Saturday, February 12, 2011

யாஸின் மாலிக் மீது செருப்பை வீசிய பா.ஜ.க குண்டர்கள்

அஜ்மீர்,பிப்.12:அஜ்மீர் தர்காவிற்கு வருகைத்தந்த ஜம்மு கஷ்மீர் விடுதலை முன்னணியின் தலைவர் யாஸின் மாலிக் மீது பா.ஜ.கவைச் சார்ந்த குண்டர்கள் செருப்பை வீசியுள்ளனர்.

கஞ்ச் பகுதியில் ஹோட்டலின் மூன்றாவது மாடியில் நின்றுக் கொண்டிருந்த யாஸின் மாலிக்கை நோக்கி வீசப்பட்ட செருப்பு அவர் மீது படவில்லை. மாலிக்கின் வருகையையொட்டி பா.ஜ.கவினர் ஏற்பாடுச் செய்த போராட்டத்திற்கிடையேதான் இந்த செருப்பு வீச்சு சம்பவம் நிகழ்ந்துள்ளது.

பா.ஜ.க எம்.எல்.ஏ வாசுதேவ் தேவ்னானியின் தலைமையிலான கும்பல் ஹோட்டலின் முன்னால் யாஸின் மாலிக்கின் உருவப் பொம்மையை தீவைத்துக் கொளுத்தினர். மாலிக் உடனடியாக அஜ்மீரிலிருந்து வெளியேற வேண்டுமென அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

கஷ்மீர் லால்சவுக்கில் பா.ஜ.கவினரை கொடியேற்ற அனுமதிக்காத சூழலில் யாஸின் மாலிக் போன்றவர்களை நாட்டில் சுதந்திரமாக நடமாட அனுமதிக்க முடியாது என இந்திய தேசத்தை குத்தகைக்கு எடுத்துள்ளதைப் போல் பா.ஜ.கவின் தேவ்னானி தெரிவிக்கிறார்.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்


1 comment:

  1. THANKS TO ADHIRAI THUNDER CREATORS. HAPPY TO SEE A LOT INFORMATIONS TO THE PEOPLEBY U. A WONDERFUL WORK BY U FOR THIS WEBSITE. GO AHEAD WITH UR WORKS WITH CONFIDENCE. SURE WE'LL SUPPORT U EVER. BY, IQBAL-CAMPUS FRONT OF INDIA,CHENNAI. TAMILNADU.

    ReplyDelete