜியில் உள்ளது. ஒன்றரை...

லிபியாவில் மக்கள் எழுச்சி அதிகரிப்பு​ - சாலையெங்கு​ம் உடல்கள் கிடக்கின்ற​ன - மீண்டு வந்த இந்தியர்கள்

டெல்லி,பிப்.27:லிபியாவில் மக்கள் எழுச்சி அதிகரித்துள்ளது. அவர்கள் மீது மிகக் கடுமையான தாக்குதல் நடந்து வருகிறது. சாலையெங்கும் உடல்களாக கிடக்கின்றன. அவற்றை புல்டோசர்கள் மூலம் அகற்றி குப்பைகளில் வீசுகிறார்கள் என்று அங்கிருந்து மீண்டு வந்த இந்தியர்கள் கூறியுள்ளனர். லிபியாவில் சிக்கித் தவித்து வரும் இந்தியர்களை மீட்க இரண்டு சிறப்பு விமானங்களை ஏர் இந்தியா நிறுவனம் இயக்குகிறது. இந்த விமானங்கள் நேற்று லிபியா சென்று இரண்டு கட்டமாக 528 இந்தியர்களை மீட்டு கொண்டு வந்துள்ளன. முதல் விமானம் 291 பேருடன் டெல்லிக்கு வந்து சேர்ந்தது. அதேபோல 237 பேருடன் இரண்டாவது...

Thursday, February 24, 2011

கலைஞரே! இது நியாயமா?

இன்று தமிழக அரசுக்கு உள்ள கடன் தொகை தற்போதய நிலவரப்படி ஒரு லட்சம் கோடியை தாண்டி விட்டது. இவை அனைத்தும் இலவச திட்டங்களால் வந்ததாக பொருளாதார நிபுணர்கள் அறிக்கை சமர்ப்பிக்கிறார்கள். அன்பழகனோ இலவச திட்டங்கள்தான் பலரின் வயிற்றைக் கழுவுகிறது. எனவே அதை குறை சொல்லாதீர்கள் என்கிறார். தமிழக அரசு போடும் இலவச திட்டங்களில் சத்துணவை தவிர மற்ற அனைத்து திட்டங்களும் விழலுக்கு இறைத்த நீர்தான். யாருக்கும் எந்த பயனையும் இந்த இலசவ திட்டங்கள் ஏற்ப்படுத்தப் போவதில்லை. இலவச...

4 வயது குழந்தையை அடித்த ஐஏஎஸ் அதிகாரி!!!

சண்டீகர், பிப்.23- பஞ்சாபில் பொது இடத்தில் 4 வயது குழந்தையை அறைந்த பெண் ஐஏஎஸ் அதிகாரி ஒருவர் மீது குழந்தைகள் உரிமை ஆணையத்தில் புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது. கரீமா என்னும் 4 வயது குழந்தை சண்டீகரில் உள்ள பிரபல பள்ளி ஒன்றில் நர்சரி பிரிவில் படித்து வருகிறார். சமீபத்தில், பள்ளி முடிந்து அக்குழந்தை ஆட்டோவில் வீடு திரும்பிக் கொண்டிருந்தாள். வழியில் வேறொரு குழந்தையை அவரது வீட்டில் விடுவதற்காக ஆட்டோ ஓட்டுநர் வண்டியை சாலையோரத்தில் நிறுத்திவிட்டு சென்றுள்ளார். அப்போது...