Thursday, February 10, 2011

ஆசிரியை தாக்கிய மாணவன் அரசியல் செல்வாக்கில் விடுதலை!

யாழ் ஆனைக்கோட்டை பெரியபுலம் ம.வி ஆசிரியை ஒருவர் நேற்று மாணவன் ஒருவனால் கடுமையாயாக தாக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.தலையிலும் முகத்திலும் காயங்களுக்கு உள்ளான ஆசிரியை சிகிச்சையின் பின் வீடு திரும்பியுள்ளார். 

இது பற்றி மேலும் தெரியவருவ்வதாவது,

பாடசாலையில் இடம்பெற்ற சிரமதானப் பணியின் போது அப்பணியினைச் செய்யாமல் இருந்த மாணவனை நோக்கி, மேற்பார்வை செய்து கொண்டிருந்த இந்த ஆசிரியை எதற்காக சும்மா இருக்கின்றாய் பணியினை செய் என கூறியவேளை, அங்கு இருவருக்கும் ஏற்பட்ட வாய்த்தர்க்கத்தின் போது மாணவன் ஆசிரியையை தாக்கியதாக பாடசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

ஆசிரியையை தாக்கிய மாணவரைக் பொலிஸார் கைது செய்த போதும் அவர் அரசியற் செல்வாக்கின் பின்னணியில் விடுவிக்கப்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன. 

இதேவேளை இந்த மாணவருக்கு எதிராக யாழ் கல்வித் திணைக்கள அதிகாரிகள் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க முற்பட்டு உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

0 comments:

Post a Comment