Thursday, February 24, 2011

சோமாலியாவில் 36 பேர் படுகொலை

மொகாதிஷு,பிப்.24:சோமாலியாவின் தலைநகரான மொகாதிஷுவில் ஆப்பிரிக்க யூனியன் படையும், போராளி இயக்கமான அல் ஷபாபும் மோதிக் கொண்டதில் 36 கொல்லப்பட்டனர். கொல்லப்பட்டவர்களில் 36 பேர் ராணுவத்தினராவர்.

பெர்முடா, ஹல்வாதிக் ஆகிய மாவட்டங்களில் நடந்த மோதல்களில் ராணுவத்தினர் கொல்லப்பட்டுள்ளனர்.

தெற்கு மொகாதிஷுவின் பகரா சந்தையில் சோமாலிய ராணுவம் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் ஏழு அல்ஷபாப் போராளிகள் கொல்லப்பட்டுள்ளனர். இரு பிரிவினரும் நடத்திய குண்டுவீச்சுத் தாக்குதலில் 12 அப்பாவி மக்களும் கொல்லப்பட்டுள்ளனர்.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

0 comments:

Post a Comment