Thursday, February 24, 2011

4 வயது குழந்தையை அடித்த ஐஏஎஸ் அதிகாரி!!!

சண்டீகர், பிப்.23- பஞ்சாபில் பொது இடத்தில் 4 வயது குழந்தையை அறைந்த பெண் ஐஏஎஸ் அதிகாரி ஒருவர் மீது குழந்தைகள் உரிமை ஆணையத்தில் புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது. கரீமா என்னும் 4 வயது குழந்தை சண்டீகரில் உள்ள பிரபல பள்ளி ஒன்றில் நர்சரி பிரிவில் படித்து வருகிறார். சமீபத்தில், பள்ளி முடிந்து அக்குழந்தை ஆட்டோவில் வீடு திரும்பிக் கொண்டிருந்தாள். வழியில் வேறொரு குழந்தையை அவரது வீட்டில் விடுவதற்காக ஆட்டோ ஓட்டுநர் வண்டியை சாலையோரத்தில் நிறுத்திவிட்டு சென்றுள்ளார்.

அப்போது ஆட்டோவில் அமர்ந்திருந்த கரீமா, கியர் கம்பியை இழுத்ததால் ஆட்டோ பின்புறம் வந்த காரின் கதவில் இடித்ததாக கூறப்படுகிறது. அந்த காரில் சுஜாதா தாஸ் என்னும் பெண் ஐஏஎஸ் அதிகாரி இருந்தார். தனது காரில் கோடு விழுந்ததால் கோபமடைந்த அவர் காரை விட்டு இறங்கி வந்து கரீமாவின் கன்னத்தில் அறைந்துள்ளார். தகவல் அறிந்த கரீமாவின் தந்தை போலீஸாரிடம் புகார் அளிக்கச் சென்றார். ஆனால், அவரிடம் ஐஏஎஸ் அதிகாரி
சுஜாதா தாஸ் தரப்பில் சமாதானம் பேசப்பட்டது. மேலும், குழந்தையின் கன்னத்தில்
அறைந்ததற்காக அவர் மன்னிப்பும் கேட்டுக்கொண்டார்.

இதனிடையே, இச்சம்பவம் தொடர்பாக சண்டீகரைச் சேர்ந்த தொண்டு நிறுவனம் ஒன்று அளித்த மனுவின் அடிப்படையில் ஐஏஎஸ் அதிகாரி மீது தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்புக்கான ஆணையத்தில் புகார் பதிவு செய்யப்பட்டது. "ஒரு அரசு ஊழியர் இத்தகைய செயலில் ஈடுபட்டிருக்கக் கூடாது. இது நடத்தை விதிமீறல் என்பது தெளிவாகிறது. இச்சம்பவம் மீது நாங்கள் உரிய நடவடிக்கை எடுப்போம். இதுதொடர்பாக பஞ்சாப் அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளோம். அதன் பதில் கிடைத்த பின்னர் அடுத்த நடவடிக்கை குறித்து ஆராயப்படும்." என்று தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்புக்கான ஆணையத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

சிந்திக்கவும்: இவர் எப்படி? ஐ.எ.எஸ். அதிகாரி ஆனார் என்ற சந்தேகம் வருகிறது. தகுதி இல்லாதவர்கள் எல்லாம் வட இந்தியாவில் இருந்து ஐ.எ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகளாக வருகிறார்கள் என்ற குற்றச்சாட்டை இது நிருபிப்பதாக அமைந்துள்ளது. பள்ளிகளில் ஆசிரியர்கள் குழந்தைகளை அடிக்க கூடாது என்ற சட்டம் நடை முறையில் இருக்கும் போது, ஒரு ஐ.எ.எஸ். அதிகாரி அதுவும் 4 வயது குழந்தையின் கன்னத்தில் அடித்திருப்பது இவர்களது தேர்வு முறையை சரியில்லை என்பதையே காட்டுகிறது. ஒன்றும் அறியாத 4 வயது பட்சிளம் குழந்தையின் கன்னத்தில் அடிப்பது என்பதை சாதாரண அறிவு உள்ள ஒருவர் கூட செய்யமாட்டார். அப்படி இருக்க இவர் எல்லாம் ஐ.எ.எஸ். அதிகாரியாக இருந்து ஒரு மாவட்டத்தை எப்படி நீதியோடு பரிபாலம் செய்யப்போகிறா.

0 comments:

Post a Comment