Monday, February 21, 2011

லிபியா:அரசு தொலைக்காட்சி மையத்தில் புரட்சியாளர்கள் - அரசுக் கட்டிடத்திற்கு தீவைப்பு

திரிபோலி,பிப்.21:பெங்காசியில் துவங்கிய மக்கள் எழுச்சி லிபியாவின் திரிபோலி உள்ளிட்ட இதர நகரங்களுக்கும் பரவியுள்ளது.

அரசு தொலைக்காட்சி அலுவலகத்திற்குள் புரட்சியாளர்கள் உள்ளே நுழைந்தனர். லிபிய அரசின் கட்டிடம் மற்றும் போலீஸ் நிலையங்கள் தீவைத்துக் கொளுத்தப்பட்டன.

அல்ஜமாஹிரிய்யாவின் இரண்டு தொலைக்காட்சி நிலையங்கள் மற்றும் அல்ஸபாபிய்யா ரேடியோ நிலையம் ஆகியன தாக்குதலுக்கு உள்ளானதாக எ.எஃப்.பி தெரிவிக்கிறது.

சர்வதேச மனித உரிமை அமைப்பான ஆம்னஸ்டி அமைதியான முறையில் போராடும் மக்களின் மீது நடத்தப்படும் தாக்குதலை உடனடியாக நிறுத்துமாறு லிபிய அரசை கேட்டுக்கொண்டுள்ளது.

0 comments:

Post a Comment